Thursday, 16 August 2018

படித்தது

[10/05, 2:02 pm] TNPTF MANI: எது ஒண்ணையும்  ரொம்ப தீவிரமா செஞ்சா கடைசியில சூனியம்தான் மிச்சம்.தீவிரமா செய்யலேன்னா வெற்றி இல்லை. வெற்றினா உச்சியில் போய் பரிதாபமா முழிச்சிட்டு நிக்கிறது
-சுந்தர ராமசாமி

[11/05, 6:38 am] TNPTF MANI: எதிர்வரும் யாவரும் குரு என அறிவேன்
உதிர் இலை, உதிர் மலர் அவரிடம் பெறுவேன்
புதிரதும் விடையதும் ஒன்றெனப் புரிவேன்.
இது வர, அது செலும்  எனும் இடம் தெரிவேன்.
அதிர்வதும் அமைவதும் மனமென உணர்வேன்.
எதிர் வரின் எதிர்கொளும்  இசைவினை அடைவேன்.

-வண்ணதாசன்

[11/05, 6:47 am] TNPTF MANI: நம்ம பக்தியை சாமி கூட சோதிச்சுதான் தெரிஞ்சிக்கனுமா?
-ஜெயகாந்தன்

[11/05, 8:13 am] TNPTF MANI: காரணம் சொல்லாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள், ஆளுக்கொரு காரணத்தை விட்டுச் செல்கிறார்கள்.

-கவி

[11/05, 9:07 am] TNPTF MANI: எல்லாரும்
நிலா காணமாட்டார் !

யாருமில்லாத வெறுமை
ஏதுமில்லாத மனம்
முன்னிரவுத் தனிமை
முகிலற்ற வானம் 
முள்குத்திய நெஞ்சம்
அடக்க வேண்டிய அழுகை
உதிர்க்க வேண்டிய நினைவு
கழிக்க வேண்டிய காதல் என
என்னென்னவோ
வாய்க்க வேண்டும்
அதற்கு.

-மகுடேசுவரன்

[11/05, 9:14 am] TNPTF MANI: ஒரு பெரிய திரை

- மனுஷ்ய புத்திரன்

கடவுளுக்கு
எல்லாமே தெரிந்திருக்கிறது

அவர் ஒரு பெரிய
டிவியை வைத்துக் கொண்டு
அதில் நம்மை
நாள் முழுக்க பார்த்துக் கொண்டேயிருக்கிறார்

ஒரே பிரச்சனை
அந்த டிவி எப்போதும்
mute லேயே இருக்கிறது

நாம் ஒன்று பேசிக்கொண்டிருந்தால்
அவர் வேறொன்றைப் புரிந்துகொண்டு
தண்டனைகளைப் பிறப்பிக்கிறார்

(”நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்”)

[11/05, 9:16 am] TNPTF MANI: தமிழ் எழுத்தாளன் – 690

கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா:

பரிச்சயமில்லாதவர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களைப் பெரும்பாலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். உங்கள் கையெழுத்திட்ட போட்டோ ஒன்று அனுப்புவீர்களா?
2. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் எழுதியுள்ள கள்ளும் முள்ளும் என்கிற காவியத்தை உங்கள் மேலான பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன். அனுப்பலாமா?
3. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் ஆண்டிப்பட்டி இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் ஃபிட்டர் தொழில் பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். உங்கள் தொழிற்சாலையில்....

பரிச்சயமில்லாதவர்கள் நேரில் வந்து சந்திக்கும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளும் பெரும்பாலும் மூன்று வகைப்படும்.
1. உங்களுக்கு எல்லாம் எப்படி ஸார் டயம் கிடைக்கிறது எழுதுவதற்கு?
2. இதுக்கெல்லாம் எவ்வளவு கொடுப்பான் உங்களுக்கு?
3. நான் படிக்கிறதில்லை. என் ஒய்ஃப்தான் படிப்பாள் இதெல்லாம்....

உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுதுவது அல்லது நேரில் வந்து சந்திக்கிற ஜாதியில்லை.
(ஏப்ரல், 1976)

எனக்கு வேண்டிய எழுத்தாளர் ஒருவர் ஒரு பெண் காணாமற்போன உண்மை நிகழ்ச்சியை எனக்கு எழுதியிருந்தார். நான் எழுதும் த்ரில்லர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்படியாக வினோதமான நிகழ்ச்சிகள்.... நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகள். பயங்கர நிகழ்ச்சிகள். கடைசியில் பெண்ணைக் காணவில்லை. என்னை அபிப்ராயம் கேட்டிருந்தார். கதையாக எழுதுவதில் ஒரு சௌகரியம் இஷ்டப்பட்ட அத்தியாயத்தில் கதாநாயகியை மீட்கலாம்.... நிஜ வாழ்க்கையின் அத்தியாயங்கள் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. தேர்ந்த எழுத்தாள நண்பர் அவர். வித விதமான குற்றங்களைப் பற்றி எழுதுகிறவன் நான்.... இருவரும் ஒன்றும் செய்ய முடியாது.... காரணம் பெண் நிஜம். போலீஸ் நிஜம்.
(ஏப்ரல், 1977)

இந்தத் தடவை கவிஞர்களின் முன்னுரையிலிருந்து தப்பித்துவிட்ட மூன்றாவது சிறுகதைத் தொகுதியில் (‘காலமும் 5 குழந்தைகளும்’) இருக்கும் வழி, கடன், புலிக்கலைஞன் போன்ற அற்புதங்களை அசோகமித்திரன் ஒரே வருஷத்தில் எழுதியிருக்கிறார். பிரமிக்கிறேன்.
(ஜூன், 1976)

சென்ற இதழில் இந்தப் பக்கம் சில கோபமான கடிதங்களைக் கிளப்பி இருக்கிறது என அறிந்து கொண்டேன். அவைகளை நான் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு மன்னிக்கிறேன்.
(மே, 1973)

ஜப்பானியர்கள் மேலிருந்து கீழாக எழுதும் முறையை நவீன காலத்துக்குச் சரிப்பட்டு வராது என்று இடமிருந்து வலமாக மாற்றிக் கொண்டார்கள். Ideogram ஆக இருந்த தம் மிகப் பழைய மொழியை புதிய Katanaka முறைப்படி எளிதாக்கினார்கள். நவீன எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் இயல் முழுவதையும், ஒரு வார்த்தை இங்கிலீஸ் தெரியாமல் ஜப்பானிய மொழியிலேயே கற்றுக்கொள்ள புத்தகங்கள் அவர்களிடம் இருக்கின்றன. நாம்?.. நாம் மாற மாட்டோம். மொழியை கன்னி, தாய் என்று கொஞ்சுகிற பிஸினஸ்ஸை விட்டொழித்தால்தான் நமக்கு விடிவு காலம்.
(ஜூன், 1979)

பத்திரிகையில் “இன்னாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த இன்னாருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறவர்கள் அவர்களுடைய சொந்தப் பொறுப்பில்தான்” என்று விளம்பரம் செய்கிறார்களே, அதுபோல் நான் “இது எப்படி இருக்கு” என்கிற திரைப்படத்தைப் பற்றி விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது Horrible.
(ஜூலை, 1979)

[11/05, 9:42 am] TNPTF MANI: கட்டணக் கழிவறை,சாக்கடை,குப்பைத்தொட்டிகள் ,டிரான்ஸ்ஃபார்மர்  போன்றவற்றை கடக்கும்பொழுது பொதுவாகவே முந்தானை இழுத்தோ,கர்ச்சீஃப் வைத்தோ, துப்பட்டாவை வைத்தோ  பெண்கள் மூக்கையும்,வாயையும் சேர்த்து மூடியபடி நடப்பது கொள்ளை அழகு.....

ஏன் ஆம்பளைங்களுக்கு நாறாதான்னு கேட்காதீங்க...

நம்மிடம் கர்ச்சீஃப்,முந்தானை,துப்பட்டா இத்யாதிகள் இருப்பதில்லை.வசதியாக இழுத்து மூடிக்கொள்வதற்கு...

அப்படி வேட்டி கட்டியவர்கள்,துண்டு போட்டிருப்பவர்கள் இழுத்து வாயை மூடினால் கண்றாவியாக இருக்கும்.முயற்சிக்காதீர்கள்.

இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு பேரழகு..

-விநாயகமூர்த்தி

[11/05, 9:40 pm] TNPTF MANI: ஒரு சங்கீத கச்சேரியில்
"உங்களுக்கு தன்யாசி பிடிக்குமா?
எனக்கு இது பிடிக்கும், பிடிக்காது என்று இல்லை.எதையும் சாப்பிடுவேன்

-சுஜாதா

[12/05, 11:27 am] TNPTF MANI: இந்தப் பள்ளிக்கு எப்போதும்

விடுமுறை நாட்கள் தான்!

படிப்பிக்க ஆசிரியர்களுமில்லை

கற்றறிய பிள்ளைகளும் இல்லை!

மெட்ரிகுலேசன் பள்ளி செல்லும்

பேருந்திலிருக்கும் குழந்தைகள்

ஊரின் கடைகோட்டில் நின்றிருக்கும்

இந்த நடுநிலைப் பள்ளியை

கடந்து போகையில் சும்மாவுக்கேனும்

கையசைத்துச் செல்கின்றனர்!

ஏதுமறியாத கட்டிடம் புன்னைகைக்க

தெம்பின்றி வெறுமனே நின்றிருக்கிறது

-வா.மு.கோமு

[12/05, 2:27 pm] TNPTF MANI: கால மாற்றம்
அறிவியல் வளர்ச்சி
தொலைந்தே போனது..
கருப்பு வெள்ளை
தொலைக்காட்சி.

இன்னுமும்
தொலையாமல் இருப்பது..
நீ வெள்ளை
நான் கருப்பு

-ரசாக்

[12/05, 5:03 pm] மினிமீன்ச்: ஒருமுறை நான் என் கதை ஒன்றின் கடைசி இரண்டு வரிகளை நீக்கிவிட்டு அனுப்பினேன், வெற்றுத் தாள்.!

-டேவிட் கஃப்னே

[12/05, 6:59 pm] TNPTF MANI: கடவுள் ஆக

                மனிதனின்
                வரத்திற்கு
                காத்திருக்கும்
                 கல்."

-விக்னேஷ்வரி

[13/05, 6:47 am] TNPTF MANI: இறந்த மனிதன் சவ ஊர்வலத்தில் கண் விழித்துப் பார்த்தான்,இன்னும் கொஞ்சம் நன்றாய் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணி கண் மூடினான்

-தமிழன்பன்

[13/05, 6:48 am] TNPTF MANI: வாடகை வீட்டின் வரவேற்பறைபெரிதும் சிறிதுமாய் பிகாசோ ஓவியங்கள் வீட்டுக்காரரின் விழிகள் மட்டும் அகல மறுக்கின்றனஆணிகளை விட்டு

-நெல்லை ஜெயந்தா

[13/05, 6:58 am] TNPTF MANI: காற்றில் அலையும் சொற்கள்!

தேவையற்ற
தேவை என்றாகிவிட்ட
அலைபேசியில்
அன்றாடம் ஏதேனும்
சங்கடம்...

பெரியப்பா செத்துப்போன
இரவில்
விவரம் தெரியாத நண்பன்
அடுத்த மாதப் பொங்கலுக்கு
இனிப்பான வாழ்த்துக்கள்
அனுப்புகிறான்.

அலுவல்களின்
மும்முரங்களிலும்
பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது
தவறான அழைப்புகளுக்கு.

கடன் தருவதாகச்
சொல்லும் முகம்
பார்க்காமல்
நட்புறவாகும்
பெண்களைச்
சபிக்க வேண்டியதாயிருக்கிறது.

மருத்துவமனை
பிணவறையிலும்
கேட்க நேரிடுகிறது
புதுப்படப் பாடலின்
ரிங்டோனை.

இத்தனைக்கு இடையிலும்...
'பத்திரமா வந்துட்டேன்ப்பா'
தனித்து வெளியூர் சென்ற
மகளின் குரல் கேட்கையில்
வரமாகிவிடுகிறது அலைபேசி

- இரா.பூபாலன்,

[13/05, 8:53 am] TNPTF MANI: புறப்படும் அன்று
சோக..சோகமாகக் காட்சியளிக்கிறார்கள்
வழியனுப்ப வந்தவர்களும் கூட

பார்த்துப் பார்த்து
தேம்புகிறாள்
பெரியக்கா மகன்

கிளம்பும்போது
அழுதுவிட்டுத்தான் போவாய்
பந்தயம் கட்டுகிறார் மாமி
தேற்றுதல் சொன்ன என்னிடம்

நாளு வருசத்துக்குப் பிறகு
மூனு மாசம்
விடுப்புல வந்தான்
திரும்ப எப்ப வருவானோ?
அப்பாவும் கண்கலங்குகிறார்

என்ன செய்ய
துபாய் போகாமல் இருந்துவிட்டாலும்
மகிழ்ச்சியடையப் போவதில்லை
எவரும்.

-இசாக்

[13/05, 11:21 am] TNPTF MANI: மக்கள் தண்டனையைத்தான் பார்க்கிறார்களே ஒழிய
குற்றத்தை அல்ல
-கார்ல்மார்க்ஸ்

[13/05, 11:22 am] TNPTF MANI: "Who hurt you?"

my own expectations.

[13/05, 1:13 pm] TNPTF MANI: என் உறுதிப்பாடு உடைந்து
உன் நினைவில்
அழுந்தித் தவித்தேன்.

உன் அனுமதியின்றி
உன் அறிதலின்றி
உன்னை நினைத்துவிட்டேன்.

சுவர் தாண்டிக் குதித்து
உன் தோட்டக் கனிபறித்து
உண்டதைப் போன்ற
அத்துமீறல் இது.

பிடித்து
அடிமரத்தில் கட்டி
அடித்துதை.

வீங்கிக் கிழிந்து
தாடை தாழ்ந்து
ரத்த நூல் ஒழுகும் என் முகம் காணும் நீ
அக்கணம் ஒரு துகளளவு
இரங்குவாயன்றோ !

-மகுடேசுவரன்
[13/05, 2:40 pm] TNPTF MANI:

காலமெல்லாம் கண்ணதாசன்
-ஆர்.சி.மதிராஜ்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்

* * *

உள்ளம் என்றால் என்னவென்று கவிஞர்களும் கதையாசிரியர்களும் விதம்விதமாகக் கூறியுள்ளனர்.
உள்ளம் என்பது மலரைப்போன்றது. அதில் ஆசைகள் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. உள்ளம் என்பது ஆழ்கடலைப்போன்றது - எப்போது அமைதியாய் இருக்கும், எப்போது பொங்கிப்பிரவகிக்கும் என்பது தெரியாது. மனம் ஒரு குரங்கு - அது கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

உள்ளம் என்பது ஆமை என்கிறார் கவியரசர் கண்ணதாசன். தனக்கு ஓர் ஆபத்து என்று தெரிந்தால், எவரையும் தாக்க முற்படாது. தன் ஓட்டுக்குள், தன்னைத்தானே பதுக்கிக்கொள்ளும். ஆபத்து மட்டும்தான் என்றில்லை, பல நேரங்களில் எதற்கு வீண்வம்பு என்றோ, சோர்விலோ, கோபத்திலோ, பயத்திலோ, பாதுகாப்பை வேறிடத்தில் தேடாது தனக்குள் தானே சுருங்கிக்கொள்ளும். இப்படி உள்ளத்தைச் சுருக்கிக்கொண்டால் என்னவாகும்? உண்மை ஊமையாகிவிடும்.

உண்மை என்றால் என்ன? பொய்மை என்றால் என்ன? எதனைக்கொண்டு இதனை வரையறுப்பது? மனசாட்சிப்படி நடந்துகொள்வது சரியா? சட்டப்படி நடந்துகொள்வது சரியா? மனசாட்சியும் சட்டமும் ஒன்றாகப் பயணிக்கவே பயணிக்காதா? தனி ஒரு மனிதனாக சிந்திக்கையில் ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்குக் கட்டுப்படவேண்டும்.

ஒரு சமூகமாகக் கூடி வாழ்கையில் சமூகத்திற்கு எது சரி என்பதை சட்டம் யோசிக்கும். அங்கு சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும்.

எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் நம் மனதிற்கு சரியெனப்பட்டதை பேசுகிறோமா? நம் எண்ணத்தில் நேர்மை இருந்தாலும் அப்படிப் பேசிட முடிவதில்லை. அந்தப் பேச்சால் அந்த உண்மையால் என்ன நடக்கும்? யாருக்கேனும் பாதிப்பா என்பதைப் பொறுத்தே அமைகிறது அது.

தன்னுடைய மேலதிகாரியிடம் தனக்கு சரியென்று பட்டதைச் சொல்ல முடிகிறதா? ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். எனில் அதிகாரத்தைப் பொறுத்துதான் குரல் உயர்த்தமுடிகிறது. தன்னை விட அதிகாரம் மிக்கவர்கள் என்றில்லை, தனக்கு வேண்டப்பட்டவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்களிடமும் கூட அப்படிப் பேசிவிட முடிவதில்லை.

காரணம், இதனால் அவர்கள் உள்ளம் வருந்துமோ என்ற யோசனையும் பயமும் அப்படிப் பேச விடுவதில்லை.
ஒரு கவிஞனோ படைப்பாளனோ, தன் நெஞ்சில் தோன்றுவதையெல்லாம் படைத்துவிடுவதில்லை. சிலவற்றைத்தான் எடுத்து வைக்கிறார். எழுதுவதைவிட எழுதாமல் விட்டது அதிகம் என்பான் கவிஞன். பேசியதைவிட பேசாமல் விட்டது அதிகம் என்பான் பேச்சாளன்.

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் - உண்மை, ஆமை - ஊமை, சொல்லில் - நெஞ்சில், பாதி - நீதி.... என்று வார்த்தைகள் சந்தத்துக்குள் எத்தனை அழகாகப் பொருந்தியிருக்கின்றன. அப்படிப் பொருத்திய வார்த்தைகளுக்குள் தன் சிந்தனையை, பொருளை எத்துணை கச்சிதமாகப் பொருத்துகிறார் கவியரசர். அதனால்தான் அவர் கவிகளுக்கெல்லாம் அரசர்.

கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா? இதற்கான பதிலையும், கேட்பவரின் எண்ணத்தை நோக்கியே திருப்பிவிடுகிறார் கண்ணதாசன். மலைப்பிரதேசத்தில் உருண்டையான ஒரு கல் இருக்கிறது. ஆம் அது கல்தான். அதை ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிச் செதுக்கி, ஒரு உருவமாக்குகிறான்.

இப்போது கல், சிற்பம் என்ற பேருக்கு உருமாற்றமடைகிறது. அதன் மூலம், கல். ஆனால் ஒரு சிற்பத்தை கல் என்று சொல்லமாட்டோம்தானே? அதே சிற்பம் கருவறைக்குள் வைத்து வணங்கப்படும்போது கடவுள் ஆகிறது.

கல் என்று பார்ப்பதும், சிற்பமாக ரசிப்பதும், கடவுளாக வணங்குவதும் அவரவர் கண்களையும், உள்ளத்தையும் பொருத்தது என்கிறார் கண்ணதாசன்.

சரி என்பதும் தவறு என்பதும் அவரவர் பார்வையைப் பொருத்தது. கல் என்பதும் கடவுள் என்பதும் அப்படியே. உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. இன்பமும் துன்பமும் கூட அப்படித்தான்.

