ரயிலே ரயிலே
*மணி
சின்ன வயசுல இருந்தே பேரதிசியமா பெருமையா பார்ப்பது ரயில்பயணம்.அந்த ரயில்பயணத்தையும் ரயில்நிலையத்தையும்.மானிட்டர் பன்னினா அள்ள அள்ள குறையாத அனுபவம் கிடைக்கும்
# எம்.எல்.ஏ சீட்டுக்கூட எளிமையா கிடச்சிடும்.ஆனா உட்கார்றக்கு ப்ளாட்பார்மில் சீட்டு கிடைக்க அடுத்தவன் முகத்தையே பார்க்கனும்.அவன் எந்திரிச்சவுடனே உட்கார்ந்திடனும்.சில சமயங்களில் லேடிசுக்காக சீட்டு மாரி உட்காரணும்
(இங்கயுமா)
# பக்கத்தில் ஏதாவது ஒரு கிராமத்து தாத்தா கையை முட்டிவரை மடக்கிவிட்டு அன்னிக்கெல்லாம் மெட்ராஸ் போக முப்பதுரூபாய் னு பேசிட்டு இருப்பார்
# வறட்டு இருமலுடன்,நாட்பட்ட சளியிடனும் யாராவது ஒருத்தர் இருப்பார்.மூக்கை சிந்த முயல,சளி பயந்து உள்ளே ஓட ரொம்ப நேரம் நெஞ்செலும்பை கரிச்சு காரி துப்பி சளி வந்தால்தான் நமக்கு ஒரு நிம்மதி.உஸ்ஸப்பா
# அன்னிலிருந்து இன்னி வரைக்கும் அன்ரிசர்வ் கோச் எதினு தெரியாம உசைன் போல்டு ரேஞ்சுக்கு ஆணும் பெண்ணும் ஓடுவாங்க
#சிலர் ப்ளாட்பார்ம் தொடங்கியதிலிருந்து வண்டி நிற்கும்வரை கில்லி பிரகாஷ்ராஜ் மாதிரி பின்னங்கால் பெடரியில முட்டும் அளவுக்கு வண்டியோடயே ஓடுவாங்க
# வண்டி நின்றவுடன் ஏசி 3டயர் கோச்சிலிருந்து ஐபேடில் பாட்டு கேட்டுட்டு டவுசருடன் ஒருத்தன் எட்டிப்பார்த்து கம்பிய பிடிச்சிக்கிட்டு ஓடுறவங்களை வேடிக்கை பார்ப்பான்.சத்தியமா
# பாகுபலி காளகேயருக்கு ஒன்னுவிட்ட சித்தப்பா பசங்க மாதிரி வடநாட்டு பசங்க ஓயாம கத்தி கத்தி பேசுவாங்க.ஒன்னிம் பிரியாது
# குடும்ப தலைவிகள் கூட்டமா குழந்தை குட்டியோட இதுதான் ரயில் இங்கதான் வந்துநிற்கும்னு குழந்தைக்கு சொல்வாங்க.ஆயிரம் இறைவிகளை ஒட்டு மொத்தமா பார்த்த மாதிரி இருக்கும்
# தெலுங்கு,கன்னடத்தில் கத்திப்பேசுங்க.இல்லி பா,இக்கட ஒஸ்தானு,அல்லே குத்துருனு வார்த்தை அதிகமா இருக்கும்
# நைட்டு பத்து மணிக்கு ஃபேசியல் செய்த முகத்தை அதிகம் காணலாம்
#மனைவியை வழிஅனுப்ன வரும் கணவன்கள் அப்பாவியா,கையெல்லாம் ஜன்னலுக்கு வெளிய நீட்டாத..குழந்யைய பாத்துக்கனு அக்கறையா சொல்வாங்க
# சில கணவன் கள் சீக்கிரம் கெளம்புமா டாஸ்மாக் சாத்திடுவான்னு கடுப்புல அவசர அவசர பேசி கெளம்புவாங்க
# மனைவிகள் கணவன்களிடம் பழைய குழம்பு ஃபிரிட்ஜில இருக்கூ மறந்திடாதீங்கனு
கடைசி நிமிசத்துல கூட மரணபீதியை கெளப்புவாங்க
# பஞ்சதந்திரத்தில பிணத்தை இழுத்துட்டு போற கமல் மாதிரி பெட்டிய இழுத்துட்டு போற கூட்டம் அதிகமாயிடுச்சு.ஏப்பா ஊருக்கு போறீங்களா ஊரையே காலி பன்னிட்டு போறிங்களா
# அன்ரிசர்வில் சீட்டுக்கிடைக்காம நிற்பவனெல்லாம் இனிமா வை இன்ஸ்டால்மென்டில் குடிச்ச மாதிரி வயித்தை கலக்கும்
#காளியாத்தா மாரியாத்தா
ஊர் போய் சேர்ற வரைக்கும் லோயர் பர்த்திலிருந்து எழுப்பாமல் பார்த்துக்க
வேண்டுதல் இருக்கும்
#10மார்க் கணக்கின் விடை காண்பதை போல சுவாரசியமானது, பயணம் செய்யும் ரயில் எந்த ப்ளாட்பார்மில் நிற்கப்போகிறது என கண்டுபிடிப்பது.!
உண்மையில் நாம் தனிமையில் இருக்கும்போதும் எவரும் நம்மை கண்டுகொள்ளாத போதும் பயணத்தை நாம் அனுபவிப்போம்
"பயணம் வேறு சுற்றுலா வேறு.பயணம் உலகை அறிந்து கொள்ளவும்,சுற்றுலா பொழுதை கழிக்கவும் வழி.பயணி ஒரு போதும் சுற்றுலா செல்ல விரும்புவதில்லை" என்பார் எஸ்.ரா
பயணிப்போம்
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment