துளாவித் துளாவித் தேடுகிறது
தும்பிக்கை தொலைத்த ஆதி வனத்தை.
~ வண்ணதாசன்
யாராலும் மொட்டைமாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை. மொட்டைமாடியில் வைத்து யாராலும் கோபப்பட்டிருக்க முடியும் என்றும் நினைக்க முடியவில்லை’
-வண்ணதாசன்
அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது.
- வண்ணதாசன்
[08/05, 9:15 pm] வராத உறக்கத்தை போல் ஒரு அவஸ்தையில்லை,
வந்துவிட்ட விழிப்பை போன்ற ஒரு
உற்சாகமில்லை
-வண்ணதாசன்
[08/05, 9:15 pm] அலைகள் எத்தனை முறை
கரையிலே வீசினாலும்
கடலிலேயே கிடக்கிறது
கடல்..
# வண்ணதாசன்.
[08/05, 9:22 pm] TNPTF MANI: என் சோகத்தை
உன் சோகம் வந்து
எட்டித் தள்ளவில்லை
கட்டிப் பிடித்துக் கொண்டது.
நூலிடையாள் என்றார்கள்
இடை மட்டுமல்ல
நீயே நூலாகத்தான்
நடந்து வருகிறாய்.
ஒரு வேலை இல்லாததால்
ஆணுக்குரிய அத்தனை தகுதியையும்
ஒரு சேர நான் இழந்துவிட்டேன்.
உலகம் ஒரு நாடக மேடை
ஏழைகள் நமக்குத்தான்
நடிக்கத் தெரியவில்லை.
*கந்தர்வன்*
[09/05, 7:41 am] TNPTF MANI: எப்போதாவது நம்முடைய அறவுணர்வு மெய்சிலிர்க்கும்படி விழித்துக் கொள்ளும்.அது இயற்கையானதுதான்.ஆனால் அந்த உணர்வு அடங்கிய பிறகு அது மீண்டும் பழைய உறைநிலைக்கு சென்றுவிடும்
-சரவணன் சந்திரன்
[09/05, 7:42 am] TNPTF MANI: 🅱
*மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.*
கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே
வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள்
யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.
*'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன்.*
நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம்.
சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான்.
இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.
வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி
அடித்தார்.
அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்.
'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல
வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன்.
வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத
யார் யாரோ பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
- *சகாயம் ஐ.ஏ.எஸ்.* *—*
*(படித்ததில் பிடித்தது)*
[09/05, 8:21 am] TNPTF MANI: ரயில் கடந்து போன நிலம்
தன் அமைதிக்குத் திரும்ப முயற்சிக்கிறது
அடுத்த ரயில் வரும்வரை.
- போகன் சங்கர்
[09/05, 11:28 am] TNPTF MANI: தமிழகத்தின் உள்ளங்கவர் பேச்சாளர் அறிவொளி மறைந்து போனார். ஆன்மிகமா அரசியலா சமூகமா பொருளாதாரா பெரியாரா மார்க்ஸா எத்தனை மணிநேரமும் பேசுவார். எவ்வளவு நேரமும் கேட்கலாம். பள்ளிப்பருவ காலத்தில் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தில் அவர் உரை கேட்டது முதல் ரசிகன். வார்த்தைப் பின்னல்கள் தான் அவர் பாணி. "எல்லா உண்மையும் முழு உண்மை அல்ல" என்பார். "உலகத்தில் தரை கொஞ்சம் தண்ணீர் கொஞ்சம் என்கிறோம். அது உண்மையா? தரையைத் தோண்டுனாலும் தண்ணீ இருக்கே" என்பார்.
சரிக்கு பேரு சரி கிடையாது என்பார். தப்பு ஒன்னு நடந்தா தான் சரிக்கு பேரு சரி என்பார்.
சமூகமா சமயமா பொருளாதாரமா என்ற பட்டிமன்றத்தில் சமூகம் பேசுவார். பக்தியா தொண்டா என்ற பட்டிமன்றத்தில் தொண்டு பேசுவார். அறிவொளியின் உள்ளொளி இதுதான்.
அவரது மிகச்சிறந்த நூல்: பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்.
ஒன்பதாம் வகுப்பின் கட்டுரைப் போட்டிக்கு இவரது வரிகளைத்தான் அப்போது நான் மனப்பாடம் செய்து எழுதினேன்.
அவரது எழுத்து அவ்வளவு லாவகமாக இருக்கும்.அந்த புத்தகத்தை யாராவது மறுபதிப்புச் செய்யலாம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். என் அப்பாவின் நண்பர். எங்கள் வீட்டில் தங்கி இருக்கிறார். மறைந்துவிட்டார் அறிவொளி . அவர் குரல் நெஞ்சுக்குள் இருக்கிறது.
-திருமாவேலன்
[09/05, 1:48 pm] TNPTF MANI: ஒன்றைச் செய்ய முடியாததற்கு ஆறுதல் பிறிதொன்றைச் செய்வதில் இருக்கிறது
-பழமலய்
[09/05, 1:49 pm] TNPTF MANI: ஆரோக்கியம்-இழந்தவுடன் மிகவும் விரும்பப்படும் நிலை
-சுஜாதா
[09/05, 1:50 pm] TNPTF MANI: அலுவலகம்-சில சமயம் வேலை செய்ய ஏற்பட்ட இடம்
-சுஜாதா
[09/05, 6:17 pm] TNPTF MANI: எப்படி எழுத வேண்டும் என்று நான் கூறவில்லை
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்
-ஆத்மாநாம்
[09/05, 7:46 pm] gowthami karthick: பதில்களுக்கு
என்ன
தேவை?
கேள்விகளிலேயே இளைப்பாறுகையில்.
-ஈரோடு கதிர்.
[09/05, 9:46 pm] TNPTF MANI: முந்தின நாள் பேசியதனைத்தையும் மறுநாள் அபத்தமாக்கி விடும் இடைப்பட்ட இரவொரு போதிமரம்."
-சொரூபா
[09/05, 9:48 pm] TNPTF MANI: நமக்கான ஆறுதலையும் நாமே அடைந்துகொள்ள வேண்டியிருப்பதன் பெயர்தான், அவல நிலை !
-நர்சிம்
[10/05, 6:42 am] TNPTF MANI: காலம் மைதானத்தில் விளையாடுபவனை பார்வையாளனாகவும், பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது
# நா.முத்துக்குமார்"
[10/05, 6:55 am] TNPTF MANI: இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது!இனிது!ஏகாந்தம் இனிது!
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்!
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்!
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது
அவர் கையால் இன்புற உண்பது தானே!!!
-ஒளவையார்
[10/05, 7:18 am] TNPTF MANI: கடவுள் இருக்கிறாரா?
அறிவியல் பதில்:இருக்கலாம்
ஆன்மிகத்தின் பதில்:இருக்கிறார்
என் பதில்:It depends
(சம்பந்தப்பட்ட நபரை சார்ந்த விஷயம்)
-சுஜாதா
[10/05, 9:16 am] TNPTF MANI: அமைதியைத் தவிர
வேறெது
அந்த இலையை
உதிரச் சொன்னது!
-மகுடேசுவரன்
[10/05, 12:31 pm] மினிமீன்ச்: புத்தன் அழுதான்
ஆற்றமாட்டாது
கண்ணீர் பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு
திடீரென தான் ஒரு புத்தன் என்பது
பிரக்ஞையில் படவே
அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்டான்
நித்ய ஸாந்தமும் மந்தகாசமுமாய்
தன் முகத்தை நிலைநிறுத்த முயன்றானெனினும்
அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு நெளிந்த
முகரேகைகளின் வழியே கண்ணீர் பீய்ச்சியது
அது அவன் தம்மங்களனைத்தையும்
அடித்துக் கொண்டோடியது
மறைவிடம் தேடி ஓடும் ஆனந்தா
எவ்விடம் போயினும் நீ ஒரு புத்தனே
இன்னும் சில வினாடிகளில்
மரிக்க இருக்கிறான் உன் புத்தன்
அவனுடலெங்கும் சிந்தட்டும் உன் கேவல்கள்
வாரி அள்ளி மடியிலிட்டு
பெருங்குரலில் வெடித்தழு புத்தா.
-இசை
[10/05, 2:02 pm] TNPTF MANI: எது ஒண்ணையும் ரொம்ப தீவிரமா செஞ்சா கடைசியில சூனியம்தான் மிச்சம்.தீவிரமா செய்யலேன்னா வெற்றி இல்லை. வெற்றினா உச்சியில் போய் பரிதாபமா முழிச்சிட்டு நிக்கிறது
-சுந்தர ராமசாமி
No comments:
Post a Comment