[30/05, 6:38 pm] TNPTF MANI: எப்போதும் தனியாகவே இருக்கும் இந்த மனத்திற்குத் தெம்பூட்ட நான் எதையாவது கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதுகேட்கும் எல்லாவற்றிற்கும் பதிலாக வேறு ஒன்றைத் தரமுடியும் அளவிற்கே இருக்கிறது வாழ்க்கை.
- கண்டராதித்தன்
[30/05, 6:44 pm] TNPTF MANI: நான்குகட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம் ஏகாம்பரம் என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம் மூதேவி
உன் கட்டைக்குரல்தான் முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்கா ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து வந்த குரல்.
-கண்டராதித்தன்
[30/05, 6:49 pm] TNPTF MANI: நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச்
செலவழிக்கிறான் ஒருவன்.
அதையொரு பன்னீர்க்கரும்பைப்போல்
கடித்துத் துப்பிச்செல்கினாறன் மற்றொருவன்.
-கண்டராதித்தன்
[30/05, 6:55 pm] TNPTF MANI: மனக் குழப்பத்திற்கு மருந்து இருக்கிறது. ஒன்று தன்னை மறக்கும் அபார தெய்வபக்தி. அதாவது கேள்வி கேட்காமல், ஆவேசப்படாமல் ஆடுகள்போல எல்லாம் அவன் செயல் என்று இருப்பது. இன்னொன்று மூளை சலித்து களைத்துப்போகும்படி அதற்கு வேலை கொடுப்பது. இப்படி இரண்டில் ஒன்றைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்தால்தான் நம்மால் தப்ப முடியும்”
-புதுமைப்பித்தன்
[30/05, 7:01 pm] TNPTF MANI: “சம காலத்தின் மீது - இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயம் சரியானதா, தவறானதா என்று முடிவெடுக்கக் குறைந்தது 20 வருஷங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் அடுத்த சம காலம் வந்துவிடுகிறது
-அசோகமித்ரன்
[30/05, 7:52 pm] TNPTF MANI: மழைக்கு பின்னான காற்றில்
தலை துவட்டுகிறது மரம்!
-மித்ர தேவன்
[31/05, 7:55 am] TNPTF MANI: "பெயரில் என்ன இருக்கிறது.
நனைப்பதற்காகப் பெய்தால்
மழை
நினைப்பதற்காகப் பெய்தால்
சந்தோஷம்.
அவ்வளவுதான்"
- மணி சண்முகம்.
[31/05, 9:03 pm] TNPTF MANI: நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம் வணக்கம் என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டே போனான்.
இந்த முறை
உன்னை உறுதியாக அறுத்து விட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையை ஆட்டிக்கொள்வதென
எப்படி தலையாட்ட வேண்டுமென்று
ஆட்டி ஆட்டிப்பார்ப்பது
இது 119 ஆவது முறை
-கண்டராதித்தன்
No comments:
Post a Comment