Thursday, 27 October 2016

வெண்மதியோன்

💥"எதையாவதை கிறுக்கு அல்லது எதையாவதை படித்து கிழி!" இது தான் என் ஏகதேச கொள்கையாக இருந்து வந்தது. ஆனால்,இப்போது அதனின்று  வெகுதொலைவில் நான் தொலைந்து விட்டதானதொரு உணர்வு!

💥 எங்கே வந்துள்ளேன் என்பது தெரியவில்லை ஆனால் என் ஆத்மார்த்தமான புத்தக உறவுகளின் உறைவிடத்தை விட்டு வெகு தூரம் விலகி இருக்கிறேன் என்பதை என்னை சுற்றியுள்ள புதிய சூழல் உணர்த்துகிறது.

💥 என்னவெல்லாம் எனக்கு
பிடிக்குமோ, அந்த விஷயங்களில் என்னை முழுமையாக ஈடுபடுத்த முடியாத நிலை.

💥எனக்கு பிடித்த வாசிப்பை சில நாட்கள் தொடர இயலாத இந்த நாட்கள், ஏன் உண்டானது?

"இது என்னை தடுத்தது" என எதையும் மையப்படுத்தி அடையாளம் காணா முடியாத அளவிற்கு என்னை  சுற்றியுள்ள நிகழ்வுகள் என்னை மழுங்கச் செய்துள்ளதாகவே என் உள்மனதின் அடியாழத்தில் ஒரு புரிதல் இருக்கிறது.

💥அதற்காக எதன்மேலும் கோபம் வரவில்லை; பிரிதொன்றின் மீது புதியதொரு ஈர்ப்பும் வந்து விடவில்லை!

காலம் என்னும் மாயநதி சலசலப்பில்லாமல் என்னை சத்தமிடாமல் , அதன் போக்கில் நகர்த்துகிறது. நானும் என் சுய அலைகளை, அடக்கிக்கொண்டே அடங்கிக் கொண்டு கடக்கிறேன்.

💥ஒற்றைக்காலில் நின்று நேசித்த வாசிப்பு நொடிகளை மறக்கவும் முடியவில்லை. ஒன்று மட்டும் புரிகிறது ஆ
,எனக்கான ஏதோ ஒன்று எங்கேயோ நின்றுக்கொண்டு பெருங்காதலோடு அழைக்கிறது பழங்காலத்து புளியமரத்து பேயாக!!

-வெண்மதியோன்!

No comments:

Post a Comment