Monday, 29 May 2017

கார்த்தி

என்முகம் பார்த்தபடியே
பயணித்தாள்

புருவம் உயர்த்தி
ஆச்சர்யம் காட்டினாள்

முகம் தாழ்த்திக்
கொஞ்சமாய்ச் சிணுங்கினாள்

உதடு வலிக்காமல்
ஏதேதோ முணுமுணுத்தாள்

ஏதோ யோசித்துத்
திடீரெனச் சிரித்தாள்

நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி.

-கார்த்தி

No comments:

Post a Comment