கற்றதும் பெற்றதும்-25
*மணி
எனது இந்தியா
-எஸ்.ராமகிருஷ்ணன்
ஜுனியர் விகடன் புத்தகம் வாங்கியவுடன் முதன்முதலில் படிக்கும் தொடர் எனது இந்தியாதான்.ஒவ்வொரு வாரமும் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை,சாதாரணமாக தேசியகீதத்துக்கு அர்த்தம் என்னவாய் இருக்கும் என்பது போன்ற அறியாமையிலிருந்து உருவாகும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தொடராய் இருந்தது. வரலாறு என்றும் சுவாரஸ்யமானது.அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத்தவறிய உண்மைகளை நினைவுபடுத்தியது.
#காந்தி கொலைவழக்கு
சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை காந்தி கொலை வழக்கு. 1948ஆம் வருடம் மே 27-ம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. கைது செய்யப்பட்ட கோட்சே குற்றத்தை மறுக்கவும் இல்லை.ரகுநாத் நாயக் எனும் தோட்டக்காரர் தான் கோட்சேவை பிடித்துள்ளார்.கையிலிருந்த புல்வெட்டும் கருவியில் மூன்றுமுறை தாக்கியுள்ளார். வழக்கு விசாரணை நடந்த்ந் இடம் செங்கோட்டை மொகலாய மன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒருபகுதி.ஜூன் 24முதல் நவம்பர் 6வரை வழக்கு நடைபெற்றது.1949-பிப்ரவரி 10ம் தேதி 204 பக்கம் அடங்கிய தீர்ப்பு வெளியானது.நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்ம்சரண் முன்னுதாரணமான தீர்ப்பை எழுதினார்.நீதிவிசாரணையில் எவ்வித அரசியலும் இருக்ககூடாதெனவும் நேர்மையாக நடைபெற வேண்டும் எனவும் இவ்வழக்கு முன் உதாரணமாய் இன்றளவும் இருக்கிறது.
(இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள "காந்தி சுடப்பட்ட பின்" எனும் குமுதம் வெளியிட்ட முருகானந்தத்தின் புத்தகத்தைப் படிக்கவும்)
#மெக்காலே
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் IPC யையும்,இந்தியக்கல்வி முறையையும் உருவாக்கிய ஒரே மனிதர் மெக்காலே.1834ல் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவருக்கு 15குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓய்வுக்காக ஊட்டி செல்லவேண்டி பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு 11 நாட்கள்,4பேர் தூக்கிகொண்டு 400மைல்கள் சென்றார்களாம். அரபு மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடினார். ஆங்கிலத்தை புகுத்த பெரும் சிரத்தை எடுத்தார்.இதற்கென ஆசிரியர்களை இறக்குமதி செய்தார்.இப்படித்தான் இந்திய ஆங்கிலம் என்ற தனி வகை உருவானது.
மெக்காலேவின் திட்டப்படி உயர்தர பிராமணர்களுக்கு கற்பித்தால் கீழ்நோக்கி செல்லும் முறை போல கீழுள்ள அனைத்து சமூகத்தினருக்கு கற்றுக்கொடுப்பார்கள் என நினைத்தார்.ஆனால் அது அப்படியே மேல்தட்டினரிடம் மட்டும் தேங்கிவிட்டது.அவரின் எண்ணமெல்லாம் கம்பெனிக்கு குமாஸ்தா வேலை தர வேண்டும் என்பதாகவே எண்ணினார்.
#இந்திய வரைபடம்
இந்திய வரைபடத்தை பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யம் ஏற்படுவதாக எஸ்.ரா பதிவு செய்துள்ளார்.உண்மையில் வரைபடம் வரைவதென்பது மிகக்கடினமான பணி.இடங்களை, மலைகளை,ஆறுகளை தெரிந்தால்தான் வரையமுடியும். லாம்டன் என்பவர் வரைபடத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர். இப்பணிக்கு தியோடலைட் என்ற கருவி பயன்படுத்தப்பட்டது.
