Thursday, 16 August 2018

மணி

[23/05, 7:02 am] TNPTF MANI: வழுக்கி விழுந்தா வாட்ஸ் அப்
வருந்தாம விட்டா டேஞ்சர் அப்பு.!!

யாரு எவருன்னு தெரிதாது
அடிடா மேளம்,புடிடா தாலியனு நம்மையும் மதிச்சு வாட்ஸ் அப் குருப்பில இணைச்சிடுவாங்க..

புதுசா சேர்ந்த அன்னைக்கே விலக கூடாதுனு மிஷ்கின் படம் மாதிரி அமைதியா இருந்தா, ஆனா அங்க ஓடுறது என்னமோ பேரரசு படம் மாதிரி டெரர் காட்டும். நெட் ஆப் பன்னி ஆன் பன்னா அம்பது மெசேஜ் அலெக்கா வந்து நிற்கும்

என்னனு போய் பார்த்தா காலையில நியூஷ் பேப்பர்ல வந்த நியூஸ் சாயங்காலம் அப்லோடு பன்னுவாங்க..ஏப்பா மனசாட்சியே இல்லயா..தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி அடிச்சு பார்க்க எங்க மூஞ்சியா கிடச்சுது..

சரி ஒரு ரண்டு நாள் தம் கட்டலாம்னு பார்த்தா..
எல்லா குருப்பிலயும் இயற்கையின் காதலன் ஒருத்தன் இருப்பார்.அவரோட வொர்க் என்னனா குழந்தை போட்டோ,இயற்கை போட்டோவை மட்டும் போட்டு குட் மார்னிங்,குட் நைட் சொல்றது..நாட்டில இவங்களுக்கு மட்டுந்தான் விடியுதா

ஒரு மாசம் கழிச்சி நெட் கார்டு போட்டவங்க அலப்பறை அதுக்கும் மேல..
ராபின் சர்மா எழுதின who cry you will die
பின்லாந்து கல்விமுறை,
சுகிசிவம் ஸ்பீச் ஆடியோ,
வைரமுத்து ஆரோக்ய கவிதை,
விண்வெளி புயல் வர்றது,
ஓஷோ கதை-அதுவும் புதுசா இருந்தா, கூட பரவால்ல,பாத்து பாத்து மனப்பாடம் ஆன கதை,
எலுமிச்சை,மஞ்சள் மகிமை,
குட்டிக்கதை னு சொல்லிட்டு  ஒரு கி.மீ நீளக்கதை..

செத்துப்போன ஜாக்குவார் ஆனந்த் எந்திரிச்சி வந்த மாதிரி இதை அடுத்த குருப்புக்கு அனுப்புனா ஒரு மேஜிக் வரும் னு ஜல்லியடிப்பது..அடேய் போயிடு.கிரீன் டீ எடுத்து மேல ஊத்திருவேன்

அந்த அன்னிக்கு யாரு ஹாட் நியூசோ அல்லது பிறந்றநாளோ அவுங்க பொறந்தநாளை முன்னிட்டு 3ஜிபி ப்ரீ,4ஜிபி ப்ரீ னு எல்.கே.ஜி குழந்தை மாதிரி நம்பி அனுப்புறது..நம்மையும் நம்ப வைக்க வோடபோன்,ஏர்டெல் இந்த நெம்பருக்கு அனுப்பி செக் பன்னுங்கனு உதார் உடுவது

இந்திய தேசிய கீதம் யுனெஸ்கோ வில் செலக்ட் ஆயிடுச்சினு டுமீல் விடிவது.உங்க தாய் நாட்டுப்பற்றுக்கு அளவே இல்லையா

கோவில்பட்டி ஆர்.கே ஸ்கூல் பஸ் ஆக்ஸிடண்ட்.எல்.கே.ஜி குழந்தை உயிரிழப்பு.இதை நீங்க புதுசா படிச்சா இணையத்துக்கு வந்து ஒருவாரந்தான் ஆச்சுனு அர்த்தம்.

