Monday, 29 May 2017

பூமா

பார்க்கும் முன்பு
செடியில் இருந்தது
பார்த்த பின்பு கண்ணில் இருந்தது
இப்போது எனக்குள் இருந்தது

கடந்து செல்கிற
ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு ரோஜாவை தனக்குள்
எடுத்துச்சென்று கொண்டேயிருக்க
அந்த ஒரு ரோஜா
இன்னமும் செடியில்தான் இருக்கிறது
யாரும் பார்க்கும் முன்பு

-பூமா ஈஸ்வரமூர்த்தி

No comments:

Post a Comment