Thursday, 16 August 2018

படித்தது

[06/05, 12:52 pm] மினிமீன்ச்: அவன் மிகவும் குழப்பத்துடன் படித்தான், தன் இறப்புச் செய்தியை.

-ஸ்டீவன் மெரட்ஸ்கி
[06/05, 12:52 pm] மினிமீன்ச்: ஹைட்ரஜன் குண்டுகள் வீசப்பட்டன. நாங்கள் அனைவரும் இறந்தோம்.

-ஹொவர்ட் வால்ட்ராப்
[06/05, 12:53 pm] மினிமீன்ச்:

கால எந்திரம் எதிர்காலத்திற்குச் சென்றது. யாருமே இல்லை.

-ஹாரி ஹாரிசன்
[06/05, 12:53 pm] மினிமீன்ச்:

வானம் விழுந்தது. விவரம் பதினோரு மணிக்கு.

-ரொபர்ட் ஜோர்தான்

மனிதகுலத்தைக் காப்பாற்ற அவன் மீண்டும் இறந்தான்

-பென் போவா

கல்லறை வாசகம்: மட மானிடர்கள், பூமியிலிருந்து தப்பிக்கவே இல்லை.

-வென்ரார் விஞ்ச்

”கிர்பி இதற்கு முன் விரல்கள் சாப்பிட்டதில்லை”

-கெவின் ஸ்மித்

: #போஸ்ட்கார்டு கதைகள்

பொது வாழ்வு.!
-சுஜாதா

"இன்றிரவு 8மணிக்கு ஷெரட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்டர்" மனைவி வருவதை கவனித்து சட்டென்று அந்த துண்டுச்சீட்டை கிழித்து குப்பையில் போட்டான்.

"என்னங்க அது.?"

"ஒண்ணுமில்லை இரவு ஒரு மீட்டிங் அதுக்கு தான் சீட்டனுப்பி கூப்பிட்டிருக்காங்க போகணும்."

இன்னைக்குமா? "தினமும் இப்படி மீட்டிங் வந்துடுதே உங்களுக்கு"

"என்னம்மா பண்றது.. பொது வாழ்வுன்னா அப்படித்தான்"

"முந்தாநாள் வனவிலங்கு பாதுகாப்பு பத்தி மீட்டிங்னீங்க, நேத்து குடும்பக் கட்டுபாடுன்னீங்க.. இன்னிக்கு.?"

"எய்ட்ஸ் விழிப்புணர்வு"

#போஸ்ட்கார்டு கதைகள்

சந்திப்பு.!
-சுஜாதா

நீலாவை அங்கே சந்திப்பதை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவளை அவன் கடைசியாக பார்த்தது போலவே அதே அழகு. அதே இளமை. யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவளை மெல்ல அணுகி "ஹாய் நீலா.! என்னைத் தெரிகிறதா.?" என்றான்.

ஒரு நிமிஷம் நெற்றியைச் சுருக்கி யோசித்தவள் தன் நினைவு செல்களை புதுப்பித்துக் கொண்டாள். சட்டென்று அவள் முகம் மலர்ந்தது "ஹாய், ராம் தானே நீ.? இங்கே எப்படி?" என்றாள்.

"ஒரு பஸ் விபத்து நாலு பேர் பலி.. அதுல நானும் ஒருத்தன்..!"

"ஸாரி ராம்..!"

"ஆமா.. நீ ஏன் தற்கொலை பண்ணிகிட்ட நீலா.?"

#போஸ்ட்கார்டு கதைகள்

50வார்த்தைகளில் ஒரு கொலைக்கதை.!
-சுஜாதா

அருண் அழகானவன். ஜாலியாக நேரம் கழிப்பது அவனுக்குப் பிடிக்கும். நண்பன் விஜய் அவனுடன் வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஒருநாள் அருண் கொஞ்சம் குடித்திருந்தான். விஜய் ஒரு பந்தயம் வைத்தான்.
"50 வார்த்தைகளுக்குள் ஒரு கொலைக்கதையா? உன்னால் எழுதமுடியாது அருண், நீ வளவளா ஆசாமி" என்றான்.
"முடியுமே"  என்றான் அருண்.
"எப்படி?"
அருண் அலமாரியிலிருந்து துப்பாக்கியை எடுத்து சிரித்துக் கொண்டே விஜய்யை சுட்டுக் கொன்றான்.

No comments:

Post a Comment