மின்னல் கதை
-படித்ததில் பிடித்தது
பஸ் ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது அவன் விழித்துக் கொண்டான்.அருகிலிருந்த பேக்கை காணவில்லை.அதில்தான் அரிசி வசூல் பணம்மூன்று லட்சம் இருந்தது.அருகே அமர்ந்திருந்த இருவரையும் காணோம்."அய்யய்யோ! எம் பணத்தை காணோம்.!வண்டிய நிறுத்துங்க.!"பஸ் பிரேக் அடித்து நின்றது.நள்ளிரவு தூக்கம் கலைந்த எரிச்சலில் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர்.கண்டக்டர் அருகே வந்து "எவ்வளவுங்க.?"
"மூணு லட்சம்.!அரிசி வசூல் பணம்.!"
"பத்ரமா வைச்சுக்கரதில்லையா.?"
"பத்ரமாத்தான் வைச்சிருந்தேன்.!பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பேரு மேலதான் சந்தேகம்.அவங்க எங்க இறங்குனாங்க.?"
"அவங்க கருமத்தம்பட்டில இறங்கி அரை மணி நேரம் இருக்கும்.!"
அதற்குள் டிரைவர் "எதிர்ல எந்த வண்டியும் வரல.!கோவை டூ ஈரோடுன்னு இருக்கிற போர்டை மாத்தி ஈரோடுடூகோவைங்கிற போர்டை வை.!ஒரு சின்ன ஐடியா.!
திருடனுங்க எதிர் திசையில் வருகிற பஸ்லதான் ஏறுவானுக.!"
போர்டை மாத்திக் கொண்டு பைபாஸில் வந்த வழியே விரைந்தது பஸ்.கருமத்தம்பட்டியில் நின்ற பஸ்ஸில் ஒடி வந்து ஏறியவர்கள் கையில் இருந்தது பணப்பை.!"வாங்க மாப்பிள்ளைகளா.!மாமியார் வீட்டுக்கு போகலாம்.!"என்ற குரல் கேட்டு டிரைவர்,பயணிகளின் பரிச்சையமான முகம் பார்த்து சுதாரிப்பதற்குள் மடக்கப்பட்டனர் பஸ் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது.!
- Karthik Karthik
No comments:
Post a Comment