Friday, 17 August 2018

சு.ரா

சுந்தர ராமசாமி பிறந்ததினம்
*மணி

இவர் எழுத்தின் வழியே காட்டிய அனுபவம் ஏராளம்.சிறுகதையில் தனி முத்திரை பதித்தவர்.ஒரு மாற்றுத்திறனாளி ஒரு அறையில் இருக்கும் அனுபவத்தை நுட்பமாய் தன் கதையில் பதிவு செய்தவர்.தோட்டியின் மகன் நாவல் மொழி பெயர்ப்பா மூலமா என சொல்லும் அளவிற்கு மொழிபெயர்ப்பிலும் தன் ஆளுமை செலுத்தியவர்.

பசுவய்யா எனும் பெயரில் கவிதைகளும் எழுதியவர்."கதவைத் திற காற்று வரட்டும்" இவரின் வரிகளே.
இவரின் கதைகளும் வரிகளும் தனி ஸ்டைல்..அவ்வகையில் என் மனம் கவர்ந்த நறுக்குகள்

#அன்று அதிகாலை சிறிது தூரல் இருந்ததால்,குளித்த பின் துவட்டிக் கொள்ளாதது போல் இருந்தது பூமி
-சுந்தரராமசாமி

#சவால் முன் ஒரே ஒரு தேர்வுதான் எப்போதும் இருக்கிறது. அதை நேரடியாக எதிர்கொள்வது.
கூச்சமின்றி எதிர்கொள்வது
-சுந்தரராமசாமி

#ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கலல்ல
பதுங்கல்

-சுந்தரராமசாமி

#அரசியல் என்பதே கோபத்தை,ஏமாற்றங்களை,வெறுப்புகளை ஒருமுகப்படுத்தி, ஒரே எதிரியை உருவகப்படுத்துவதுதான்!!!

-சுந்தரராமசாமி

நம் சிந்தனையில் ஒரு பெரும் மாற்றம் நிகழாத வரையிலும் நம்மைச் சுற்றி சுழலும் சமூகச்சக்திகளின் போக்குகளை நாம் மதிப்பிட முடியாது
-சுந்தரராமசாமி

#அறிவைத் தேடத்தேடச் செய்திகள் சார்ந்த சந்தேகங்கள் தீர்ந்து,அடிப்படை உண்மைகள் சார்ந்த சந்தேகங்கள் வலுப்பட்டுக் கொண்டே வருகின்றன
-சுந்தரராமசாமி

#எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே
எழுது
அதுவே அதன் ரகசியம்
-சுந்தரராமசாமி

#உன் நிறம் என்னைக் கவர்ந்தபின்தான்
உன் முகத்தைக்
கவனிக்கத் தொடங்கினேன்
-சுந்தரராமசாமி

#தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட சிலருக்கு ஒரு மானசீக எதிரி தேவையாக இருக்கிறது
-சுந்தர ராமசாமி

#நினைவின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்
-சுந்தர ராமசாமி

#எழுது
எவர் முகமும் பாராமல்
உன் மனம் பார்த்து,
உன் தாகம் தீர்க்க
நதியிலிருந்து நீரைக்
கையால் அள்ளுவது போல்
கண்டுபிடி
உன் மனமொழியை

-பசுவய்யா

-மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment