Saturday, 8 October 2016

நூல் அறிமுகம்

*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*

*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*

இன்னும் 5⃣4⃣நாட்களே உள்ளன ...

அறிமுக நூல் : 4⃣7⃣

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* உடைந்த நிலாக்கள்

ஆசிரியர் : பா.விஜய்

கி.பி., கி.மு., க்களில் நடந்த அல்லது நடந்ததாக கூறப்படும் காதல்கதைகளை அழகிய கவிதை வடிவில் கூறுகிறது இந்த நூல்...

பாக்யா வார இதழில் 30 வாரங்கள் தொடராக வந்து காதல் விதைகளை தமிழர்களின் இதயங்களில் விதைத்தது இந்த நூல்...

17 காதல் கதைகள்..

அனைத்தும் உலகப்புகழ்பெற்ற காதல்கதைகள்...

தாஜ்மகாலின் மாதிரி ஓவியத்தை வரைய கற்பனை இல்லாமல் தவித்த *ஹரிணி*- தன் கணவன் மேல் கொண்ட காதலால் ஓவியம் சிறப்பாக அமைய தற்கொலை செய்துகொண்ட *திலோத்தி*யின் காதல்..

*பீச்தான்* மலையை உளிகொண்டு உடைத்தால்தான் காதலி *ஷிரின்* கிடைப்பாள் என்ற நிபந்தனையில் மலை உடைக்க புறப்பட்ட *பர்கத்* தன் காதலி இறந்தாள் என அறிந்தவுடன் உளியை தன் நெஞ்சில் பாய்த்துக்கொண்ட காதல் கதை..

இந்திய இளவரசி *மிருதுளா* மேல் கொண்ட காதலால் இந்தியா மீது 18 முறை படையெடுத்து கடைசி வரை மிருதுளாவை அடையாமல் 53 வயதில் அவள் நினைவாகவே மரித்துபோன *கஜினி முகமதுவி*ன் காதல்...

குலோத்துங்க சோழன் மகள் *அமராவதி* தன் காதலுக்காக *அம்பிகாவதி*யிடம் அழ, அம்பிகாவதி தன் காதலுக்காக தந்தை *கம்பனிடம்* அழ, கம்பன் என்ற கவிசக்கரவர்த்தி தன் மகனுக்காக குலோத்துங்கனிடம் அழ முடியாமல் அம்பிகாவதியை கொன்ற கதை...

இப்படியாக 17 காதல் கதைகள்..

கதைகளே இத்தனை சுவையாக இருக்கும்போது அதை கவிதை நடையில் படிக்கும்போது...

வாசித்துப்பாருங்கள்...

தானும் காதலிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வும், காதலின் பொருளும் விளங்கும் !

வெளியீடு  : குமரன் பதிப்பகம்
விலை        : .ரூபாய் 100
பக்கங்கள் : 253

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

*நம்பிக்கையுடன்*
         ஸ்ரீதர்
🌹திண்டுக்கல்

No comments:

Post a Comment