*கனிமொழி.ஜி*
💥உண்மையிலேயே துக்கம் அளிக்கக்கூடிய ஒருவரின் இறப்புக்குச் செல்லும்போது அழுகைக்குப் பின்னே திடீரென்று மனதுக்குள் ஒரு சினிமாப் பாட்டு ஒலிக்கிறது..
.
💥தெரியாமல் செய்த பணிப்பிழையின் போது ஏற்படும் துவக்கநிலை பதற்றத்தின்போது இதற்காக மிகப்பெரிய தண்டனை கிடைக்கப்போவதாகவும், அப்படி வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையும் மனதை நிதானப்படுத்துகிறது…
.
💥சிரத்தையோடு உடுத்திக்கொண்ட அடுத்த நிமிடம் இதெல்லாம் வெளியில் எந்த புத்துணர்வையும் அளிக்கப்போவதில்லை என்ற மத்திம மனநிலை வருகிறது…
.
💥ஒருவரின் அன்பால் நெகிழும் மனது அடுத்த சந்திப்பில் அவரை எதிர்கொள்ள ஆயாசமாக இருக்கிறது..
..
💥எனக்கெதிரான சின்ன எதிர்வினையாற்றியவரை பெரிய வைரியாக நினைத்துக்கொண்டு மிகக்கொஞ்ச நாட்களிலேயே அவரின் குறைகள் குறித்து அவர் மீது இரக்கம் சுரக்கிறது.
..
💥வேண்டி எல்லாரையும் ஒருங்கிணைத்து நிறைவான சூழலில் தான் மட்டும் யாருமல்லாத இடத்துக்கு போய்விடத் தோன்றுகிறது…
..
💥சுயம் குறித்த மதிப்பீடுகளும், நம்பிக்கைகளும்,
எப்போதும் அதிலிருந்து எதிரில் நகர்ந்து விட முயலும் அந்நியமனநிலையும்
எளிமையான கிறுக்குத்தனங்களால் ஆனவளாய் இருப்பதில் எனக்கு,
என் மீது எந்த அதிருப்தியுமில்லை…
..
( ஆல்பெர் காம்யு –
No comments:
Post a Comment