கீழே உள்ள மாணவிக்கு கண்,காது கேட்காது ணு போட்டு ஒரு மொபைல் எண் குடுத்திருப்பாரு.அந்த எண்ணே உபயோகத்தில் இருக்காது

ஒரு செய்தி சுடசுட தந்தா தான் அது செய்தி.இல்லன்னா அது வாந்தி.உதாரணத்துகு இன்னிக்கு மதியம் பதவிப்பிரமானம் முதல்வர் எடுத்தார்னா இப்ப நைட் பத்து மணிக்கு அந்த செய்தியை போட்டால் அபத்தம்.

ஒரு வீடியோ அப்லோட் செய்தா அது எதை பத்தினு சொன்னாதான் அதை பதிவிறக்குவதா வேண்டாமானு தெரியும் இல்லன்ன அது க்ளியர் சார்ட்டில் போயிடும்.

ஆரோய்மாய் பதிவிட
*புதிய செய்தியா இருக்கனும்
*இதுக்கு முன்னாடி போட்டிருந்தா விட்டுறணும்.
*வித்தியாசமான புகைப்படமோ,வீடியோ வா இருந்தா மட்டும் பதிவேற்றனும்
*கவிதைங்கிற பேர்ல சாராயம்.காய்ச்ச கூடாது
*குட்டிக்கதை இதுவரை தெரியாத கதையா இருந்தா பகிரலாம்
*வெறுமனே குட்மார்னிங்,காலை வணக்கம்,மதிய வணக்கம் போடதீங்க.நம்மென்ன ஜெயில்லியா இருக்கோம்

*அமைச்சர் இலாக்கா ஒரே நாளில் எல்லாரும் போடாம தினம் ஒருத்தரா பதிவிடுங்க
*234எம்.எல்.ஏ ஈமெயில்.ஐடி அனுப்புவது.இதெல்லாம் நடக்கிற காரியமா செட்டியார் மதர்
*உதவி தேவை செய்தியை உறுதிப்படுத்திட்டு அனுப்புங்க

இது மாதிரி செஞ்சா
வரலாற்றில் இடம்பிடிப்பதை விட வாட்ஸ் அப்பில் இடம்பிடித்தான்னு வரலாறு நாளைக்கு பேசும்.புவியியல் புருவம் உயர்த்தும்.குடிமையல் கும்பிடு போடும்

இல்லைனா ஆடுகள் தாங்கள் ஆடுகள்னு நினைக்கும் போது வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து விலகிவிடும் நிலைமை ப்ரோ
[23/05, 11:21 am] TNPTF MANI: நடிகர்களே! இப்போது

புறப்பட்டுவிடாதீர்கள்

உங்களுக்கு மூச்சுத்திணறல் ஆகிவிடும்

எல்லாம் அடங்கட்டும்

இன்னும்தான்

தேர்தலுக்கு நாளிருக்கிறதே!

நடிகர்களே! உங்கள்

அண்ணன்கள்

நன்றாக பேட்டி

கொடுத்துக்கொண்டு

பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இருக்கட்டும்

எங்கள் அண்ணன்கள்தான்

செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே! உங்கள் மகள்கள்

பாதுகாப்பாக படம் எடுத்துக்

கொண்டிருக்கிறார்களா?

பாதுகாப்பாக நடித்துக்

கொண்டிருக்கிறார்களா?

இருக்கட்டும்

எங்கள் மகள்கள்தான்

செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே!

இவர்கள் அரசியல்வேறு

உங்கள் அரசியல் வேறா?

இவர்களுக்கு சுடுகாடு!

உங்களுக்கு சட்டமன்றமா?

ஓ...நாடாளுமன்றமுமா?

நல்லது நடிகர்களே!

கிளிசரினோடு

தேர்தல் பிரச்சாரத்திற்குப்

புறப்படுமுன்

உங்கள் எசமானர்களிடம்

கேட்டுச் சொல்லுங்கள்...

எங்கள் உறவுகளின் சாவுக்காக

நாங்கள்

கொஞ்சம்

அழுதுகொள்ள

அனுமதிகிடைக்குமா!!

-அறிவுமதி
[23/05, 4:14 pm] TNPTF MANI: நண்டூர நெல்லு
நரியோட கரும்பு
வண்டியோட வாழை
தேரோட தென்ன

*நெல்லு நட்டா ரெண்டு நாத்துக்கு மத்தியில் நண்டோடணும்;

கரும்பு நட்டா ரெண்டு கரும்புக்கு மத்தியில் நரியோடணும்

வாழநட்டா ரெண்டு வாழைக்கு மத்தியில் வண்டியோடணும்

தென்ன நட்டா மத்தியில் தேரோடனும்
[23/05, 7:06 pm] TNPTF MANI: வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

விளக்கம்:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்
[23/05, 11:33 pm] TNPTF MANI: ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு அவமானம் இருக்கிறது
-பாலகுமாரன்
[24/05, 6:57 am] TNPTF MANI: முரண்டு

இறந்தவர்கள்
பிடிவாதக்காரர்கள்.
கங்கைநீர் வாயில் விட்டாலும்
விழுங்க மாட்டார்கள்.
நாம்
சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும்
அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் மடக்கிய விரல்களை
உடைக்காமல் பிரிக்க முடியாது நம்மால்.
மண்ணால் விழுங்கப்படுகையில்
தீ எரிந்து ஏறுகையில்
சற்று முகம் சுளிப்பதுகூட இல்லை.
அவர்கள் செய்யமாட்டோம் என்று முடிவெடுத்தால்
முடிவெடுத்ததுதான்.

-கல்பற்றா நாராயணன்
[24/05, 7:05 am] TNPTF MANI: படிப்பு

புரியவேயில்லை
அவளுக்கு
பட்டுப்பூச்சி படம்காட்டி
டீச்சர்
வண்ணத்துப் பூச்சி
என்று
கற்பித்துக் கொண்டேஇருந்தது.

கடைசியில்
கஷ்டப்பட்டு
அவளும்
வண்ணத்துப்பூச்சி
என்று
சொல்ல ஆரம்பித்தாள்.

பட்டுப்பூச்சி என்று
அதை
அதன் வீட்டில்
கூப்பிடுவார்களாக இருக்கும்
என்று எண்ணியபடி.

-படித்தது
[24/05, 10:02 am] TNPTF MANI: குடும்பம் என்பது எவ்வளவு தின்றாலும்செரித்துக்கொண்டே இருக்கும் விநோத மிருகம். அதன் வயிற்றில் எப்போதும் பூர்த்தியடையாதபெரும்பசியின் தீ கனன்று எரிகிறது. இதற்குஉணவிடுவதற்காக ஆண்கள் ஆயுள் முழுவதும்ஓடி ஓடி களைத்துப் போகின்றனர். வேலையின்களைப்பில் இன்னதென்று விவரிக்க இயலாதஎரிச்சலும், கடுப்பும் அவ்வப்போது சூழும். ‘நாங்கள் நண்பர்களோடு குன்னூர் போனோம்; குலுமணாலி போனோம்’ என எவனாவதுஃபேஸ்புக்கில் ரெண்டு போட்டோ போட்டால்இந்த கடுப்பு ரெண்டு ஸ்பூன் அதிகரிக்கும். ‘நாலுநாள் லீவு போட்டுட்டு எங்கேயாச்சும் போகனும்’ என்று நாலு நாளைக்கு ஒருமுறைதோன்றத்தான் செய்யும். ஆனால் பணத்துக்குஎங்கே போவது? 

அகால விபத்துகளில் நண்பர்கள்உயிரிழக்கும்போது ஓரிரு நாட்கள் மனம்அலைபாயும். பார்க்கும்வேலை மீதானஅவநம்பிக்கையும் பற்றற்ற மனநிலையும்வந்துவந்து போகும். ‘எதற்காக இந்த வேலை? யாருக்காக இப்படி பொழுதெல்லாம் இங்கேகிடந்து சாகிறோம்? நமக்கு சொந்தமானது எனஒரு நாளும் இல்லையா? நினைத்ததை செய்துவாழவே முடியாதா?’ என்றெல்லாம் சிந்திப்போம். ஆனால் அந்த வேலை தரும் வருமானம் இல்லைஎன்றால் அடுத்த மாதத்தை ஓட்ட முடியாதுஎன்பது கண் முன்னால் இருக்கும் நிஜம். 

பொருளாதாரம்தான் ஆண்-பெண் உறவின்நெகிழ்ச்சியை, அதன் விகிதத்தைதீர்மானிக்கிறது.  பொருளாதாரம் அதிகரிக்க, அதிகரிக்க... ஆண்-பெண் உறவின் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. அங்கு தனிமனித உணர்வுநிலை மேலோங்கி, விட்டுக்கொடுத்தல்பின்னுக்குப் போகிறது. மாறாக பொருளாதாரஏணியின் கீழ்வரிசையில் இருபோரிடம்விட்டுக்கொடுத்தல் இருப்பினும், அங்குபொருளாதாரத்தை முன்னிட்டே சிக்கல்கள்ஏற்படுகின்றன. பாலின சமத்துவத்தின் முழுமைஎன்பது பொருளாதார சமத்துவத்தில்தான்சாத்தியம். நமது இதர பாகுபாடுகளை அப்படியேவைத்துக்கொண்டு பாலின சமத்துவத்தை எட்டமுடியாது.

-பாரதிதம்பி
[24/05, 11:33 am] TNPTF MANI: விதைகளை கட்டிக்கொண்டு
வேளாண்மை செய்ய புறப்பட்டேன்
நிலம் வெளிநடப்பு செய்துவிட்டது

-படித்தது
[24/05, 12:26 pm] Nirmala Anandhi: நீங்கள் எல்லா மலர்களையும் பறித்து விடலாம். ஆனால் வசந்தம் வருவதைத் தடுக்க முடியாது.
- பாப்லோ நெருடா
[24/05, 4:21 pm] TNPTF MANI: ஒரு வார்த்தைக்கு ஒரு குண்டு
இரண்டு வார்த்தைக்கு இரண்டு குண்டு
மூன்று வார்த்தைக்கு மூன்று குண்டு
அதற்கு இது
இதற்கு அது
நாம் பரிமாறிக் கொள்வோம்
உன் மாமிசம்
என் பசிக்கு
கணக்கு சரிதானே?
நீ வார்த்தையைக் கொண்டு வா
நான் குண்டைக் கொண்டு வருகிறேன்
நீ வாயைத் திறவேன்
நான் வாய்க்குள் சுடுவேன்
நீ சாகேன்
நான் கொல்வேன்
நான் கொல்லக் கொல்ல
நீ சாகக் சாக
வாயேன்
நாம் விளையாடுவோம்
எனக்கு அசிங்கமான முகம்தான்
ஆனால் ஆவலோடு விளையாடுவேன்
எங்கே ஓடுகிறாய், வாயைக் காட்டு!

-பெருந்தேவி
[24/05, 4:23 pm] TNPTF MANI: "ஒவ்வொரு மனிதனும் தன்னால் பாதிக்கப்பட்டவனுக்குச் சிலுவையாகிறான். ஆனால் ஒரு ஆணியோ சிலுவையிலும் ஊடுருவிச் செல்கிறது”

கஸார்களின் அகராதியைத் தமிழில் (மொழியாக்கம்: ஸ்ரீதர் ரங்கராஜ்)
[24/05, 4:31 pm] TNPTF MANI: எதுவும் பேசாதே
இன்று மனிதனாக இருப்பதுவே குற்றம்.

- சுகுமாரன்
[24/05, 4:39 pm] TNPTF MANI: நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

தெருவை வெயில் நகர்த்தி நகர்த்தி
நடுவில் வைக்கிறது.

வெயிலைத் தெரு எடுத்து எடுத்து ஓரத்தில் வைக்கிறது.

இரண்டிற்கும் முடியாததை சைக்கிள் ஓட்டும் பையன் செய்துவிடுகிறான்.

அவன் கால்-சட்டைப் பையில் இருக்கிறது இப்போது வெயிலும் தெருவும்.

-வண்ணதாசன்
[24/05, 4:46 pm] TNPTF MANI: கோபத்தை நாகரீகமாக வெளிப்படுத்துவதை போல ஒரு கொடுமை வேறில்லை.

-வாசுகி பாஸ்கர்
[24/05, 4:56 pm] TNPTF MANI: மனுச வாழ்க்கையில நல்ல இடம் சுடுகாடுதான்.மனசு மட்டுப்படுவது அங்கேதான்.
செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற உலகத்தின் பழைய்..ய பள்ளிக்கூடம் அதுதான்

-வைரமுத்து
(கள்ளிக்காட்டு இதிகாசம்)
[24/05, 5:42 pm] TNPTF MANI: வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான்.அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.

அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான்.அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான்.அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான்.அது எந்திரம் என சொல்லவில்லை.

ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான்.மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான்.சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழித்துக் கொண்டது.பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.

இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான்.பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும்,பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது.

#எஜ்சிவெல் எழுதிய கதை.மதங்கள் உருவானதை கூறுகிறார்.இது வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.

படித்ததில் பிடித்து டைப்பியது *மணி
[25/05, 6:38 am] TNPTF MANI: @kryes

வாய்க்"கால்" vs "கால்" வாய்

*கண்மாயில் இருந்து பொதுவில் பாய்வது= கால்வாய், நீளம்
*அவரவர் வயலுக்கு இட்டுக்கொள்வது= வாய்க்கால், குறுகல்

கால்வாய்= கால் + வாய்= சென்று, பல வாய்களாகப் பிரியும்

வாய்க்கால்= வாய் + கால் = வாய்த்து, நம் நிலத்துக்குச் செல்லும்!

கால்= செல்லுதல்!!
[25/05, 6:39 am] TNPTF MANI: புரட்சி உலகத்தின் விதி
அது துப்பாக்கியும் குண்டும்
மட்டுமல்ல
அது புரட்சியை விரும்பாதவர்கள் செய்யும் புரளி

மனிதனை மனிதன்
சுரண்டும்
முறையை முடிவுக்குக்
கொண்டு வரும்
போராட்டமே புரட்சி

-பகத்சிங்
[25/05, 6:41 am] TNPTF MANI: மேட்டர் என்னும் பருப்பொருளுக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பிரபலமான e=mc2என்னும் சமன்பாடு . அணு ஆயுதங்களுக்கெல்லாம் பின்னணியில் இருக்கும் சித்தாந்தம் இந்தச் சமன்பாடுதான். 1921ல் தான் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு தந்தார்கள். அதுவும் ரிலேட்டிவிட்டிக்கு அல்ல ஃபோட்டான் கண்டுபிடிப்புக்கு.
ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் தத்தவம் கொஞ்சம் தலை சுற்றும். விண்வெளiயே வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 1915ல் அவர் அதை நம்ப வைத்ததுமில்லாமல் 1919ல் ஒரு சூரிய கிரகணத்தின் போது அது நிரூபிக்கவும்பட்டது.
கிராவிடேஷன் என்னும் ஈர்ப்பு விசையே விண்வெளiயின் தன்மை. அதிகக் கனமுள்ள நட்சத்திரங்களுக்கு அருகில் அந்த விசை அதிகமிருந்தால், அது ஒளiக்கதிரை வளைத்து உள்ளே இழுத்துவிடும். கரும் பள்ளங்கள் உருவாகும். இதெல்லாம் எந்த வகையிலும் ரீல் அல்ல.
ஐன்ஸ்டைனின் ஜெனரல் தியரி சிந்தனைகளiன் விளைவாக. சென்ற நூற்றாண்டில் ஐன்ஸ்டைனுக்குப் பின் வந்த விஞ்ஞானிகள். பலமுறை பரிசோதித்துப் பார்த்து நிரூபித்த உண்மைகள். இவை காஸ்மாலஜி என்னும் புதிய இயலுக்கு வித்திட்டது. பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அதுவரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளiந்திருக்கிறாரா என்று தேட முடிந்தது(இன்று வரை அகப்படவில்லை.

-சுஜாதா
[25/05, 6:52 am] TNPTF MANI: பாதம் இயங்குவதால்
பாதை பிறக்கின்றதுவால்
விதி எனத் தனியாய்
வகுத்த வழி ஏதுமில்லை
-புதுமைப்பித்தன்
[25/05, 7:21 am] TNPTF MANI: உங்கள் எதிரிகளிடம் வாள்கள் இருக்கின்றன.இன்னும் அதிகமான பயிற்சியுடைய வாட்கள். அவர்களிடம் இல்லாத ஒரே ஒரு ஆயுதம் உங்களிடம் உள்ளது. அது "நீதி". நீதி உங்களை தைரியவான்களாக்கும். அநீதி உள்ளூர அச்சத்தை நிரப்பும்.

-ஜெயமோகன்
[25/05, 7:43 am] TNPTF MANI: 1930ல் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான வில்லியம் எம்ப்சன் [William Empson] பிரசுரித்த ‘ஏழுவகை பொருள் மயக்கம்’ என்ற பிரபலமான விமரிசனக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சொல்லாட்சி வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை அளிப்பதில் உள்ள ஏழுவகைக் காரணங்களை அல்லது ஏழுவகைச் சாத்தியங்களைப் பட்டியலிட்டார். அவை

1)ஒரே சொல்லாட்சி படைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அடையும் பொருள் மயக்கம். உதா-‘பொன்னகரம் பொன்னகரம் என்கிறீர்களே. இதுதான்ய்யா பொன்னகரம்’ (புதுமைப்பித்தன் பொன்னகரம் சிறுகதை) என்றவரி. அக்கதையில் காயமடைந்த கணவனுக்கு பால் கஞ்சிக் காய்ச்ச ஒரு பெண் விபச்சாரம் செய்கிறாள். அவசியமான எளிய ஒன்றைக்கூட அடையமுடியாமல் ஒரு பெண் விபச்சாரத்துக்கு செல்லும் நகரம் என்ற பொருளில் அவ்வரியைப் படித்தால் ஒரு பொருள் வரும். அவள் விபச்சாரம் செய்வதே கணவன் மீதான பிரியத்தால்தான் என்று எடுத்துக்கொண்டால் வரும் பொருள் இன்னொன்று.

2) படைப்பின் வரிகள் பலவகையான பொருள்களை அளித்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பு இன்னொரு முழுப்பொருளை அளிக்கும்படி இருப்பது. உதா:’பாஞ்சாலி சபதம்’ (பாரதி) பாஞ்சாலி சபதம் செய்யும் வரிகள் வரும்போதுதான் பாரததேவியே பாஞ்சாலியாக உருவகிக்கப்பட்டிருக்கும் பொருளை அளிக்கிறது. அப்பொருள் மையமாக இருக்கையில் பிற வர்ணனைகள்  தனித்த பொருளை அளிக்கின்றன.

3)சிலேடை. உதா:சாதாரண வாழ்க்கை வாழும் மனிதன் இவன். அதை சாதா ரண வாழ்க்கை வாழும் என பிரித்துக்கொள்வதன் மூலம் மேலதிக பொருள்வரும்படி எழுதியிருப்பார் சி.மணி

4)ஆசிரியனின் தெளிவற்ற மனநிலையை வெளிப்படுத்தும் முகமாக சொற்கள் அமைக்கப்பட்டிருத்தல். உதா: மலையுருகிப் பெருக்கெடுத்த நதி மடியுமோ நிரந்தரமாய்? அத்தனை பெரிய கனலை வெளிப்படுத்த வல்லதோ ஒரு சிறுசொல்? (தேவதேவன்). இங்கே கனலுக்கும் சொல்லுக்குமான உறவைப்பற்றிய கவிஞரின் மனப்பிம்பம் ஒரு புகைமூட்டத்திற்குள்ளேயே உள்ளது.

