Sunday, 29 October 2017

@மணிகண்டபிரபு

எல்லாப் போர்களிலும் பயன்படுத்தப்படும் முதல் ஆயுதம் வாய்
-மருதன்

#
வாழ்க்கையில் தோல்வியுற்றவனுக்கு
தன்னைப் பற்றியே பேசிக் கொள்வதைப் போல வேறு இன்பம் உண்டா?
-க.நா.சு

#
பெரிதினும் பெரிது
ஒருவரை
சிரிக்க வைப்பது

சிரிக்காத பெண்ணும்
செழிக்காத மண்ணும்
லட்சணமற்றவை
எப்போதுமே

சிரமப்பட்டாவது
சிரிக்க வேண்டும்
நரி சிரிக்காது

நிலைப்படியில்
கண்ணைப்பார் சிரி
முடியாத பட்சத்தில்
நாட்டைப் பார்
வந்துவிடும் சிரிப்பு

-யுகபாரதி

#world_smile_day

#*இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்*
*உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா*
*வீடு இங்கே தான் இருக்கிறதாம்*
*இதெல்லாம் ஒரு காரணமா?*

   -முகுந்த் நாகராஜ்

No comments:

Post a Comment