Wednesday, 3 May 2017

வெற்றிலை

வெற்றிலை
*மணி

வெற்றிலை பற்றி பல்வேறு இடங்களில் வாசுத்துள்ளேன்.ஆனால் கழனியூரானின் வெற்றிலை பற்றி படித்தது இருநாட்களாக பதிவிட தூண்டிக்கொண்டே இருந்தது

*வெற்றிலை பயன்பாட்டை கூறுகிறார்
தாம்பூலம்,வரவேற்க,மங்கல வீட்டில்,பெண் பார்த்து வெற்றிலை மாற்ற,மொய் வைக்க, ஆரத்திக்கு, இன்னும் பல

*வெற்றிலை போடும் பெரியவர் பாக்கை தேர்வு செய்வர்.கெட்டுப்போன பாக்கை கழித்து,நல்ல பாக்கை தேர்ந்தெடுத்து உட்புறம் ஊதி வாயில் போடுவர்.புழு,பூச்சி நீக்க.வெற்றிலையில் தூசினை முன் பின் துடைத்து லாவகமாய் வாயில் போடுவர்.

*வெற்றிலை போட்டு துப்பும் பாத்திரம் பெயர் துப்பாணி.

*கன்னிபெண்ணை இரண்டாம் தாரமாய் வயதானவர்க்கு கட்டி வைத்ததால் அவர் பாடிய நாட்டுப்புறப்பாட்டு,

"வாட வெத்தலை;வசங்குன வெத்தலை
வாய்க்கு நல்லால்லே!
வாக்கப்பட்ட புருஷன் கெதி
வாழ்க்கைக்கு நல்லால்லே!

*சவத்தை சுடுகாட்டுக்கு அனுப்பும்போது இடது கையில் வெற்றிலை வைத்து அனுப்புவார்கள்.அந்த வெற்றிலையை செத்தவன் கை பிடிக்காது என்பதால் இடது கையின் கீழே வெற்றிலையை வைப்பார்கள்.இதை சொல்லும் மரபுத்தொடர்தான் "செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல""!

வெற்றிலையின் பிரமிப்பில் ஒருசிலவற்றை பதிவிட்டிருக்கேன்.நன்றி கழனியூரான்

-தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment