Sunday, 29 October 2017

வாசிப்பு

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 2⃣8⃣

*நூலின் பெயர்:* தேசாந்திரி
*நூல் ஆசிரியர் :* எஸ்.ராமகிருஷ்ணண்

*எஸ்.ரா என அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணண் இன்று தமிழகத்தில் முண்ணணி எழுத்தாளர் மட்டுமல்ல பலவகை எழுத்துக்கு முன் உதாரணமாகவும் இருப்பவர்...*

*இந்த நூல் எஸ் ரா அவர்களின் பயணக்குறிப்பு நூல் என்றே சொல்லலாம்...*

*பயணம் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புண்டு.. ஆனால் ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையை கற்க முடியும் என்று நிரூபிக்கிறார் எஸ் ரா...*

*தான் சென்ற இடங்கள் தொடர்பான பல வரலாற்றுக்குறிப்புகளை, அந்த இடங்களில் தான் அடைந்த உணர்வுகளை வார்த்தைகளாக செதுக்குவதில் எஸ் ரா வின் எழுதுகோல் தனி அம்சம் கொண்டதாக இருக்கிறது..*

*41 தலைப்புகளில்..*

*நல்லதங்காள் கிணறு பார்க்க போன பயணத்தை விவரிக்கையில் கிணறுகள் பற்றி ...*

*கஜிராகோ செல்ல சென்ற பயணத்தில் சத்னாவில் குளிர் பற்றி எழுதியது..*

*கயத்தாறு பார்க்க போன பயணத்தில் வரலாற்று நினைவுகள் பற்றி எழுதும்போது...*

*பழனிக்கு சென்ற பயணத்தில் குதிரை வண்டிகளை ஆச்சர்யமாக எழுதுவதோடு பழனி அடிவார வாழ்க்கையை எழுதும்போது..*

*சென்னையில் உள்ள ஆர்மீனியன் தேவாலயம் பற்றி எழுதும்போது தேவாலயங்கள் பற்றி எழுதும்போது..*

*நம்மை எழுத்துக்களால் நெகிழ வைக்கிறார் எஸ் ரா..*

*மலைகள், ஆறுகள், அருவிகள், சாரநாத் ஸ்தூபி, சமண படுக்கைகள் சரசுவதி மகால் நூலகம் போன்றவற்றையும் தன் எழுத்து ஓவியங்களால் வரைகிறார் எஸ் ரா...*

*வாசியுங்கள்..*

*பயணத்தின் மகத்துவம் அறியுங்கள்...*

*பக்கம்:*272
*விலை:* ரூ 160
*வெளியீடு:* விகடன் பிரசுரம்

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

No comments:

Post a Comment