முக்கோண அடிப்படையில் மாயவளைவை வரைந்து, இடைப்பட்ட தூரத்தை கணக்கிட்டார்கள்.இத்திட்டம் முதலில் சென்னை பரங்கிமலையில் தான் துவங்கியது.200க்கும் மேற்பட்ட கூலிகள்,12யானை,,30குதிரை,42 ஒட்டகம் சுமைகளை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டது.லாம்டன் இறப்புக்குபின் ஜார்ஜ் எவரெஸ்ட் நியமிக்கப்பட்டார்.இமயமலையின் சில சிகரங்களை அளவிட்டார்.
அவரின் ஓய்வுக்குப்பின் ஆண்ட்ரு ஸ்காட்வாக் நியமிக்கப்பட்டு அவர்தான் எவரெஸ்ட் சிகரத்தை கண்டுபிடித்தார். அதற்கு தனக்கு முந்தைய சர்வேயர் எவரெஸ்டின் பெயரை சூட்டினார்.வங்காளி இளைஞன் ராதாநாத் சிக்தார் எனும் துடிப்புமிக்கவரின் உழைப்பும்,உறுதுணையாய் இருந்ததையும் பதிவு செய்யவில்லை என வேதனையுடன் எஸ்.ரா பதிவு செய்கிறார்.
#மருதுவின் மகனுக்கு நேர்ந்த கதி
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டவுடன் சின்ன மருதுவின் மகன் (15வயது நிரம்பிய) துரைசாமி உட்பட 72பேரை பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்.பின் மருதுவின் நலம்விரும்பி வேல்ஷ் அதிகாரியை 15வருடங்கழித்து துரைசாமி சந்தித்தார்.ஒடுங்கிய தேகத்துடன் பார்த்தவுடன் நம்ப முடியவில்லை என வருந்துயுள்ளார்.பின் இறுதுநாட்களில் சென்னை கொண்டுவரப்பட்டு,மதுரையில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக பதிவு செய்துள்ளார்.
சுதந்திரபோராட்டம் இப்படி பல வெளியே தெரியாத எண்ணிக்கையற்ற உயிர்த் தியாகத்தால் உருவானது.
#ஐஸ் ஹவுஸ்
சென்னை கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் தான் ஐஸ் ஹவுஸ் ஆக இருந்தது. அமெரிக்காவில் இயற்கையால் உருவான பனிக்கட்டிகளை வெட்டி எடுத்து பெரும் பணம் சம்பாதித்தார் ஃபிரடெரிக் டூடர். வைக்கோலில் சுற்றப்பட்டு ஓரளவு உருகாமல் கொண்டுவந்து சேர்த்தார்.மருத்துவர்களும் மிகவும் வசதியானவர்களும் மட்டுமே ஐஸ் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
#இந்தியாவை தனதாக்க முயன்ற ராபர்ட் க்ளைவ் இறுதியில் தற்கொலை செய்து கொண்ட கதை
#ஷாஜகானின் மகள்கள் குறித்த பதிவு
#உப்புச்சத்தியாகிரகம் ஏன் உருவானது, உப்பு குறித்த சுவையான பின்னணி
#வாஸ்கோடாகாமாவின் கடல்பயணம்.கைபர் போலன் கணவாய் குறித்த விபரங்கள்
#இந்திய பிரிவினையின் துயரங்கள்
#ஆஷ் கொலைவழக்கும், வாஞ்சிநாதன் குறித்த செய்திகளும், கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜெமினி நடித்த மாடசாமி அதன் பிறகு கப்பலில் கடல் கடந்து போய்விட்டதாக அவரின் மனைவி சொல்லிவந்தார். இறுதிவரை அவர் வரவே இல்லை.
#கொண்டாடுவோம்
இப்படிப்பட்ட இவர்களின் தியாகங்களினாலும் வீரமரணங்களினாலும் சுதந்திரம் கிடைத்துள்ளது.இன்றைக்கு நமக்கு கிடைக்காத சில சலுகையினாலும், வெறுப்பிலும் சுதந்திர தினத்தை தூற்றுவது எவ்வகையில் நியாயம். மாறிவரும் உலகில் இவர்கள் மறக்கப்படுவார்கள்.காரணம் நாம் வரலாற்றை படிப்பதில்லை.
இந்தியாவின் கடந்தகாலத்தை எளிதில் புறந்தள்ள முடியாது. நிகழ்காலத்தை புரிந்துகொள்வதற்கும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வரலாற்றை துணை கொள்வோம்
-தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment