நடக்கும் கால்களில்
வேகமும்
எதிர்ப்படுவோரின்
கரங்களிலோ
தோள்களிலோ
முட்டிக்கொண்டும்
கடக்கும் நபர்களின்
அசைவுகளிலும்
நகரும் பேருந்து
ஒலிப்பான்களின்
சத்தத்திலும்
பேருந்தினுள்ளே
ஒலிக்கும்
பண்பலையின் இரைச்சலிலும்
சத்தமின்றி
முட்டிமோதி
மௌனமாகிப் போகிறது
அழுக்குச் சேலை கட்டியிருக்கும்
அந்த யாசனைக்காரியின்
மடிக் குழந்தை
அழுகை
– இ . இளையபாரதி
No comments:
Post a Comment