பெரும்பாலும் நாம் குழம்பிய மனநிலையிலேயே இருக்கிறோம். இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் நம்மை எப்போதும் ஆட்கொள்கிறது. நண்பனா பகைவனா என்பதைக்கூட புரிந்துகொள்ள இயலா நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் இதெல்லாம் குறுகியகாலம்தான். நாட்பட நாட்படப் புரியும். வாழ்க்கை புரியவைக்கும்.

உண்மை எல்லா நேரமும் உறங்கிக் கிடப்பதில்லை. எல்லா நேரமும் ஊமையாகவும் இருக்கமுடியாது. அது ஒரு நாள் வெடித்துக் கிளம்பும். அன்று புரட்சி உருவாகும். உண்மைக்கு மட்டும்தான் அப்படி ஒரு சக்தி இருக்கிறது. உண்மையைக் கொண்டு உருவாகும் புரட்சி மாபெரும் வெற்றிபெறும் என்பது வரலாறு.
[14/05, 6:41 am] TNPTF MANI: கடைசி முயற்சியில் இருக்கிறது
தான் முயற்சித்த அத்தனையும்
நம்பிக்கையாவதும்,
அவநம்பிக்கையாவதும்"!
[14/05, 7:59 am] TNPTF MANI: நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்

யாரைப்போல இருப்பேனோ

நேற்று அவளை நான் பார்த்தேன்

பேருந்தின் கடைசியில் நின்றிருந்த

அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்

அந்த நாசி,

அந்தக் கண்கள்,

கருங்கூந்தல்,

மாநிறம்,

சற்றே திமிரான பார்வை

வடிவான தோற்றமென

நான் பெண்ணாய் பிறந்தால்

வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்

இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்

ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்.

-கண்டராதித்தன்.

[14/05, 9:47 am] TNPTF MANI: *மரணம்:*

ஒவ்வொரு
மரணச் செய்தியைக்
கேட்கும் பொழுதும்
உள்வந்து ஒட்டிக்கொள்கிறது
பெயரறியா அழுத்தமொன்று,
என் மரணம்
எங்கே எப்படி எவ்விதம்
நிகழப்போகிறதென்கிற
கேள்விகளுடன்..

நாற்பதா, ஐம்பதா,
அறுபதா அதற்கும்மேலா?
விபத்தா, விஷமா?
நீரா? தீயா? தீராநோயா?
கொலையா, தற்கொலையா?

யாரெல்லாம் வருவார்கள்?
யாரெல்லாம் அழுவார்கள்?
யாரெல்லாம் அழுகையினுள்
புன்னகையை ஒளிப்பார்கள்?
ஒரே நாளில்
மறந்திடுவார்களா?
சில நாட்களாவது
வருந்திடுவார்களா?

கேள்விகள், கேள்விகளின்
கிளைக்கேள்விகள்
முட்டி முட்டி முளைத்து
மூச்சடைக்கும் நொடிகளில்
முடிவெடுக்கிறேன்..
அது வரும்போது வரட்டும்
அதுவரை..
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
மிச்சமில்லாமல் வாழவேண்டும்.

-மஞ்சு விஸ்வநாதன்

[15/05, 6:35 am] TNPTF MANI: மழை நின்று போனாலும் இலை சிந்தும் துளி அழகு;
அலை மீண்டும் போனாலும் கரை கொண்ட நுரையழகு;
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு;
என்னோடு நீயிருந்தால் இருள்கூட ஓர் அழகு

-வைரமுத்து
(புதிய முகம்)

[15/05, 6:57 am] TNPTF MANI: ஊர்வீதி எல்லாம் அத்துபடி
சந்துபொந்து குண்டுகுழி
சாக்கடைத் தேங்கலும் கூட.

நாய்களோடு நல்ல பரிச்சயம்
இது யார்வீட்டுப் பூனை என்பதும் தெரியும்.

எந்த மரநிழல் நிற்க ஏற்றது
எது பூத்துதிர்கிறது
எல்லாம் அறிவான்.

யார் இட்ட கோலம் அழகு
அவனுக்குத் தெரியும்.

முச்சந்தியில் இஸ்திரி போடுபவனிடம்
தினந்தோறும்
பீடிக்கு நெருப்பு வாங்கி
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.

