[18/06, 6:52 am] TNPTF MANI: குயிலாய் பாடவும்
மயிலாய் ஆடவும்
மானாய் ஓடவும
முடியாத மனிதன்
யோசித்துப் பின்
கற்றான்
கூண்டு செய்ய
-மோகனரங்கன்
[18/06, 6:56 am] TNPTF MANI: படித்துப் பார்
எப்போது வரும் என்ற காத்திருப்புடனும்
எப்போது முடியும் என்ற பதட்டத்துடனும் நீடிக்கும்..
படித்துப்பார்
தேர்வுக்கு படித்துப் பார்
காலை அலாரம் கடுப்படிக்கும்
நள்ளிரவு தேநீர் நஞ்சாய் கசக்கும்
படித்துப்பார்
ஒவ்வொரு முறை பிறர் ஏக்கப்பார்வையை கடக்கும்போதும்
அறிவுரை தடைகளை தாண்டும்போதும்
மனம் வலிக்கும்
தனிமை இனிக்கும்
தேர்வுக்கு படித்துப்பார்
மடக்கி வைத்த நாட்காட்டியும்
குறித்து வைத்த தேதியும் கண்ணில் படும்
கருத்தில் சுடும்
தேர்வுக்கு படித்துப்பார்
சிக்னல் இல்லாத செல்போனை நோண்டச்சொல்லும்
உற்றுப்பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஞானம் பிறக்கும்
படித்துப்பார்
தேர்வுக்கு படித்துப்பார்
காற்றாடி சத்தம் உறவாடும்
தூரத்தில் கேட்கும் பாடல் சுகமாகும்
படித்துப்பார்
தேர்வுக்கு படித்துப்பார்
நகம் கொரிப்பாய்
நிலத்தில் அழுக்கு எடுப்பாய்
பலமுறை தண்ணீர் குடிப்பாய்
அடிக்கடி சிறுநீர் கழிப்பாய்
படித்துப்பார்
தேர்வுக்கு படித்துப்பார்
எல்லோரின் எதிர்பார்ப்பும் எடைக்கல்லாய அழுத்தி
தராசு தட்டாய் சாய்வாய் தன்னடக்கத்துடன்..
படித்துப்பார்
தேர்வுக்கு படித்துப்பார்
-மணிகண்டபிரபு
[18/06, 7:05 am] TNPTF MANI: கோவைத் தமிழில் ஒருவரைத் திட்டுவதற்கு ‘ஆகாவலி’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ‘அவன் கிடக்கறான்... ஆகாவலி’ என்பார்கள்.
எதற்கும் உதவாதவன், வினைக்குப் பொருந்தாதவன், அவனை முன்வைத்து எந்தச் செயலையும் ஆற்ற முடியாது என்பன அந்தச் சொல்லின் பொருள்கள்.
கொங்கு தமிழில் உள்ள வசைச்சொற்கள் கடுமையான ஈனப் பொருள்கள் வழங்குவதில்லை. அவற்றில் மென்மையான ஒரு கண்டிப்பு இருக்கும். நால்வர் மத்தியில், குடும்பத்திற்குள்கூட அவற்றைச் சொல்லலாம். பெண்களும் பயன்படுத்தலாம். அந்தப் பண்புகளின்படி இச்சொல்லை ஆராய வேண்டும்.
ஆகாவலி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம். ஆகா வலி. ஆகாத வலிமை. வாய்கிழியப் பேசுவான், அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று நீட்டி முழக்குவானேயொழிய அவனுடைய வலிமைகள் எதற்கும் ஆகாதவை. பயன்படாதவை. அதனால் அவன் ஆகாவலி. இது நேரடிப்பொருள் விளக்கம்.
இந்தச் சொல் மருவித் தோன்றியது என்று கருத முடியுமெனில் அதற்கும் இடமிருக்கிறது. ஆகாயவல்லி என்ற சொல் மருவி ஆகாவலி ஆகியிருக்கலாம். ஆகாயவல்லி என்பதற்குப் ‘பூண்டு அல்லது சீந்தில் என்னும் படர்கொடி’ ஆகிய இரண்டு பொருள்கள் உள்ளன. பூண்டு தனித்து எதற்கும் பயன்படா. சேர்வனவற்றோடு சேர்ந்து எதையோ சாதிக்கும். வெங்காயம் வசைச்சொல்லாக இருப்பதைப்போல அதன் இனமான பூண்டுவைக் குறிக்க ஆகாவலி தோன்றியிருக்கலாம்.
இன்னொரு பொருளான படர்கொடிகள் காலைச் சுற்றி ஆளை விழவைப்பன. இந்த ஆகாவலிகளைக் கூடச் சேர்த்துக்கொண்டு செயலில் ஈடுபட்டால் உதவியாயிருப்பதைவிட இடையூறாகவே இருப்பர்.
எல்லாவகையிலும் பொருத்தமான பொருளுடைய கொங்கு வசைச்சொல் ‘ஆகாவலி.’
-மகுடேசுவரன்
[18/06, 7:46 am] TNPTF MANI: கரும்பலகை அழிப்பதற்காய்
காகிதம் கேட்டேன்
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்
வீணாய்ப்போகிறது
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்..
-பழ.புகழேந்தி
[18/06, 12:46 pm] TNPTF MANI: இந்நாள் வரைக்கும்
நானமர்ந்தால்
சப்திக்காத நாற்காலி
எழுந்தால் அமர்ந்தால்
ஓசை எழுப்பத்
தொடங்கிற்று
நீரை நோக்கிக் குனிந்தால் என்
பிரதிபலிப்பின் சுமை பொறாமல்
அலைகள் விரையும் மறுகரைக்கு
-ஞானக்கூத்தன்
[18/06, 7:48 pm] TNPTF MANI: திகைப்பு
இருட்டுக்குப் பயந்து
இமைக்கதவை மூடிக்கொண்டேன்
உள்ளே புது இருட்டு
'உர்" என்றது
-எஸ்.வைத்தீஸ்வரன்
[18/06, 7:53 pm] TNPTF MANI: சட்டம் தெரியாத
நாயும் நானும்
நடுச்சந்தியில்
அடிபட்டோம்
-எஸ்.வைத்தீஸ்வரன்
[18/06, 8:14 pm] TNPTF MANI: குட் என்று சொல்லாதீர்
“நன்று / நல்லது” என்று சொல்லுங்கள்.
**
வெரிகுட் என்று சொல்லாதீர்
“நனி நன்று” என்று சொல்லுங்கள்.
**
பியூட்டிபுல் என்று சொல்லாதீர்
“அழகு” என்று சொல்லுங்கள்.
**
வொண்டர்புல், மார்வெலஸ் என்று சொல்லாதீர்.
“அழகிதழகிது” என்று சொல்லுங்கள்.
**
குட்மார்னிங் என்று சொல்லாதீர்
“நற்காலை வணக்கம்” என்று சொல்லுங்கள்.
**
குட்டே என்று சொல்லாதீர்
“நன்னாள்” என்று சொல்லுங்கள்.
**
குட்நைட் என்று சொல்லாதீர்
“நல்லிரவு” என்று சொல்லுங்கள்.
**
சப்போஸ் என்று சொல்லாதீர்
“ஒருக்கால் / ஒருவேளை” என்று சொல்லுங்கள்.
**
ஹலோ என்று சொல்லாதீர்
“வணக்கம்” என்று சொல்லுங்கள்.
**
மம்மி டாடி என்று சொல்லாதீர்
“அம்மா அப்பா” என்று சொல்லுங்கள்.
**
கரெக்ட் என்று சொல்லாதீர்
“மிகச்சரி” என்று சொல்லுங்கள்.
**
ஒன் டூ த்ரீ என்று சொல்லாதீர்
“ஒன்று இரண்டு மூன்று” என்று சொல்லுங்கள்.
**
லேட்டாயிடுச்சு என்று சொல்லாதீர்
“காலந்தாழ்ந்திடுச்சு’ என்று சொல்லுங்கள்.
**
சிம்பிள் என்று சொல்லாதீர்
“எளிது / எளியது” என்று சொல்லுங்கள்.
**
மில்க் என்று சொல்லாதீர்
“பால்” என்று சொல்லுங்கள்.
**
நம்மையே அறியாமல் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைப் பேச்சில் பயன்படுத்தத் தொடங்குங்கள். உங்களிடமிருந்து தோன்றும் சிறு திருத்தத்தால் நம் மொழிமாசு குறையும்.
புவியை நெகிழியிலிருந்து காத்தாக வேண்டிய பெரும்பொறுப்பைப் போன்று தமிழை ஆங்கிலக்கலப்பிலிருந்து காக்க வேண்டிய அரும்பொறுப்பும் நம்மைச் சேர்ந்தது.
இன்றே தொடங்குங்கள். இதைப்போல் இன்னுமுள்ள நூறு நூறு சொற்களைக் கண்டறிந்து களைந்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.
- கவிஞர் மகுடேசுவரன்
[18/06, 8:15 pm] TNPTF MANI: வாசகனுக்கும் புத்தகங்களுக்குமான உறவு
வாசகனுக்கும் புத்தகங்களுக்குமான உறவு வேறு எந்த ஊடகத்தாலும் முறிக்க இயலாத ஒன்று என்றே நம்புகிறேன். அறிவுடனும் கற்பனையுடனும் சிந்தனையுடனும் வாசகன் கொள்ளும் உறவு புத்தக வடிவத்தில்தான் மிக இயற்கையாக உருவாகிறது. புத்தகம் ஒன்றையே தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சாதனமாக வாசகனால் கருத முடிகிறது. மேலும் புத்தகத்துடன் வாசகன் கொள்ளும் உறவு அந்தரங்கமானது. சுயமான காட்சிப் படிமங்களுடன் புத்தக வாசிப்பு சாத்தியமாவதால் - வாசகனுக்கும் ஒரு பங்கு, கற்பனை செய்துகொள்ளும் பங்கு உறுதியாவதில்-சுயதிருப்தி கூடுதலாக ஏற்படுகிறது. புத்தகங்களை வாசகர்கள் கைவிட்டுவிட மாட்டார்கள் என்ற நிலை நாகரிகத்தின்மீதும் எதிர்காலத்தின்மீதும் நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஆறுதல் அளிக்கிறது.
# சுந்தர ராமசாமி
[18/06, 8:15 pm] TNPTF MANI: தன் பலங்களை உணர்வதைக் காட்டிலும், தன் குறைபாடுகளை ஒருவன் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். புதிதாக எழுதத் தொடங்குபவர்களுக்கும் நான் இதைத்தான் ஒரே அறிவுரையாகக் கூற முடியும்.
# அசோகமித்திரன்
[18/06, 8:26 pm] TNPTF MANI: சோகமாய் அமர்ந்திருக்கும் பெண் போல
மனதைக் கவிய வைக்கிறது
இரவில் பெய்யும் மழை
- தாகூர்
[18/06, 8:26 pm] TNPTF MANI: இரவு முழுவதும் அழுதுவிட்டு காலையில் உறங்கும் குழந்தையைப் போலிருந்தது புயல் வீசிய இரவுக்குப் பின் அந்தத் தெரு—- மார்க்சிம் கார்க்கி
[18/06, 10:04 pm] TNPTF MANI: சமாதானத்தைக் கற்றுத் தந்த அளவு சண்டையிடக் கற்றுத் தருவதில்லை அன்பு...சண்டையிடக் கற்றுத் தந்த அளவு சமாதானத்தைக் கற்றுத் தருவதில்லை வெறுப்பு
-படித்தது
[18/06, 10:26 pm] TNPTF MANI: முழு எலுமிச்சையை சக்கரத்தில் நசுக்குவது அறியாமை மட்டுமல்ல, அரியாமையும் கூட!
-அறிவு
[18/06, 10:35 pm] TNPTF MANI: நான் செய்யாத தவறுக்கு என்னிடம் கோபப்படுபவர்களை, மன்னிப்பு கேட்டு தண்டித்துவிடுகிறேன்...!
-p
[19/06, 7:01 am] TNPTF MANI: அம்மாவின்கை
ஊருக்குப் போய் திரும்பிய அம்மா
குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறாள்
குழந்தைகள் கையைப் பார்க்கின்றன
தூக்கி வளர்த்த கையை
சோறூட்டிய கையை
தலை வாரிவிட்ட கையை
தாலாட்டுக்கேற்பத் தட்டிய கையை
தகப்பன் அடிக்க வர
தடுக்க வந்த கையை
அம்மாவின்கை அப்படியே தானிருக்கிறது
குழந்தைகளின் கண்கள் தான்
மாறிவிடுகின்றன சமயத்திற்கேற்ப
#யுகபாரதி
[19/06, 7:27 am] TNPTF MANI: "ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம்"
-டாட் ஸ்கின்னர்.
[19/06, 7:30 am] TNPTF MANI: "மன்னன் எங்கே வியாபாரம் செய்கிறானோ, அங்கே மக்கள் பிச்சையெடுப்பார்கள்"
-சரவணன் சந்திரன்
[19/06, 7:37 am] TNPTF MANI: உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்
-ரோஸ்லின்
[19/06, 7:38 am] TNPTF MANI: சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டதொரு வெளி உண்டு..
அங்கு சந்திப்பேன் உன்னை..!!.
- ரூமி
[19/06, 7:52 am] TNPTF MANI: செருப்புகள் சருகுகளை மிதிக்கிறபோது சப்தமிடுகின்றன, மலர்களை மிதிக்கும்போது
மவுனம் சாதிக்கின்றன
-மு.மேத்தா
[20/06, 7:27 am] TNPTF MANI: பேருந்தில் இடம்பிடிக்க
பூச்சரத்தை ஜன்னல் வழிவைக்கிறாள்
கைக்குட்டை இல்லாத பெண்
-நா.முத்துக்குமார்
[20/06, 7:41 am] TNPTF MANI: “வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்.
-பிரபஞ்சன்
[20/06, 7:44 am] TNPTF MANI: ஒரு நல்ல கதையையோ, கட்டுரையையோ எழுதி முடித்த மனநிறைவில் ஜன்னல் வழியாகத் தெரியும் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது திரண்டெழும் பரவசத்துக்கு இணையாக இந்த உலகில் எதுவுமே இல்லை.
# பாவண்ணன் ('கல்கி' நேர்காணலில்)
[20/06, 7:51 am] TNPTF MANI: தி கிரேட் டிக்டேட்டர் (அந்த மாபெரும் சர்வாதிகாரி) என்ற ஹிட்லரைப் பகடி செய்யும் திரைப்படத் தில் சார்லி சாப்ளின் இறுதியாக நிகழ்த்தும் உரை. “என்னை மன்னிக்கவும், நான் ஒரு பேரரசனாக இருக்க விரும்பவில்லை. அது எனது தொழிலுமல்ல. நான் எவரையும் ஆட்சி செய்யவோ அல்லது வெற்றிகொள்ளவோ விரும்ப வில்லை. என்னால் முடிந்தால் யூதர், ஜெண்டில், கறுப்பர், வெள்ளையர் என்று ஒவ்வொருவருக்கும் நான் உதவியாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் உதவிடவே விரும்புகிறோம். மனிதர்கள் அவ்வாறே இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் துன்பங்களிலிருந்தல்ல மாறாக மற்றவரின் மகிழ்விலேயே வாழ விரும்புகிறோம். நாம் எவரையும் புறக் கணிக்கவோ அல்லது தாழ்வாகவோ நினைக்க விரும்பவில்லை. இந்த உலகத்தில் அனைவரும் வாழ இடமிருக்கின் றது. இந்த உலகம் அனைவருக்குமான வளங்களை வைத்திருக்கின்றது. வாழ்வின் வழியானது சுதந்திரத்துடனும் அழகுடனும் திகழ வேண்டும், ஆனால் நாம் அந்த வழியை இழந்து விட்டோம்.
பேராசை மனிதரது ஆன்மாவை விஷமாக்கியுள்ளது. அது மனித இனத்துக்கு மாபெரும் நிராகரிப்புடன் கூட தடையாகிவிட்டது. அது மனித குலத்தைத் துன்பத்திலும் இரத்த வெள்ளத்திலும் உந்தித்தள்ளியுள்ளது. நாம் நமது வேகத்தை அதிகப் படுத்தியுள்ளோம். ஆனால் நம்மை நாமே மூடிக் கொண்டுள்ளோம். நிறையனவற்றைக் கொண்டு வந்து தந்த மாபெரும் இயந்திரங்கள் நம்மைப் போதாமையை நோக்கித் தள்ளியுள்ளன. நமது அறிவுகள் நம்மை வக்கிரமானவர்களாக மாற்றியுள்ளன. நமது புத்திசாலித்தனங்கள் கடுமையானவையாகவும், கருணையற்றவையாகவும் உள்ளன. நாம் நிறைய யோசிக்கின்றோம். ஆனால் குறைவாக உணர்கின்றோம். நமக்கு இயந்திரங்களை விட மனிதத்துவம் மிகத்தேவை. புத்தி சாலித்தனங்களை விடக் கருணையும் செறிவான செயல்களும் தேவை. இத்தகைய தன்மைகள் இல்லையெனில் வாழ்க்கை வன் முறைக்களமாகிவிடும். இழந்து போகக் கூடியதாகிவிடும்.
வானூர்திகளும், வானொலிகளும் நம்மை நெருங்கி வரச் செய்துள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகள் இயற்கையாகவே நல்லவற்றிற்காக ஏங்குகின்ற உலக சகோதரத்துவத்துக்காக ஏங்குகின்ற மனித குலத்தை ஒன்றிணைக்க வேண்டும். இப்போது கூட என்னுடைய குரலானது உலகிலுள்ள, இன்றைக்கு நிலவும் இந்த அமைப்பு முறைகளால் சித்ரவதைக்காளான, சிறைப்பட்ட நம்பிக்கையோடிருக்கும் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. எனது குரலைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள். நமது துயரம் என்னவென்றால் தற்போதைய துன்பமாகக் கடந்து கொண்டிருக்கும் பேராசை. மனித குலத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறை கொள்வோரிடம் கசப்பான அனுபவமாகியுள்ளதுதான். மனித நிராகரிப்புக்கள் சென்றொழியும், சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள், மனித குலத்திடமிருந்து பறித்த அவர்களின் அதிகாரம் மனித குலத்திடமே திரும்ப வரும். மனிதர் என்றும் மரித்துப்போக மாட்டார், சுதந்திரமும் என்றும் மறைந்து போவதில்லை…
வீரர்களே, உங்களை அதிகாரத்துக்குட்படுத்துபவரும், அடிமைப்படுத்துபவரும், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன யோசிக்க வேண்டும், என்ன உணரவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கும் கொடுங்கோலர்களிடம், உங்களை ஒப்புக்கொடுக்காதீர்கள். உங்களைப் பயிற்றுவிக்கும், உங்கள் உணவைத் தீர்மானிக்கும், உங்களை மந்தைகளைப் போல நடத்தும், பீரங்கிகளில் குண்டுகளாகப் பயன்படுத்தும் சர்வாதிகாரிகளிடம் உங்களை ஒப்புக் கொடுக்காதீர்கள். இயந்திர மனிதர்களிடம் உங்களை ஒப்புக் கொடுக்காதீர்கள்! நீங்கள் இயந்திரங்களல்ல! நீங்கள் மந்தைகளல்ல! நீங்கள் மனிதர்கள்! நீங்கள் மனிதகுலத்தின் மீதான அன்பை உங்கள் இதயங்களில் வைத்திருங்கள்! நீங்கள் எவரையும் புறந்தள்ளாதீர்கள்! அன்பற்றவர்களையும் மனித இயல்பு மறந்தவர்களையும் நிராகரியுங்கள் வீரர்களே! அடிமைப்படுத்துவதற்காகப் போராடாதீர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுங்கள்!
