Thursday, 6 October 2016

கநாசு

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான சக்திகள், நவநவமான உணர்ச்சிகள் வினாடிக்கு வினாடி மூளுகின்றன - மூண்டு மூண்டுபோராடுகின்றன.
இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு வினாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த வினாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு அவன்மீது ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. இந்தச் சக்தியினுடைய ஆதிக்கம் நீடிப்பதும் ஒரே வினாடிதான்.
இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் மனிதன் தன் உள்ளத்திலே ஒரு லக்ஷ்யத்தை, ஒரு தெய்வத்தை கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டானானால் அவனை பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும்.
-"பொய்த்தேவு" நாவலில் க.நா.சுப்பிரமணியம்

No comments:

Post a Comment