சித்தர் பாடல்களை
அப்படியே ஒப்பிக்கிறான்.

யாரோ தந்திருக்கிறார்கள்
பீட்டர் இங்கிலாந்து சட்டை அணிந்திருக்கிறான்.

மளிகைக்கடைக்காரருக்குச்
சில்லறை தருகிறான்.

‘ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு ?’
விசாரிக்கவும் தெரிகிறது.

கிரிக்கெட் பந்து அவன்மீது பட்டது
சிரித்தபடி எடுத்து வீசுகிறான்.

அவனுக்கு யார்மீதும் புகார் இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை
விமர்சனம் இல்லை.

நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத்
தெரிந்திருக்கிறது.

அவனைப்
பிச்சைக்காரன் என்று
எப்படிச் சொல்ல முடியும் ?

-மகுடேசுவரன்

[15/05, 7:09 am] TNPTF MANI: அன்பால் தனக்கு ஆலயம் எழுப்பப்படுமென்று காத்திருக்கிறார் கடவுள். கற்களை சுமந்து வருகிறார்கள் மனிதர்கள்

-தாகூர்

[15/05, 7:26 am] TNPTF MANI: மரங்கள் வெட்டப்படுவது படுகொலை என்றால் செடிகள்  பிடுங்கபடுவது சிசுக்கொலை !!!

-கதிர்

[15/05, 8:46 am] TNPTF MANI: காயத்ரி மந்திரம்

காயத்ரி பற்றி கவிதை எழுதலாம்
எனில்
கவிதை வேறு
காயத்ரி வேறா..

காயத்ரிகள்
அழகாய்த்தான் இருக்கிறார்கள்
அழகாய் இருப்பவரெல்லாம்
காயத்ரிகளாய் இருந்திருக்கக்கூடாதா..

கால்கொலுசு
கண்ணாடி வளையல்
மஞ்சள் தாவணி
இவை எதுவுமில்லாமல்
அழகாய் இருக்க
காயத்ரிக்கே சாத்யம்..

பெரும்பாலும் காயத்ரிகள்
காதலுக்கெட்டாத தூரத்தில்
சிரிக்கிறார்கள்..

எல்லாம் தெரிந்த காயத்ரிகளுக்கு
கொஞ்சம்
வெட்கப்படவும் தெரிந்திருக்கலாம்..

காயத்ரிக்கும்
காயத்ரிக்கும் நடக்கும் போட்டியில்
காயத்ரிகளே ஜெயிக்கிறார்கள்..

காயத்ரியைப் பிடிக்கும் என்பதற்கு
கண்ணம்மாவை
பிடிக்காது என்பதல்ல பொருள்..

காய்த்ரிகள் காயத்ரிகள்தான்
கல்யாணத்துக்கு
முன்னும் பின்னும்..

காயத்ரிக்குத்தான் தெரியும்
காயத்ரியாய் இருப்பதன்
கஷ்டம்...

#கவிதாபாரதி

[15/05, 9:45 am] TNPTF MANI: ‘’ தேவையானது எது? சிறந்தது எது?’’

‘’ சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன.

சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது.

சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக மாற்றுவதாகும்’’

– புத்தர்

–‘’ பௌத்தம் ஓர் அறிமுகம்’’
ஏ.பி. வள்ளிநாயகம் எழுதிய நூலில் இருந்து..

-மணா

[15/05, 10:39 am] SATHIS W: உன்னை
.........
நீ எவ்வளவு குழந்தைமையோடு இருக்கிறாய்
நீ எவ்வளவு சந்தேகங்களற்றிருக்கிறாய்
நீ எவ்வளவு நம்புகிறாய் ஒரு பரிசுத்தமான காதலை
நீ தயக்கமற்று பணயம் வைக்கிறாய் உன்னை
நீ காணும் கனவுகள் அவ்வளவு பரிசுத்தமானவை
நீ காணும் காட்சியில் ஒரு களங்கமில்லை

உன்னை ஏமாற்ற
எனக்குப் பத்து வினாடிகள் போதும்

மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment