Monday, 10 October 2016

கவிதை

வழி தவறச் செய்யாது
கொஞ்சம் தள்ளிநில் வெளிச்சமே
என்னை என் வீட்டில் சேர்க்க
என் காலுக்குத் தெரியும்
என்னை என் குழியில் தள்ள
என் கண்ணுக்குத் தெரியும்.
-குஞ்நுண்ணி

*வாழ மனமில்லை
சாக இடமில்லை
வானில் மேகமில்லை
ஆனால்
வெயிலும் மடிக்கவில்லை
கந்தைக் குடைத் துணியெனக்
கிடக்கும்
தன்னினமொன்றைச்
சுற்றிச் சுற்றி வருமிக்
கறுப்பின் ஓலம் போல்
செத்துக் கிடக்கும்
சுசீலாவை
வட்டமிட்டு
வட்டமிட்டு
வட்டமிட்டு.....
-நகுலன்

*இருக்கிறது இது முடிவு சார்ந்த கூற்று
இருக்கிறது இது எனது முதலாவது முடிவு சார்ந்த கூற்று
இருக்கிறது ஒருமணல் துகள் இருக்கிறது; அதன் மர்மமோ, கற்பனையின் முழுசக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது.
-ஜே.கிருஷ்ணமூர்த்தி
(மொழிபெயர்ப்பு: பிரமிள்)

No comments:

Post a Comment