கற்றதும் பெற்றதும்-31
*மணி
ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும்போது அது பெளதீக சக்தியாகிவிடும்
-கார்ல் மார்க்ஸ்
#ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்-பாகம் 2
-ஜான் பெர்கின்ஸ்
தமிழில் ச.பிரபுதமிழன்
ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி அதிக அதிர்வலையை ஏற்படுத்திய புத்தகம்.அதன் தொடர்ச்சியாக 2015ல் நவீன பொருளாதார அடியாட்கள் பற்றியும்,அமெரிக்கா பற்றியும், அவர்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் பற்றியுமான பதிவுதான் இரண்டாம் பாகம்.11 வருடங்களாக ஆய்வு செய்து நவீன பொருளாதார சமூக நடைமுறையை முன் வைத்து அலசுகிறார்.
#புத்தகம் வாசிக்கும் முன்
பொதுவாக அமெரிக்கா, கார்ப்ரேட் என்றாலே நமக்கு கசக்கும். ஏதோ கம்யூனிஸ்ட் போல என நினைப்பார்கள்.ஆனால் விஷய ஞானம் தெரிந்தவர்கள் இந்த கார்ப்ரேட் சதிகளை நிச்சயம் அறிந்திருப்பார்கள்."ஒரு கோழி தனக்கு ஆபத்து வந்தவுடன் மண்ணிற்குள் தலையை மறைத்துக் கொள்ளும்.தனக்கு ஆபத்து நேரவில்லை எண்ணிக்கொள்ளுமாம்.ஆனால் உடல்பகுதி வெளியே தெரிவதை அதற்கு தெரியாது.இது அறியாமைக்காக சொல்லும் கதை. என் வீடு,என் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது என எண்ணுபவர்கள் இக்கோழியைப் போலத்தான் உலக விஷயங்களை அறியாமல் இருப்பார்கள்.
#உலகமயம்
எழுத்தாளர் மருதன் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்
"முதலில் வலது எனும் முதலாளித்துவம் தற்போது அதுதீவிர வலதை நோக்கி செல்வதாக எழுதியிருப்பார். வலதுசாரி முதலாளி என்பதிலிருந்து பெருமுதலாளி நிலை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் உலகம் முழுதும் வலைப்பின்னல் போல்
இருப்பார்கள்.இவர்களே கார்ப்ரேட்.
#ஜான் பெர்க்கின்ஸ்
பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை சூறையாடும் நோக்கில் நுணுக்கமாக ஆட்களை பணியமர்த்தி அனுப்புவார்கள்.
இவர்கள்தான் பொருளாதார அடியாட்கள்.தன்னை ஒரு பகடைக் காயாக,பொருளாதார அடியாளாக மாற்ற அனுமதித்தவரின் ஒப்புதல் வாக்குமூலம்.
#பெரு நிறுவனங்கள்
முதலில் இந்தப் பெரு நிறுவனங்கள் மலிவான சந்தையை உருவாக்குவதாக கூறி ஒரு நாட்டுக்குள் நுழைகிறது. அது சார்ந்த சந்தையில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை இலாபம் அடைகிறது. தொழில் வளர்ச்சி எனும் பெயரில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து கொண்டே இருக்கும். வேலையின்மை அதிகரிக்கும். எளிய மக்களின் சிந்தனையால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. தேக்க நிலையை உருவாக்கி, போட்டி அதிகரித்து, தனி மனிதனின் உழைப்பை அதிகம் சுரண்டும் வேலையை அது செய்கிறது.
வேலைப்பளு,சரியான ஊதியம் தராமை,ஒருவர் வெளியேறினால், குறைந்த ஊதியம் பெற்றுக்கொள்ள பல பேர் தயாராக இருப்பதாக மாற்றுவது, உழைப்பு சுரண்டப்படுவதே தெரியாமல் மாற்றுவது.வீடு,வேலை,கல்வி கடன் வழங்க தகுதியை தீர்மானித்து மக்கள் தொடர்ந்து கடனாளியாக வைத்திருப்பர்.
#கார்ப்ரேட் வங்கியாளர்கள் கட்டுரையில்..
மக்களிடம் அதிக கடன் வாங்கிக் கொள்ளுமாறு கூறுவது. தங்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு கூறப்படுவார்கள். வருங்கால கடனாளிகள் பலரை தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய பணி. முன்கூட்டியே கடனை திருப்புவதை தவிர்க்க வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும். நாளை என்ற ஒன்று கிடையாது என்ற சிந்தனையை வாடிக்கையாளர் மனதில் விதைப்பது. கடன் என்பது தொடர்ந்து கிடைக்கும் பெரிய இலாபத்திற்கான வழி. பின்பு கடன் மூலம் நாடுகளை அடிமைப்படுத்துவது.
#பொருளாதாரம்தான் அதிகாரத்தின் சாவி
* தங்களுடைய உற்பத்தி நிறுவனங்கள் ஒரு நாட்டிலும், வங்கி கணக்கை மற்றொரு நாட்டிலும், தொடர்பு மையங்கள் மூன்றாவது நாட்டிலும், தலைமையகம் நான்காவதாக மற்றொரு நாட்டிலும் வைத்துக் கொள்வார்கள்.இவ்வாறு அன்னிய முதலீடுகளை அவர்களுக்கு கிடைக்கிறது. ஊதியம் மற்றும் வரிகளைக் குறைப்பது சலுகைகளை அதிகப்படுத்துவது பல நேரங்களில் இவர்களுக்கான மானியங்களை அதிகரிப்பது இவ்வாறு அரசுகள் தங்களது கடன் சுமை அதிகரித்து கொள்கின்றனர்.
எவ்வளவுதான் முயன்றாலும் சீனா, இந்தியா, பிரேசில், துருக்கி அல்லது எந்த நாடுகளும் இந்த நிலையை அடைய முடிவதில்லை. அதிகமாக கடன் வாங்குவது, ஆயுதங்களை வாங்குவது, கடன் பெற்று நாட்டின் நிலையை சீராக்குவது, பணக்காரர்களின் கூடாரமாக மாறிப்போவதே காரணம். இவ்வாறு வழங்கப்படும் கடன்களை நியாயப்படுத்த அதிகம் மெனக்கெடுவார்கள்.
#கடன்
கடந்த 30 ஆண்டுகளாக உலகின் வறுமையான நாடுகளில் 60 நாடுகள் 540 பில்லியன் டாலர் கடனுக்காக 550 பில்லியன் டாலர் அசலும் வட்டியும் சேர்த்து கட்டியுள்ளனர். இன்னும் 523 பில்லியன் டாலர் திருப்பி கட்ட வேண்டும் என்கின்றனர். அந்த நாடு கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடுவதை காட்டிலும் அதிகமாக கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த செலவிடுகிறார்கள். அது வெளியுறவு வருமானத்தை விட 20 மடங்கு அதிகம்.
#விழிப்புணர்வு
சோவியத் ஒன்றியம் உடைக்கப்பட்ட பிறகு பெரு முதலாளிகள் தங்களுடைய அதிகப்படியான லாபம் என்ற இலக்கை அடைந்தது. என்ன வேண்டுமானாலும் செய்வதற்கான அதிகாரம் இருப்பதாக கருதுகிறார்கள். மக்கள் சுரண்டப்படுவதை உணர்கிறார்கள், இருப்பினும் அவர்கள் வேறு வழியில்லை.
இது போன்று உலக நாடுகள் குறித்து 15 தலைப்புகளில் விவாதிக்கிறார்.உள்ளூர் செய்திகளில் அக்கறை செலுத்தும் நாம் உலகச் செய்திகளை கண்டுகொள்வதே இல்லை. இன்றைக்கு நம் ஊரில் மேய்ந்து கொண்டிருக்கும் ஜெர்சி இன மாடுகள் வந்தது போலத்தான்.
உலக நாடுகளின் நிகழ்வுகளையும், அரசியல் மாற்றங்களையும் கண்டு படிப்போம்.அது அடுத்து நமக்கு ஏற்படக்கூடிய நிகழ்வாகவும் இருக்கலாம்.
வலது சாரிகளை சரிக்கட்ட நடுநிலைமையாளர்களையும் இடதுசாரிகளையும் நாட வேண்டிய தேவையும் வருங்காலத்தில் ஏற்படும்.இவர்கள் இருவரையும் கைவிட்டோமேயானால் மீண்டும் வலதுசாரிகளுக்கு ஏவலர் ஆகும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
"நீங்கள் எதை இழந்தீர்களோ
அதை மற்றவர்கள் பெற்றிருப்பார்கள்.!
-முதலாளித்துவம்"
@manipmp
"பிறர் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டிய வேலை அவரை எட்டி உதைப்பது மட்டும் தான்
#கார்ப்ரேட் விதி
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment