எல்லோரும் மனிதர்களே...
நம்மைச் சுற்றி உறவுகளும் நட்பும் சூழ்ந்திருந்தாலும் ஏதோவொரு வகையில் எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க முடிவதில்லை. அன்புக்காக ஏங்கும் ஜீவன்களே இங்கே அடுத்தவருக்கும் நிபந்தனையின்றி அன்பை வாரி வழங்கவும் செய்கிறார்கள். எந்த நிமிடத்திலும் ஒரு சிறிய டெங்கு கொசுவால் வீழ்ந்துவிட நேரலாம். ஒரு கடற்கரைப் பயணத்தில் பேரலை ஒன்று விழுங்கிவிட்டுப் போகலாம். பேரிடரோ பெருந்துயரோ இந்த வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நம் அனுமதியில்லாமல் கதவைத் தட்டலாம்.
இருக்கும் சிறிய வாழ்வில் அன்பைப் பகிர்ந்து கொள்ள நிபந்தனை இடுவதெல்லாம் மனித மூளையின் உள் அழுக்கே அன்றி வேறென்ன இருக்க முடியும்.
கரைதொடும் அலைக்கு எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியாதோ அப்படித்தான் அன்பைப் பெறவும் கொடுக்கவும் தடைகள் விதித்துக் கொண்டால் அது மூளைக்கானதே அன்றி மனதுக்கானதல்ல.
மனிதர்கள் மகத்தானவர்கள்!
அன்பால் ஆள்வோம்!
#பொன் விமலா
No comments:
Post a Comment