பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு கதை
அரசர் ஒரு ஐஸ் கட்டியை அருகில் இருந்த அமைச்சரிடம் கொடுத்து அவருக்கு அருகில் இருந்தவரிடம் கொடுக்கச் சொன்னார். அவர் அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும்.
இப்படியே கடைசி நபர் வரை கடத்திக் கொண்டு போகவேண்டும் ஐஸ் கட்டி கடைசி நபரை அடைந்த போது அது ஐஸ்கட்டியாக இல்லை. சில நீர்த்துளிகளே அவரைச் சென்றடைந்தது.
அரசின் பணம் இடைப்பட்ட மனிதர்களைத் தாண்டி கடைக்கோடிக் குடிமகனை எந்தளவிற்குச் சென்றடைகிறது என்பதை விளக்க அண்ணா சொன்ன கதை இது.
No comments:
Post a Comment