கற்றதும் பெற்றதும்-5
*மணி
"உண்மை ஒரு சோம்பேறி, தேடி கண்டுபிடிக்கும்வரை தூங்கி கொண்டிருக்கும்"
வரலாற்றை பள்ளிவயதில் படிக்கும்போது ஒரு இன்பம் இருக்கும்.தேர்வில் சுயமாய் எழுதும் தன்னம்பிக்கையை தருவது வரலாற்றுப்பாடங்களே!
வரலாற்றின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வனை படித்துவிட்டு வந்தியத்தேவனாய் பாவித்துக்கொண்டு குந்தவையை கற்பனை செய்துகொண்ட ஆண்கள் பலருண்டு.
அவ்வகையில் வரலாற்றை திரைபடமாய் பார்த்து மன்னர்களின் வீரத்தை சிலாகித்த கதையும் உண்டு.
அவ்வாறுதான் கட்டமொம்மு கூத்துவை தழுவி பி.ஆர்.பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் படம்.சமீபத்தில் டிஜிட்டலில் வந்தும் வசூலை வாரிக்குவித்தது.உண்மையிலேயே கட்டபொம்மனை படித்தபோது கொஞ்சம் தெரியாத செய்திகள் அதிகம் இருந்தது.அவை..
#கட்டமொம்மன்
1760ல் பிறந்த கட்டபொம்மு எனும் மூலப்பெயருடன் பிறந்தவருக்கு தம்பிகள் இருவர்.ஊமைத்துரை, செவத்தையா.இவர்கள் விஜயநகரப் பேரரசின்போது தமிழகம் வந்தவர்கள்.வீரதீரமிக்கவர் பொம்மு.தெலுங்கில் கெட்டி பொம்மு.காலப்போக்கில் கட்டபொம்மன் ஆனது.
#பாஞ்சாலங்குறிச்சி
அழகிய பாண்டியபுரத்து அருகாமையில் சாலிகுளத்தில் கட்டபொம்மன் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது "ஒரு முயல் ஏழு வேட்டைநாய்களை எதிர்த்து விரட்டியதை கண்டு அவ்விடத்தில் கோட்டை கட்டினார்.அதுவே பாஞ்சாலங்குறிச்சி.30 வயதில் அரியணை.
#கட்டபொம்மனும் ஜாக்சனும்
1792 நவாப் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தப்படி கப்பம் வசூலிக்கும் உரிமை கம்பெனியிடம் ஒப்படைத்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் மேலதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்.கம்பெனிக்கு கட்ட வேண்டிய பணத்தை காலம் தவறாது கட்டி வந்தவர்.வானம் பொய்த்ததால் விளைச்சல் குறைந்தது.இதனால் உரிய நேரத்தில் கப்பம் செலுத்த முடியாமல் போயிற்று.
ராமநாத மாவட்ட கலெக்டர் காலின் ஜாக்சன் கட்டபொம்மன் மீது படையெடுக்க ஏற்பாடு செய்தார். கம்பெனியோ கட்டபொம்மனை அழைத்து பேசி தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.இரண்டு வாரங்களில் தன்னை வந்து சந்திக்க கடிதம் எழுதி அனுப்பிவிட்டுகலெக்டர் நெல்லைக்கு சென்றுவிட்டார். இதை அறிந்த கட்டபொம்மன் ஜாக்சனை நேரில் சந்திக்க குற்றாலத்திற்கு சென்றார்.சந்திக்க ஜாக்சன் மறுத்துவிட்டார்.
இருப்பினும் தீர்வுகாண விரும்பி ஜாக்சனை சந்திக்க சொக்கம்பட்டி, சிவகிரி,சாத்தூர்,பேரையூர்,கமுது என பின் தொடர்ந்து சென்றார். எனினும் இதை மறுத்து 31ம் தேதி சந்திக்க ஜாக்சன் அனுமதி வழங்கினார்.
#அமளி
குறிப்பிட்ட நாளில் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையுடன் ராமலிங்க விலாசத்தில் ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன். பஞ்சத்தால் உரிய காலத்தில் கப்பம் கட்ட இயலவில்லை எனக்குஉறியதை கலெக்டர் மாறினார்.அதுமட்டுமல்ல இருவரையும் நிற்கவைத்து பேசினார் ஜாக்சன்.பின் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டபோது இருவரும் கோட்டைக்கு வெளியே வந்தனர். வெளியே நின்றிருந்த ஊமைத்துரையும் உதவ அங்கு நடந்த கலகலப்பில் க்ளார்க் கொல்லப்படுகிறார்.அமைச்சர் சிவசுப்பிரமனியை கைது செய்துவிடுகின்றனர்.இது பற்றி கம்பெனிக்கு கட்டபொம்மன்
விரிவாய் கடிதம் எழுதுகிறார். இதனை படித்த எட்வர்ட் க்ளைவ் பின்வரும் உத்தரவிடுகிறார்.
1)கட்டபொம்மன் சரணடையனும்.
2)நீதிவிசாரணை நடத்தப்படும்
3)ஜாக்சன் ப்ணியிடை நீக்கி, அமைச்சர் விடுதலை செய்யப்படுவார்.
"வில்லியம் ப்ரெளன் விசாரணை கமிசனில் ஜாக்சன் அலையவைத்தது,கடுமையாய் நடத்தியது என கூறி கட்டபொம்மனை நிரபராதி என தீர்பளித்தது.
#கம்பெனி விரோத நடவடிக்கை
கம்பெனியை நம்பினாலும் கம்பெனி அதிகாரத்தை நம்பதயாரில்லை என்பதால் மருதுவின் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமையில் இணைந்தார்.கட்டபொம்மனை களையெடுக்க மேஜர் பானர்மனை அனுப்பியது நிர்வாகம்.
பாஞ்சாலங்குறிச்சி போர்
1799ல் பாளையாங்கோட்டையில் வந்து சந்திக்க இறுதி முயற்சி செய்தார்.பின் படையெடுத்து கோட்டையை சுற்றினர்.ராமலிங்க முதலியாரை கம்பெனி தூது அனுப்பியது.மறுத்துவிட்டர்.பின் கோட்டையின் பலவீனத்தை புரிந்துகொண்டு ராமலிங்க முதலியார் தகவல்படி பீரங்கி கொண்டு தகர்த்தனர். ஊமைத்துரை வீரர்களின் போரினில் தளபதி காலின்ஸ் கொல்லப்பட்டார்.
பல்வேறு இடங்களுக்கு தப்பிச்சென்று இறுதியில் களப்பூர் காட்டில் பிடிபட்டார்.சிவசுப்புரமணிய பிள்ளை நாகலாபுரத்திலும், மூன்று நாள் கழித்து கட்டபொம்மன் கயத்தாறிலும் தூக்கிடலிடப்பட்டு கொல்லப்பட்டனர்.
#கட்டபொம்மன்
கட்டபொம்மன் இயல்பில் அமைதியானவர்.சட்டத்தை மதித்து வரி கட்டியவர்.கம்பெனு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றவர்.உதாசினப்படுத்தியதால் எண்ணித்துணிந்து பின் வாங்கவேயில்லை.பிறவிப் போராளி அல்லர்.சூழ்நிலைக் கட்டாயத்தால் கிளர்ச்சிக்காரரானவர்.
"காலம்,கடலலை,வரலாறு-இவை மூன்றும் ஓய்வதில்லை.இயங்கிக் கொண்டே இருக்கும்..
வரலாற்றை புறக்கணிப்பவர்கள் வரலாற்றால் புறக்கணிக்கப்படுவர்
-க.வெங்கடேசன்
தொடரும்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment