என்முகம் பார்த்தபடியே
பயணித்தாள்
புருவம் உயர்த்தி
ஆச்சர்யம் காட்டினாள்
முகம் தாழ்த்திக்
கொஞ்சமாய்ச் சிணுங்கினாள்
உதடு வலிக்காமல்
ஏதேதோ முணுமுணுத்தாள்
ஏதோ யோசித்துத்
திடீரெனச் சிரித்தாள்
நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி.
-கார்த்தி
No comments:
Post a Comment