Thursday, 16 August 2018

படித்தது

[07/05, 7:13 am] TNPTF MANI: தாகூர் பிறந்த தின பகிர்வு!

யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட...

- தாகூர்

[07/05, 6:17 pm] TNPTF MANI: நிரூபனம் ஆகாத உண்மைகளே பொய்கள் எனப்படுபவை
-p

[07/05, 8:59 pm] TNPTF MANI: சொல்ல விரும்பியதெல்லாம்
சொல்லில் வருவதில்லை

-சி.மணி

[08/05, 6:41 am] TNPTF MANI: ஒரு தகிக்கும் பகலைக் கடப்பது போலில்லை
ஒரு கைவிடப்பட்ட இரவைக் கடப்பது
ஒரு கசந்த அனுபவத்தைக் கடப்பது போலில்லை
ஒரு பச்சைத் துரோகத்தைக் கடப்பது
ஒரு குளிர்ந்த புன்னகையைக் கடப்பது போலில்லை
ஒரு நிராதரவின் கண்ணீரைக் கடப்பது.

பிழைப்புக்காக புலம்பெயர்ந்த ஒருவனின்
தாபத்தைக் கடப்பது போலில்லை
சுருதி சேர்த்துவிட்டு வாசிக்க இயலாமல் உறங்கும்
துணையைச் சிலாகித்து
நீ எழுதும் வறட்சிமிகு கவிதையைக் கடப்பது.

சுயநலம் மிகைத்த ஒரு வணிகப்பேச்சைக்
கேட்பது போலில்லை
அறவிழுமியங்களின் அரிதாரத்துடன்
கபடநாடகச்சூது மலிந்த உன் உரையைக் கேட்பது.

எல்லோரும் அயோக்கியர்கள்
எவரையும் நம்பாதே என்கிறது வணிகச்சூத்திரம்
மனிதமே புகலிடம், நம்பிக்கையின் மீது
ஒருபோதும் நம்பிக்கை இழக்காதிருங்கள்
என்கிறது ஞானசாஸ்திரம்.

ஒரு ஓநாய்ப்பொழுதில் சாட்சியாகவும்
ஒரு ஸிஹ்ர் மிகையிரவில் கெட்ட ஜின்னாகவும்
ஒரு கார்மேகப்பொழுதில் மீட்சியாகவும்
யாமே இருக்கிறோம் என்கிறான் வழிப்போக்கன்.

- நிஷா மன்சூர்

[08/05, 7:23 am] TNPTF MANI: முடி உதிர்வதை தடுப்பது எது?
"தரை"

-சுஜாதா

[08/05, 7:28 am] TNPTF MANI: துன்பங்களை மறப்பதானால் வாழ்க்கை முழுமை பெற்றுவிடாது.துன்பத்தை ஓர் அனுபவமாக ஜீரணித்துக்கொண்டு கடுமையை மென்மையாக,புளிப்பை இனிப்பாக மாற்றிக்கொண்டு கனிவதன் மூலமே வாழ்க்கை பக்குவம் பெறுகிறது
-தாகூர்

[08/05, 7:42 am] TNPTF MANI: பிரிவு

நீர்காணா ஏரிபோல நெஞ்சு பிளக்க
தூறலிடைக்காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல...
-சி.மணி

[08/05, 1:42 pm] TNPTF MANI: "மரத்தில் இரண்டே இரண்டு பூக்கள்"
அதில் வாடாத பூ மரத்துக்கு,
வாடிய பூ எனக்கு"

