Thursday, 16 August 2018

மணி

[06/05, 1:49 pm] TNPTF MANI: அக்னி சாட்சி சுருக்கமாக

சந்துருவுக்கு ஷோபனாபுக்கும் திருமணம் நடைபெற்றது.பந்தி ஒன்று முடிந்து இரண்டாவது ஓடிக்கொண்டிருந்து.எல்லாம் அமைதியாய் நடந்து கொண்டிருக்க வினோத் வந்தான்.

ஹாய் ஷோபி என்றான்
ஷோபனா சோகையாக சிரித்தாள்.

சந்துரு திஸ் இஸ் வினோத் என அறிமுகப்படுத்தினாள்.

உங்களுக்கு என் கிப்ட் என செல்போன் கொடுத்தான் வினோத்.இது கொஞ்சம் ஸ்பெஷல் என்றான்.ஷோபனா உள்ளம் பதறியது.

இதில் போனமாசம் ஷோபனா எனக்கு அனுப்பின SMS கள்.படிச்சுபாருங்க சுவாரஸ்யமா இருக்கும்.

சந்துருவை பார்க்க..
அவன் தட்ஸ் இண்ட்ரஸ்டிங்..எங்கே குடுங்க

"என்னப்பத்தி ஷோபி உங்ககிட்ட சொல்லியிருக்க மாட்டா.அதனாலதான்.."

சொல்லியிருக்கா என்றான் சந்துரு..
எதுக்கும் படிச்சுப்பாருங்க என்றான் வினோத்.

தேவையில்லை என சந்துரு அந்த செல்போனை கொழுந்து விட்டெரியும் அக்கினியில் போட்டான்.அக்ரிலிக் ப்ளாஸ்டிக்,ஃபைபர் போன்றவை உருகி எரிந்து ஜோதியுடன் கலந்து இறந்தது.

"சாப்பிட்டு போங்க வினோத் என்றான் சந்துரு.

-சுஜாதா

[06/05, 2:40 pm] TNPTF MANI: வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம் சாதல் அல்ல,ஆனால் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே நம்முள் இருப்பதை சாகவிடுவதே ஆகும்

-நார்மன் கஸின்ஸ்

ஓடித் தோற்பதுதான்
பந்தயம்

எழுதித் தோற்பதுதான்
எழுத்து

வாழ்ந்து தோற்பதுதான்
வாழ்க்கை

- தஞ்சாவூர் கவிராயர்

[06/05, 6:26 pm] TNPTF MANI: நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.

இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.

மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.

செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.

உங்கள் அறிவியல்
கண்டு பிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று.

- பா.ஜெய்கணேஷ்

[06/05, 6:27 pm] TNPTF MANI: கடைசியாக மிச்சமிருப்பது
இது ஒன்றுதான்.
நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.

-தஸ்தயெவ்ஸ்கி

[06/05, 6:56 pm] TNPTF MANI: ரியாலிட்டி அதுதான் சார்..இரக்கப்பட்டுக்கலாம் வேறு என்ன செய்வது.இனங்களை அழுத்துவிட்டு தினங்களை கொண்டாடிக்க வேண்டியதுதாண்

[06/05, 7:26 pm] மினிமீன்ச்:

பஸ்ஸில் போனபோது
சாலையோரம் இரண்டு செம்பாறைகள்
ஒன்றையொன்று கேலி செய்து கொண்டன
ஒன்று உறுதியளித்தது:
'இயேசு சீக்கிரம் வருகிறார்'
இன்னொன்று சொன்னது:
'hmt வாட்சுகள்
உங்கள் நேரத்தைச்
சரியாகக் காட்டும்.
                              
- நாகூர் ரூமி
(நதியின் கால்கள்)

[06/05, 7:28 pm] மினிமீன்ச்: வேதத்தின் சாரத்தை எடுத்துக்கொண்டேன்
அதன் எலும்புகளை வீசி எறிந்தேன்
சண்டையிடும் நாய்களுக்கு!
                                             
-மௌலானா ரூமி.

[06/05, 7:57 pm] TNPTF MANI: பிரிவு

ஆசையாய் வாங்கினாரே
ஆர்வமுடன் வாசிப்பாரா
முனை மடக்கினாரா
மதிப்பறியாமல் வீசினாரா
குழந்தைக்கு கொடுத்து
விளையாடுவாரா
பத்திரமாய் பக்கங்களை
புரட்டுவாரா
என ஆயிரம் கேள்விகளுடன்
கடன் கொடுத்த புத்தகத்தை
நினைத்து புரண்டு படுத்தேன்
கனவில் வந்து புத்தகம் சொன்னது
எப்படியாவது எனை மீட்டெடுத்து
சென்றுவிடு என்று.!
[06/05, 9:49 pm] TNPTF MANI:

நள்ளிரவில் ஏறியது
இன்னும் இறங்கவேயில்லை
"பெட்ரோல் விலை"!
[07/05, 6:37 am] TNPTF MANI:

அங்கீகாரம் கிடைக்கிறதா,இல்லையா என்பததெல்லாம் வேறு.நாமே முதலில் நம் திறமையை எந்த அளவுக்கு உணருகிறோம் என்பதே முக்கியம்
-ஓவியர் ஆதிமூலம்

[07/05, 6:38 am] TNPTF MANI: வந்ததும் தெரியவில்லை வற்றியதும் தெரியவில்லை ஊதாரி போல ஊரைப் பார்த்து வெறிக்கிறது ஆறு"
-பாவண்ணன்

07/05, 6:59 am] TNPTF MANI: பட்டுத்தான் தேறுமென்றால்
கெட்டுத்தான்
மாறு மென்றால்
புத்திக்கு விலையேது

-கண்ணதாசன்

No comments:

Post a Comment