Saturday, 1 October 2016

கண்ணதாசன் இரங்கற்பா

காவியத் தாயின் இளைய மகன்

இரங்கற்பா

எத்தனையோ பேர்களுக்கு இரங்கற்பா எழுதிய கவிஞன், மறைவதற்கு 12 ஆண்டுகட்கு முன்னர் தனக்குத்தானே எழுதிக் கொண்ட இரங்கற்பா.

தேனார் செந்தமிழமுதைத்
திகட்டாமல் செய்தவன்
மெய் தீயில் வேக
போனாற் போகட்டுமெனப்
பொழிந்த திரு
வாய் தீயிற் புகைந்து போக
மானார் தம் முத்தமொடும்
மதுக் கோப்பை
மாந்தியவன் மறைந்து போக
தானே எந் தமிழினிமேல்
தடம் பார்த்துப்
போகுமிடம் தனிமைதானே!
கூற்றுவன் தன் அழைப்பிதழைக்
கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
நீ எரிவதிலும்
அவன் பாட்டை
எழுந்து பாடு

– கண்ணதாசன்

No comments:

Post a Comment