*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 2⃣8⃣
*நூலின் பெயர்:* தேசாந்திரி
*நூல் ஆசிரியர் :* எஸ்.ராமகிருஷ்ணண்
*எஸ்.ரா என அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணண் இன்று தமிழகத்தில் முண்ணணி எழுத்தாளர் மட்டுமல்ல பலவகை எழுத்துக்கு முன் உதாரணமாகவும் இருப்பவர்...*
*இந்த நூல் எஸ் ரா அவர்களின் பயணக்குறிப்பு நூல் என்றே சொல்லலாம்...*
*பயணம் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புண்டு.. ஆனால் ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையை கற்க முடியும் என்று நிரூபிக்கிறார் எஸ் ரா...*
*தான் சென்ற இடங்கள் தொடர்பான பல வரலாற்றுக்குறிப்புகளை, அந்த இடங்களில் தான் அடைந்த உணர்வுகளை வார்த்தைகளாக செதுக்குவதில் எஸ் ரா வின் எழுதுகோல் தனி அம்சம் கொண்டதாக இருக்கிறது..*
*41 தலைப்புகளில்..*
*நல்லதங்காள் கிணறு பார்க்க போன பயணத்தை விவரிக்கையில் கிணறுகள் பற்றி ...*
*கஜிராகோ செல்ல சென்ற பயணத்தில் சத்னாவில் குளிர் பற்றி எழுதியது..*
*கயத்தாறு பார்க்க போன பயணத்தில் வரலாற்று நினைவுகள் பற்றி எழுதும்போது...*
*பழனிக்கு சென்ற பயணத்தில் குதிரை வண்டிகளை ஆச்சர்யமாக எழுதுவதோடு பழனி அடிவார வாழ்க்கையை எழுதும்போது..*
*சென்னையில் உள்ள ஆர்மீனியன் தேவாலயம் பற்றி எழுதும்போது தேவாலயங்கள் பற்றி எழுதும்போது..*
*நம்மை எழுத்துக்களால் நெகிழ வைக்கிறார் எஸ் ரா..*
*மலைகள், ஆறுகள், அருவிகள், சாரநாத் ஸ்தூபி, சமண படுக்கைகள் சரசுவதி மகால் நூலகம் போன்றவற்றையும் தன் எழுத்து ஓவியங்களால் வரைகிறார் எஸ் ரா...*
*வாசியுங்கள்..*
*பயணத்தின் மகத்துவம் அறியுங்கள்...*
*பக்கம்:*272
*விலை:* ரூ 160
*வெளியீடு:* விகடன் பிரசுரம்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment