*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*
*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*
இன்னும் 5⃣6⃣ நாட்களே உள்ளன ...
அறிமுக நூல் : 4⃣5⃣
இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?
*நூலின் பெயர் :* சில இலக்கிய ஆளுமைகள்
ஆசிரியர் : வெங்கட் சுவாமிநாதன்
நீங்கள் எந்த ஆளுமையை பார்த்து அதிகம் பிரமித்து இருக்கிறீர்கள் ?
சினிமா..?
அரசியல் ?
விளையாட்டு?
இலக்கியம் ?
இதில் இலக்கிய ஆளுமை என்று கை உயர்த்தினால் நீங்கள் பெருமைக்கு உரியவர்...
இப்படி பெருமைக்குரிய இலக்கியத்தில் உள்ள சில ஆளுமைகள் பற்றி கூறுகிறார் வெங்கட் சுவாமிநாதன்...
வெங்கட் சுவாமிநாதன்....
தமிழகத்தில் உள்ள இலக்கிய விமர்சகர்களில் முக்கியமானவர்..
அக்கரகாரத்தில் கவிதை என்ற நூலின் ஆசிரியர்...
இலக்கிய உலகில் தடம் பதித்த சில ஆளுமைகள் பற்றி தனக்கே உரிய விமர்சன பாணியில் கூறுகிறார் ஆசிரியர் ...
கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி.ஆர்.இராஜமய்யார் துவங்கி,
உ.வே.சா, திரு வி.க. ந.பிச்சைமூர்த்தி, புதுமைபித்தன், க.நா.சுப்பிரமணியன், மௌனி, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் , கோமல் சுவாமிநாதன், நாஞ்சில் நாடன் என 17 இலக்கிய ஆளுமைகள்...
இந்த இலக்கிய ஆளுமைகளின் உலகம் இயங்கிய விதம், அவர்களின் இலக்கிய இயங்கியல் பற்றி பேசுகிறது இந்த நூல்..
வாசியுங்கள்..
இந்த இலக்கிய ஆளுமைகள் உங்களையும் வசீகரிக்கும் !
வெளியீடு : காவ்யா வெளியீடு
விலை : .ரூபாய் 125
பக்கங்கள் : 289
வாசிப்பை சுவாசமாக்குவோம் !
*நம்பிக்கையுடன்*
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment