கற்றதும் பெற்றதும்-8
*மணி
நா.முத்துக்குமார்
"ஆட்டையும் மாட்டையும் ரேஷன் கார்டில் சேர்க்க விரும்பியவன் அதிலிருந்து தன் பெயரை நீக்கி கொண்டான் என்பார்
அப்துல் ரகுமான்
மரணம் தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்ற அறிவு இருந்தாலும் இவரின் மரணத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.பாடலாசிரியர்களில் முனைவர் பட்டம் பெற்ற கவிஞர்.அவரின் வரிகளில் சில
வீரநடையில் எழுதிய
முத்து முத்தா பாடலில்..
"காதல் தோல்விதானோ ஆட்டுதாடி பிடிச்சிருக்கு"
"புத்தகத்தைப் போல ரெக்கை விரித்தாடும் பட்டாம்பூச்சி பிடிச்சிருக்கு"
என ஹைக்கூ போல் எழுதியிருப்பார்.
"அங்காடித்தெருவில் எளியவன் ஒருவரின் காதலினை "அவள் அப்படியொன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எனக்கு எதுவும் இல்லை" எத்தனை கவித்துவமான இயல்பான எண்ணம் எளிய மனிதர்களின் உணர்வுகளை வார்த்தைகளால் வடித்திருப்பார்.
சினிமாப் பாடல்களிலும் இலக்கியத்தரமான வரிகளை வார்த்தவர்
"எடுத்துப் படித்து
முடிக்கும் முன்பே
எரியும் கடிதம்
எதற்கு அன்பே என எழுதியிருப்பார்.
*புத்தகங்களும் தகவல் திரட்டாக இல்லாமல் அனுபவ பகிர்வாக பகிர்ந்திருப்பார்.பாலகாண்டம், கிராமம்,நகரம்,மாநகரம்,உறவுகளை சொல்லும் அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன்.
#வைர வரிகள்
@manipmp
நா.முத்துக்குமார் பிறந்தநாள் பகிர்வு
கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை
"மீன்"
#உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்
#பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
#தன் பழைய காதலியின் குழந்தை
தன்னை மாமா என்றழைப்பதை மட்டும்
எந்த மாமாவும் விரும்புவதில்லை
#எல்லா புத்தகங்களையும் நின்று கொண்டு
படிக்கிறது-'வறுமை'
#இங்கு பெரும்பாலும்
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில்
கலந்து கொள்வதைகூட
நகைகளே தீர்மானிக்கின்றன
#ஒரு நாள், அப்பா தோழனாகும் தருணங்கள் வாய்க்கும்.அந்தக் காலத்தில் நீங்கள் அப்பாவாகியிருப்பீர்கள்
#அம்மாவை எரித்த பின்னும்
அவள் புடவை ஆவியாகிக் கொண்டிருக்கிறது
இட்லித்தட்டுகளில்
#பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்துவிடுகிறார்கள்
#ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி-
#ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க..
#மாற்றான் அலமாரிப் புத்தகத்துக்கு
மணம் அதிகம்
#“காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்”.
#யாரும் மெனக்கெடாமலே
வருடந்தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும்
முட்டாள்களும்
-பள்ளி
#எந்த ஊரில் கேட்டாலும் கரகரப்பாகவே இருக்கிறது
"இஞ்சி மொரப்பா" விற்பவனின் குரல்
#ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி
#நேற்று கலைந்த மேகங்களை பற்றி வருத்தப்படாமல் வானம் புதிய மேகங்களை பிரசவித்து கொண்டே இருக்கிறது
" காலம் மைதானத்தில் விளையாடுபவனை பார்வையாளனாகவும், பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது
-பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நா.முத்துக்குமாருக்கு..
வாழ்த்த வார்த்தைகள் இருக்கும்வரை வாழ்த்துவோம்
"நம் ஒட்டிமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால்,படம் முடிந்தபின் க்ளைமேக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்கு தெரியாது என்பார் போலந்து இயக்குநர் ரோமன் பொலன்ஸி.நா.மு வின் வாழ்வும் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம் தான் இவை
-தொடரும்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment