Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-7

கற்றதும் பெற்றதும்-7

“வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்.

-பிரபஞ்சன்

கடந்த இரு ஆண்டுக்கு முன் கோவை தமுஎகச சார்பில் மூன்று நாள் இலக்கிய முகாம் நடைபெற்றது.அதில் ஒரு நாள் முழுவதும் பிரபஞ்சனிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.மாலை 5மணி முதல் 8மணி வரை சிறுகதை எழுதும் நுட்பத்தை தனக்கே உரிய பாணியில் விளக்கினார்.கதையை துவக்குவது, கொண்டு செல்வது,
சுவாரஸ்யப்படுத்துவது, ஒவ்வொருவரும் ஒரு வரி சொல்ல அதிலிருந்து ஒரு கதை உருவாக்கினார்

அவரின் கதையில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை காபி சாப்பிடுவது.மற்றும்.பெரும்பாலும் கதை நாயகி சுமதி என இருக்கும். இதை அவர் இறுதிவரை சொல்லவேயில்லை.
அவரின்  பேச்சு தனி ரகம்.முதன்முதலாய் 2008ல் திருப்பூர் புத்தகத்திருவிழாவில் குமாஸ்தாவின் மரணம் ஒரு தும்மலால் நிகழ்ந்ததை மிக சுவைபட கூறினார்.

அவரின் கட்டுரைகள் வாசிக்க வாசிக்க அலாதி இன்பம் தருபவை. அவ்வகையில் தேர்ந்தெடுத்த கட்டுரையை முருகேச பாண்டியன் தொகுத்திருக்கிறார்.அதிலிருந்து

#மேன்சன்

அறை என்பது படுக்க மட்டும்தான்
என்பது, மேன்ஷன்கள் தமக்குள் இயற்றிக்கொண்ட இலக்கணம்"

ஒரு மேன்சனை இப்படி அறிமுகம் செய்வார்.ஒரு கட்டில் போட்டு அறை எழுப்பிவிடுவார்கள். மேன்ஷன்களில் இருவகையினர் உண்டு.லபோதிபோ அர்த்தமற்ற கூச்சல்,இரண்டாவது பழைய ஃபேனிலிருந்து காற்றை சுவாசித்து படுத்திருப்பது.

அவர்களின் பறவை எந்த வானில் ஓடும்,கண்ணுக்கு தெரியாத துயர தேவதையோடு ஒன்று சேர்ந்து படுக்கைக்குச் செல்கிறான்

#மேற்கோள் கதை

பிரபஞ்சனின் மேற்கோள் கதைகள் அருமையாய் இருக்கும்.அழகு குறித்த ரஷ்ய கதை எழுதுகிறார்.

"போர்க்களத்தில் பீரங்கியால் காயம்பட்டு முகம் சிதைந்து அடையாளம் மாறி ஊருக்கு வருகிறான்.பெற்றோரை பார்க்கிறான்.அடையாளம் தெரியவில்லை.மகனின் நண்பன் எனக்கூறி தங்குகிறான். ராணுவத்துக்கு கிளம்பும்முன் சிநேகிதியை விசாரிக்கிறான்.

சில நாட்களில் தாயிடமிருந்து கடிதம் வருகிறது.உன் நண்பனை பார்த்தால் சந்தேகமாய் இருந்தது.உன்னைப்போல இருந்தான் எனக் கூறுகிறாள். உண்மையை எழுது என்கிறார்.

உண்மையை எழுதியவுடன் பெற்றோர் முகாமுக்கே வருகின்றனர்.கோரமுகத்தை கூறுகிறான்.அதற்கு பெற்றோர் இப்போதுதான் உன்னை கண்டு பெருமையடைகிறேன்.சிநேகிதியும் அவன் நாட்டிற்காக போராடிய வீரன் அல்லவா? எனக்கூறி காதலை ஏற்றுக்கொள்கிறாள்.

கதையின் தலைப்பு தேசத்தின் முகம் என முடிக்கிறார்.

மேலும் ஜூவியில் கதை மழை எனும் தொடரும்,தி இந்துவில் ஒருதொடரும் எழுதியிருக்கிறார்.

#செருப்பின் கதை

ஒரு நாளில் வாங்கப்பட்ட புது செருப்பு தொலைந்த்ய்விடுகிறது. அந்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாக பதிவு செய்கிறார்.

செருப்பின் வாழ்க்கை பதற்றம் நிறைந்தது.எந்த பாதத்தை வந்தடையப் போகிறோம் எனும் பதற்றம் இருக்கும்.கடத்தி விடுவார்கள்,தேயும்போது உடல் இளைக்கும்,தூக்கி எறியும்போத் புறக்கணிக்கப்படும் துரதிருஷ்டம்.

அதேபோல்.இழி காரியங்களில் முதல்படி "செருப்பால் அடிப்பேன்" என்பது.அடித்தலை காட்டிலும் அடிப்பதாக கூறுவது குற்றம்.

வெறுங்காலோடு நடக்க பழகிக் கொள்ள வேன்டியதுதான்,அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது.
-திருடு போன செருப்பை நினைத்து எழுதியிருப்பார்.

#பிரபஞ்சனின் வரிகள்

* எங்கள் வீட்டுக் கட்டில் குட்டி போட்டது
"தொட்டில்"

*மேடைமேல் நின்று கீழே உள்ள உங்களிடம் கக்குகிற  விஷயங்களை ஒரு பிஸ்கட்டைப் போலக் கவ்விக்கொண்டு வாலை ஆட்ட வேண்டும்

*நல்ல விஷயங்களை யார் கற்றுக் கொடுத்துவிட முடியும்?
அது நமக்குள்ளேயே இருக்கிறது. கண்டுபிடிக்க வேணும்

*பல் துலக்குவது என்பது ஓர் அனிச்சை செயல்,காலையில் எழுந்ததும் உணர்வின்றி செய்யக்கூடிய ஓர் காரியம்

*" காற்று அடிக்கக் கூடாது. தொடவேண்டும். அதுதான் சுகம்.

-சமகாலத்தில் வாழும் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர்.
முறைப்படி தமிழும்,
இசையும் கற்றவர். கட்டுரையில் துணிச்சலுடன்,உண்மையுடனும் எழுதுவார்.தற்போதைய எழுத்தாள்ர்களில் முக்கிய இடம் பிரபஞ்சனுக்கு உண்டு.

-தொடரும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment