திருமாவேலன்:
"நான் உங்களிடம் ரகசியமாய் ஒன்று கேட்கலாமா?" என்றார் அந்த தொழிலதிபர். "வெளிப்படையாகவே கேட்கலாம்" என்றேன்.
"இப்போது அரசியல் காற்று திசைமாறி அடிக்கத் தொடங்கிவிட்டதா?" என்றார்.
நரேந்திரமோடியின் செல்வாக்கு சரிகிறதா என்பதே அவரது கேள்வி. " நான் அப்படி நினைக்கவில்லை" என்றேன்.
- இப்படிச் சொல்லி தனது கட்டுரையைத் தொடங்கும் பத்திரிக்கையாளர் சேகர் குப்தா இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் இழி நிலையைப்
பட்டியல் போடுகிறார்.
1.கடந்த ஆறு ஆண்டுகளாக மொத்த உற்பத்தி மதிப்பு( ஜிடிபி) குறைந்துகொண்டே வருகிறது.
2. பணமதிப்பு நீக்கம் , பொது சரக்கு சேவை வரி என்ற இரண்டு பேரிடிகள் பொருளாதாரத்தைத் தாக்கியுள்ளன.
3 வேலையிழப்பும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது. ஊதியமும் உயரவில்லை.
4. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல சிறுதொழில், வியாபாரத்துக்கெல்லாம் பொது சரக்கு சேவை வரி விதித்தனர்.
5. அரசு எதிர்பார்த்தபடி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை.ஜிடிபி வளர்ச்சி குறையும் என்று ரிசர்வ் வங்கியும் சொன்னது.
6.கம்பெனி செக்ரட்டரிகள் எனப்படும் நிறுவனச் செயலாளர்கள் கூட்டிய கூட்டத்தில் பேசிய பிரதமர் முகத்தில்
கவலை ரேகைகள் தெரிந்தன.
7.தேவையில்லை என்று தானே கலைத்த பொருளாதார ஆலோசகர் குழுவை மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறார் மோடி.
8.ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் படித்த மேதாவிகளைச் சாடிவந்த மோடி இப்போது, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுர்ஜித் பல்லாவை ஆலோசகராக சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
9. தசரா பண்டிகையையொட்டி கூட்டத்தில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, வர்த்தகர்களின் சிரமம் , பொருளாதாரத் துயரங்களைப் பட்டியலிட்டுள்ளார்.பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஆர் எஸ் எஸ் இப்படி கவலைப்படுவது வழக்கமில்லை.
10. பிரதமர் மோடி சிறப்பாக பேசி வருகிறார். நாடு நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் பேச்சுத்திறமை மட்டும் கரை சேர்த்துவிடாது.
- இவ்வளவுக்கு இடையிலும் பாஜகவுக்கு நிம்மதி தருவது எதிர்க்கட்சியின் நிலைதான்.
1. மோடியின் செல்வாக்கு சரிந்துவிடவில்லை.
2 அதற்காக கூடிவிடவும் இல்லை.
3. மாறுதல் இல்லாமல் இப்படியே இருந்துவிடாது!
- சேகர் குப்தா
தி பிரிண்ட் முதன்மை ஆசிரியர்
கட்டுரை தலைப்பு: வாடைக் காற்றில் ஏதோ மாற்றம் தெரிகிறது.
நன்றி - தமிழ் இந்து
No comments:
Post a Comment