-படித்தது

ஒரு கவிதை உருவாவது என்பது நெஞ்சில் நெருப்பைச் சுமந்து திரிவதைப்போல

-கார்லஸ் டோனர்-பார்சிலோனா கவிஞர்

[08/05, 8:11 pm] TNPTF MANI: பறவைகளே வந்து விட்டீரா!                                                                   
அந்த வட நாட்டுச் சுடு வெயிலில்
வெந்து விட்டீரா!                          
நூலிடறி நூலகரே விழுந்து விட்டாரே!                                            
தடை நூறு தந்தும் எம் பிள்ளை
எழுந்து விட்டாரே!                         
கைநாட்டு கையெழுத்தாய் மாறக் கூடாதாம்!                                
நாம் கல்வி எனும் ஏணியிலே ஏறக் கூடாதாம்!                               
ஈரோட்டுப் பேருழைப்பை எண்ணிப் பார்!                                             
இந்த இழிவுகளை எவர் இனியும் மன்னிப்பார்!                                     
கல்வி கற்றும் களம் கண்டார் அம்பேத்கார்!                                          
அந்தக் கல்வி யற்றும் கல்வி தந்தார் கரிசல் கார்!                                  
எவன் நாட்டை எவன் வந்துத் த த்தெடுக்க!                                     
இனித் தமிழ்த் தலைமை தான்
வேண்டும் வென்றெடுக்க!          

அப்பாவின் மது குடிக்கு அப்பாவி
மகன் செத்தான்!              
நேற்று அன்பு மகன் தேர்வெழுத
அப்பாவே தான் செத்தான்!    
தொடரும் இழவுகளைத் துண்டிக்க க் கூடாதா?                      
இந்தத் துயருக்கு வேர் தேடித்
தண்டிக்கக் கூடாதா!                      
எதை விற்றும் பிள்ளைகளைப்
படிக்க வைப்போம்!                                
அதில் இடையூறு எது வரினும்
முடித்து வைப்போம்!               

இரக்கமற்ற பாவிகளே!                                                    
இழுத்தடித்து நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பிள்ளை
பதில் சொல்லி விட்டான்!                                                                             
பிள்ளை கேட்கும் இந்த ஒரே
ஒரு கேள்விக்கு மட்டும் இழுத்தடிக்காமல்
பதில் சொல்லுங்கள்....                                                                           
என் அப்பா எங்கே?                                                             

             -  கவிஞர் அறிவுமதி

[08/05, 9:01 pm] மினிமீன்ச்: எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்க முடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில்கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக் கணங்களையே நீட்டி முடிவற்ற காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி.!

- யட்சி
-ஜெயமோகன்

[08/05, 9:01 pm] மினிமீன்ச்: ஞானம்.!

கண்கள் திறந்திருக்கவும் வேண்டும்
ஆனால் பார்க்கவும் கூடாது...
என்பதால்,
நான் குருடனாக இருக்கிறேன்
இருந்தும் காண்கிறேன்.!

-ஃபரீதுத்தீன் அத்தார்

[08/05, 9:02 pm] மினிமீன்ச்: பஞ்ச பூதங்களும் தாதுப்பொருட்களும்
மனிதனின் பார்வையில் உயிரற்றவை.
ஆனால் அவை இறைவனின் பார்வையில்
உயிருடன் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.!

-ரூமி

[08/05, 9:02 pm] மினிமீன்ச்: என்னதான் இருக்கக்கூடும்
ஞானிக்கு உள்ளே
ஆனால் மனிதனுக்கு அப்பால்?

-ஹம்ஜா பீட்டர்

[08/05, 9:02 pm] மினிமீன்ச்: மகான்கள்.

வேதத்தின் சாரத்தை நான் எடுத்துக்கொண்டேன்
அதன் எலும்புகளை வீசி எறிந்தேன்
சண்டையிடும் நாய்களுக்கு.!
                                             
-மௌலானா ரூமி.

[08/05, 9:02 pm] மினிமீன்ச்: நீ
என்னுடன் இருந்தாய்
இரண்டாம் நபர் யாரும் இல்லாதபோது.!

- மூமின் கான் மூமின்

[08/05, 9:03 pm] மினிமீன்ச்: பொறுப்பற்ற பொது ஜனம்.
தனி மனிதனாய் இருக்கிற போது
உண்டான
பொறுப்பு, பயம்...
பொது ஜனமாய்க் கூடுகையில்
சிதறி விடுகிறது.!

-பாலகுமாரன்

விதி

நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி

- வல்லிக்கண்ணன்

No comments:

Post a Comment