புதின லூக்கா 17வது அதிகாரத்தில் எழுதியுள்ளார். “கடவுள் ராஜ்ஜியம் மனிதரிடத்திலே” அவர் ஒரு மனிதரை மட்டும் சொல்லவில்லை. ஒரு குழுவைச் சார்ந்த மனிதரை மட்டும் சொல்லவில்லை. அனைத்து மனிதர்களிடமும் என்றே குறிப்பிட்டுள்ளார். நீங்கள், மக்களாகிய நீங்கள் அதிகாரமுள்ளவர்கள். இயந்திரங்களை உருவாக்கும் திறனுள்ளவர்கள். மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுள்ளவர்கள்! மக்களாகிய உங்களிடம் இந்த வாழ்க்கையைச் சுதந்திரமாகவும், அழகியதாகவும், அற்புதமான பயணமாகவும் மாற்றிக்கொள்ளும் சக்தியுள்ளது!.
மேலும், ஜனநாயகத்தின் பெயரால், நாம் நமது சக்தியைப் பயன்படுத்துவோம், எல்லோரும் ஒன்றிணைவோம். நாம் ஒரு புதிய உலகத்திற்காகப் போராடுவோம். மனிதருக்கெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்புத் தருகின்ற, இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும், முதியவர்களுக்குப் பாதுகாப்பையும் தருகின்ற ஒரு நாகரிகமான உலகத்திற்காகப் போராடுவோம். ஆனால் இத்தகைய வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம், கொடுங்கோலர்கள் அதிகாரத்துக்கு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைக்கிறார்கள்! அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றப் போவதில்லை! அதற்கான மன உறுதியும் விருப்பமும் அவர்களிடம் இல்லை!
சர்வாதிகாரிகள் தங்களைச் சுதந்திரமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை அடிமைப்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அத்தகைய வாக்குறுதிகளை உண்மையிலேயே நிறைவேற்றப் போராடுவோம்! தேசங்களின் தடைகளைக் கடந்தும், பேராசைகளைக் கடந்தும், நிராகரிப்பு, சகிப்பின்மையைக் கடந்த சுதந்திர உலகத்துக்காகப் போராடுவோம். நாம் பகுத்தறிவு நிறைந்த உலகத்துக்காகப் போராடுவோம். அறிவியல் மனிதகுலத்தின் மகிழ்வுக்காகப் பயன் படும் உலகத்துக்காகப் போராடுவோம்! வீரர்களே! ஜனநாயகத்தின் பேரால் நாம் ஒன்றிணைவோம்!
சிறீரசா எழுதிய உலக சினிமா வரலாறு – பாகம் 1-லிருந்து
[20/06, 7:56 am] TNPTF MANI: பார்த்த இடமெங்கும்
கண் குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதிந்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்
-சிவராமு
[20/06, 12:31 pm] TNPTF MANI: முன்போல் அன்பில்லை எனாதே,
அடிக்கடி உபசரித்துக் கொண்டிருக்க இப்போது நீ விருந்தினர் அல்ல, சொந்தக்காரி!
-யாத்திரி
[20/06, 12:47 pm] TNPTF MANI: யானை டாக்டர்.கே
-யுவகிருஷ்ணா
‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.
மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.
ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.
யானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.
ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா?
1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.
சமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.
இந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.
சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.
கிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.
“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.
இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.
[21/06, 6:50 am] TNPTF MANI: நீங்கள் என்னைத் தண்டியுங்கள்.அது பற்றி எனக்குக் கவலை இல்லை. வரலாறு என்னை விடுதலை செய்யும்.
- பிடல் காஸ்ட்ரோ
[21/06, 7:12 am] TNPTF MANI: பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப்போன விஷயங்களை வயது தானே கற்றுக்கொடுத்து விடுகிறது
.-எஸ்.ரா"
[21/06, 7:13 am] TNPTF MANI: 'கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதை பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன ? திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா ? பெரிய சவால்தான் இது'.
-சுந்தரராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள்
[21/06, 8:25 pm] TNPTF MANI: இன்னிக்கு எல்லா நண்பர்களும் வேலை நிமித்தமாய் ஒன்றும் பதிவிடவில்லையா..
மறுபடியும் வேங்கை மகன் நான்தானா😂
[21/06, 8:25 pm] TNPTF MANI: ஒரு பெண் இல்லாத வெறுமைக்கு ஒரு பொழுதையே சலிப்புமிக்கதாக மாற்றும் ஆற்றல் எப்படியோ வந்துவிடுகிறது. நம்மைச் சுற்றி நிகழும் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.