5)பல தளங்களில் பொருள் தந்து நிற்கும் படிமம். உதா:சூளைச் செங்கல் குவியலிலே தனிச்சொல் ஒன்று சரிகிறது. (ஞானக்கூத்தன்).

6)இலக்கியப் படைப்பு தன்னளவில் பொருள்தராது நிற்கையில் வாசகனே அதற்கு பொருளை தன்விருப்பப்படி கற்பனை செய்துகொள்ளுதல். இது சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றே. மிகச்சிறந்த உதாரணம் என்றால் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. ஆசிரியர் டிராக்குலாவை குறியீடாக ஆக்கவில்லை. ஆனால் அப்படித்தான் அது வாசிக்கப்பட்டது.

7) எழுத்தாளனின் மனப்போராட்டம்  எழுத்தில் தெரிவதனால் எழுத்து மாறுபட்ட அர்த்தங்களை அளித்தல். உதாரணம்: அன்னா கரினினா நாவலில் (தல்ஸ்தோய்) அன்னாவின் ஒழுக்க மீறலை கண்டிக்க முனையும் தல்ஸ்தோய் அவளுடைய காதலின் தீவிரத்தையும் அங்கீகரிக்கும் தன்மையை அடைந்து திட்டவட்டமாக முடிவெடுக்க முடியாத நிலைடில் தவிக்கிறார். எனவே அன்னாவின் தற்கொலையானது இயற்கை அளித்த தண்டனை அல்லது ஓர் அவலம் என்ற இரு தளங்களில் பொருள் வரும்படி அமைந்துவிடுகிறது.

எம்ப்சனின் கொள்கைகள் ஒரு படைப்பு உருவாக்கும் வாசிப்புத்தன்மையை படைப்பின் பின்னால் உள்ள ஆசிரியனில் தேடுவதனால் உருவானவை. இங்கே படைப்பு முழுக்க முழுக்க ஆசிரியனின் அகவெளிப்பாடாகக் கருதப்படுகிறது. வாசகனின் வாசிப்பு உருவாக்கும் சாத்தியங்கள் முற்றிலும் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை. ஆகவே பிற்கால மொழியியல் சார்ந்த திறனாய்வு இதை நிராகரித்துவிட்டது. ஆனால் உண்மையில் படைப்பை வாசகன் எழுத்தாளன் எந்தக்கோணத்தில் வேண்டுமென்றாலும் பார்க்கலாம். இது படைப்பின் கோணத்தில் பார்ப்பது, அவ்வளவுதான். அவ்வகையில் இன்றும் பயனுள்ளதே
[25/05, 9:53 am] TNPTF MANI: மழைக்குச் செய்யும் மரியாதையே
மழையில் நனைவது தான்!
[25/05, 1:46 pm] TNPTF MANI: கறுத்த கண்ணனுக்கு தங்கச்சி பேரு அன்னக்கொடி.கொணத்துல தங்கமா இருந்தவா உருவத்தில கன்னங்கரேர்னு..அழகு கறுப்புன்னு ஒண்ணு இருக்கு.அவ பாவம் எழவு கறுப்பு. ஒலக்கைக்கு குஞ்சம் வச்ச மாதிரி ஒடிசலா வேற இருப்பா.அவ சிரிச்சா பளீர்னு தெரியிறது பல் இல்ல; ரெண்டு பல்லுக்கு மத்தியில் இருக்கிற விரிசல்தான்.

அதுல ஒரு ஈயோ எறும்போ இடைஞ்சல் இல்லாம போயிட்டு வரலாம்.கொஞ்சம் கூன் போட்ட முதுகு.அது வேற வருசா வருசம் அளவு மாறிக்கிட்டேயிருக்கு. எப்பேர்ப்பட்ட தையக்காரனும் அவ லவுக்கையை தச்சிர முடியாது..

-வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம்
[25/05, 5:29 pm] TNPTF MANI: மனிதர்க்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்:ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடித்த முதுமைபருவம்
-வைரமுத்து
[25/05, 6:40 pm] TNPTF MANI: புத்தக வாசிப்பு என்பதை அறிவார்ந்தத் தேடுதலாக எவரும் நினைப்பதில்லை. இணையத்தில் எல்லாமே இருக்கிறது என்ற தவறான மயக்கம் பலரையும் பிடித்தாட்டுகிறது. இன்னொரு பக்கம் இலவசமாகப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யக் கிடைக்காதா எனத் தேடுகிறார்கள். இதுதான் சமகாலச் சூழல். பை பையாகப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு போகிறவர்களில் பாதிப் பேர், அதில் ஐந்து நூல்களைக்கூடப் படித்து முடிப்பதில்லை. வீட்டு அலங்காரப் பொருள்களைப்போல புத்தகங்களும் மாறிக்கொண்டிருப்பது துரதிருஷ்டமே. எது நல்ல புத்தகம் என்று வாசகன் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும் சிரமம் உருவாகிவிட்டது. சந்தை வணிகத்துக்காகப் பதிப்பகங்கள் எவ்வித முறையான உரிமையும் பெறாமல் பல புத்தகங்களைப் பதிப்பிக்கின்றன. எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ராயல்ட்டி பெரும்பான்மை யினருக்குக் கிடைப்பதே இல்லை. எழுத்தாளர்களின் அடிப்படைப் பிரச்னைகள் சார்ந்து குரல் கொடுக்க எவ்விதமான அமைப்புகளும் இல்லை என்பது கூடுதல் வருத்தம் தருகிறது. புத்தகக் காட்சி வழியாக வெளிக்காட்டப்படும் பிம்பம் தற்காலிகமானதே. எழுத்து சார்ந்த இந்த விற்பனைப் பெருக்கம், தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றம் உருவாகிவிட்டதைப்போன்ற பொய்த்தோற்றத்தைத்தான் உண்மையில் ஏற்படுத்தி உள்ளது.

-எஸ்.ரா
[25/05, 10:06 pm] TNPTF MANI: திட்டுவதற்கு உபயோகிக்கும் வார்த்தைகள் தீர்ந்தனவே ஒழிய,திட்டுகின்ற கோபமும் ரோசமும் தீராது
- ஜெயகாந்தன்
[26/05, 7:22 am] TNPTF MANI: *கோடு
புள்ளிகளால் ஆனது...
வறுமைக்கோடு
பெரும்புள்ளிகளால் ஆனது...
-P
[26/05, 7:24 am] TNPTF MANI: பொய் சொல்லுவதில் உள்ள மாபெரும் சள்ளையே இதுதான்.அதுமேலும் மேலும் புதிய புதிய களங்களில் தன்னைத் தொடர்ந்து அங்கீகரிக்கும்படி வந்து நிற்கும்

-ஜெயகாந்தன்
[26/05, 7:35 am] TNPTF MANI: போகிறாய் என்பதையே
மறக்கடித்து விடுகிறது
நீ திரும்பிப் போகிற அழகு
-பழனிபாரதி
[26/05, 7:37 am] TNPTF MANI: ஒருவன் மண்பானையிடம் கேட்டான்.
"இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்
எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?"
மண் பானை சொன்னது,
" என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்."
[26/05, 7:40 am] TNPTF MANI: ஆவி பிரிந்த பிறகு
சடலமாய் கிடக்கிறது
கோப்பையில் "தேநீர்"
[26/05, 7:43 am] TNPTF MANI: Go to the people,
Live with them
Learn from them
Love them
Start with what they know
Build on what they have
-Lao Tzu
(அண்ணா முதல்வராய் இருந்தபோது அவர் மேசையில் வைத்துக்கொண்ட வாசகங்கள்)
[26/05, 7:54 am] TNPTF MANI: காட்சியளிப்பதே தன்
கடமையென உணர்ந்தவராய்
எழுந்தார்
துயர் குழப்பமிக்க இவ்வுலகில்
தன் கடமை என்னவென்ற வெகு
யோசனைக்குப் பின் கடவுள்.

- தேவதேவன்

No comments:

Post a Comment