என்னை பல பேர் கேட்கும் கேள்வி உங்களுக்கு ஏன் சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கவில்லை என்று. அதற்கு நான் அளிக்கும் பதில் சந்தர்பத்தைப் பொறுத்து வேறுபடும். 'அதற்கு இன்னும் எனக்கு வயசாகவில்லை' என்பது நகைச்சுவையான பதில். சாகித்ய அகாதமி பரிந்துரைக்குழு என் நூல்களைப் படிப்பதில்லை, படித்தாலும் கொடுப்பதில்லை என்பதே சரியான பதில்.
அண்மையில் ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தேன். மணப்பெண் அமெரிக்காவில் பி.எச்.டி படிக்கிறார். என்னைப் பார்த்ததும் திருமணத்தை மறந்து, நீங்கள் எழுதிய "எங்கே என் விஜய்" கதையை என்னால் மறக்க முடியாது, எந்த தொகுப்பில் இருக்கிறது? மீண்டும் படிக்க வேண்டும் என்று எனக்கே மறந்துவிட்ட ஒரு கதையை கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி மணமேடையிலோ, மெரினாவிலோ, ஸ்ரீரங்கத்திலோ, அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, நேரிலோ, மின் கடிதத்திலோ, தபாலிலோ, என் எழுத்துக்களைப் பாராட்டி முப்பது வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதைகளை, கட்டுரைகளை, ஏன் அவைகளில் ஒரு வரியை ஞாபகம் வைத்துக்கொண்டு எனக்குக் கொடுக்கும் கைகுலுக்கல் தான் உண்மையான விருது.
- சுஜாதா (எழுத்தும் வாழ்க்கையும்)
@ புத்தக பிட்ஸ்
www.iniyavaipakirvom.com
No comments:
Post a Comment