-பாவண்ண்ன்
[21/06, 8:27 pm] TNPTF MANI: எழுத்தாளர் பாவண்ணனின் ஒரு கூரையின் கீழ் கதை குறித்து அவருக்கு எழுதி அனுப்பினேன் அதற்கு அவர் அளித்த பதில் தான் மேலுள்ள பதிவு👆
ஒரு கூரையின் கீழ் கதையில் நெசவாளியின் பிம்பத்தை கொண்டு வந்திட்டீங்க சார். நூல் வந்தவுடன் வேலை செய்ய கிடைத்த ஆசுவாசம் இனிமை.ஆனால் ராஜலட்சுமியின் தேநீர் இல்லாதது வெறுமையை காட்டியது.பொதுவாய் ஒரு பெண்ணை பணியிடத்திலோ, பஸ் ஸ்டாப்பிலோ பார்ப்போம் சார். காதலால் அல்ல.அவள் இருப்பது மனதுக்கு ஒரு சந்தோசம்.அதை பல நேரத்தில் உணர்ந்தவன்.அவர்கள் இல்லாதபோது கிடைக்கும் வெறுமையை சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.இதுதான் இக்கதையின் இறுதிக்கும் பொருந்துகிறது. ஒரு பெண்ணின் வெற்றிடத்தை நிரப்பமுடியாதா சார்?
பாவண்ணன்:
ஒரு பெண் இல்லாத வெறுமைக்கு ஒரு பொழுதையே சலிப்புமிக்கதாக மாற்றும் ஆற்றல் எப்படியோ வந்துவிடுகிறது. நம்மைச் சுற்றி நிகழும் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.
-பாவண்ண்ன்
[22/06, 1:06 pm] TNPTF MANI: இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் போராட்டத்தில்/ இயற்கை வேள்விக்கு தனது இன்னுயிர் ஈந்த தூத்துக்குடி தமிழச்சி ஸ்நோலின் படைப்புகள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் படைப்பாளர் சங்கத்தின் 14வது மாநாட்டின் நினைவாக புதுச்சேரியில் நாளை வெளியிடப்படுகிறது. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு இது.
தமிழாகவும் இனமாகவும் இயற்கையாகவும் வாழ்ந்துள்ளார்.அவரது படைப்புகளை வெளியிட்டு நான் பேசுகிறேன்.
"பேசாத வார்த்தைகளைவிட
பார்க்காத கண்களைவிட
நினைத்துக்கொண்டிருக்கும் வலி அதிகம்"
- ஸ்நோலின் வரிகள். தூத்துக்குடி வலியாக மட்டும் முடிந்துவிடாமல் அடியாக மாறும் நாளே அந்தக் கவிதைக்கான உண்மை விமர்சனம்.
-திருமாவேலன்
[22/06, 10:16 pm] TNPTF MANI: "சிரிக்கறப்ப நீ எப்படி இருக்கே தெரியுமா?"
"எப்படி"
"பொழுது விடியறது மாதிரி"
-ஜெயமோகன்
-காடு
[22/06, 10:20 pm] TNPTF MANI: உன் அழைப்பென்றெண்ணி எடுத்த
அலைபேசியில்
அழைத்தது யாரென்றாலும்...
யாரோதான்.
-சொரூபா
[22/06, 11:22 pm] TNPTF MANI: என் அன்பு,
உன் கைகளை விட்டிறங்க மனமில்லாத
ஒரு குழந்தையைபோல.
அதை என்றைக்குமாக
உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
- பாப்லோ நெரூடா.
[23/06, 12:47 am] TNPTF MANI: பசி நேரத்தில் சோறு இல்லாவிட்டால் தாக்குப்பிடித்துக் கொள்கிறேன்.காசு இல்லாவிட்டால் தான் கைகள் நடுங்கத் தொடங்கிவிடுகின்றன"
-ராஜன்
[23/06, 6:47 am] TNPTF MANI: தோல்வியும் வெற்றியும் மனநிலைகள்தான்.ஆனால் இதை உணர்வதை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும்
-லா.ச.ரா
No comments:
Post a Comment