கற்றதும் பெற்றதும்-6
*மணி
"பாதம் இயங்குவதால்
பாதை பிறக்கின்றதுவால்
விதி எனத் தனியாய்
வகுத்த வழி ஏதுமில்லை
-புதுமைப்பித்தன்
காலத்தினால் மக்காத ப்ளாஸ்டிக் போன்ற கதைகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன்.
யதார்த்தத்துடன் மானுடத்தையும் கலந்து எழுதியவர்.ஆங்கில நாவல்கள் அதிகம் படித்தது அவரை எழுததூண்டியது."அதிகம் சாப்பிட்டாதான் டாய்லெட் வரும்கிற மாதிரி எனக்கு அதிகம் படித்தால்தான் எழுதவரும் என்பார்.
மணிக்கொடியில் எழுதிபுகழ் பெற்றார்.காமவல்லி எனும் படம் ஓடியதால் தானே படம் எடுக்க ஆசைப்பட்டு கடனானது.பின் ராஜமுக்தி படத்திற்கு எழுத பூனே சென்று உடல்நிலை மோசமடைந்தது.103 இறவா கதைகளை படைத்திருக்கிறார்.
*துன்பக்கேணியில் வெளிநாட்டுக்கு சென்ற ஆட்கள்
" அந்தா லெக்கிலேதான் நம்ம ஊரு" எனச் சொல்லி அடிவானத்தை பார்த்து நிற்பார்கள்"
என பிழைக்க சென்றவர்கள் வலியை ஒரே வரியில் எழுதியிருப்பார்.
*ஒரு நாள் கழிந்தது வில் ஒரு நாள் கழிய மனிதனை விரட்டும் வறுமையை படம் பிடித்திருப்பார்.
எல்லோரும் மேற்கோள் சொல்வது அவரின் ஒர் சில
கதைகளைத்தான்..
இன்னும் ஒரு ஐம்பது வருசம் சென்ற பிறகு மாணவர்களின் மனநிலை சொல்லியிருக்கிறாரா என்றால் ஆம்.அதுதான் நிகும்பலை கதை.
#நிகும்பலை
"விடிந்து வெகு நேரமாகிவிட்டது.
அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை.தடதட கதவு தட்டும் சத்தம்.ராமசாமியின் நண்பனின் குரல்.
"என்னவே!நீரெல்லாம் இப்படி ஸ்டடி செய்தால் பரிட்சை தாங்குமா?
பரிட்சை வந்தாலே சிவராத்திரிதான்
நடேசன் தன்மூளைக்கு பக்கபலமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு இதெல்லாம் பரிட்சைக்கு வராது என்பார்.
ஹால் டிக்கெட் வந்ததும் நெம்பரை கூட்டிப்பார்ப்பாங்க.1,3,5,வந்தால் பாஸ்.இல்லாவிட்டால் கோளா!
பரிட்சைதினத்தை வர்ணிப்பார்.
"கிண்டிக்கும்(ரேஸ்) பல்கலைகழகத்திற்கும்.ஒரே வித நியாயம்.ஜெயிக்கும்வரை அல்லது பணம் இருக்கும்வரை ஓடனும்.
"உள்ளே பரிட்சை புலியை பத்து மணிக்கு திறந்துவிடுவதற்காகவோ என்னவோ கதவுகள் சிக்கென்று அடைக்கப்பட்டிருந்தன.
இதில் பலர் புத்தகங்களுடனும், சிலர் "எப்பொழுதும்போல் இருப்பேன் இன்றும் பராபரமே! என கவலையின்றி இருந்தனர்."என்ன வரும்" 'என்ற தர்க்கம்,வந்தால் என்ன எழுதுவது என்ற பிரசங்கம்.
மணி அடித்து பரிட்சை ஆரம்பமானது.சாயங்காலம்.மணி.ஐந்து.போர் முடிந்தது! இன்று போய் நாளை வா! என்பதுபோல் தொனித்தது.ஸ்டாப் ப்ளீஸ் க்கு அப்புறம் நாலு வார்த்தை எழுதிவிட்டால் பாஸாகிவிடும் நம்பிக்கை.எல்லாம் டவுட்புல்லாக வெளியேறினார்கள்.ரிசல்ட் வந்தது.மூன்று பேரும் தேறினார்கள்.அடுத்து செர்வீஸ் கமிஷன் எழுததிட்டம் என முடித்திருப்பார்.
ஒரு பரிட்சைக்கு விடுதியில் தங்கிப் படித்து தேர்வு எழுதுவதை மிகவும் சுவாரஸ்யத்துடன் இன்னும் பல வருடம் கழித்துப் படித்தாலும் அப்போதும் இதே புத்துணர்வுடன் இருக்கும்.
#புதுமைப்பித்தனின் வைரவரிகள்
*கும்பலே
கோமாளி
வேடமிட்டு
நடந்தால்
கோமாளிக்கு
யார்
சிரிப்பார்?
*இது கலியுகமல்ல,விளம்பரயுகம்
*கடவுள்: உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்;உடன் இருந்து வாழமுடியாது
கந்தசாமிபிள்ளை:உங்க வர்க்கமே அதற்குத்தான் லாய்க்கு
*நிம்மதியாக இருக்கும் போது பெண்களை தேடுவதும், ஒரு பெண் கிடைத்துவிட்டால் நிம்மதியை தேடுவதிலே கழிகிறது ஆண்களின் தேடல்.
*சிலர் டீ குடிப்பது
கீறி விஷ ரத்தத்தை உறிஞ்சுவது
போல் உள்ளது
*கருணை என்பது கிழங்கின் பெயராய் மட்டும் உள்ளது
-சிறுகதையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்திய இவரின் இடத்தை இன்னும் நிரப்பவில்லை.அண்மையில் நெல்லையில் ஒரு சாலைக்கு இவரின் பெயர் சூட்டியுள்ளனர்.
-தொடரும்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment