நன்றி:பிழைதிருத்தி
பட்டாம்பூச்சி தூண்டில்கள்..
சிதிலமாவதற்கு முன்
சிலாகித்துக் கொள்..
கலைந்து விடும்
மேகமெனில்..!
சிறகுகள் படபடக்கும்
முன் பார்த்துக்கொள்..
பட்டென பறந்துவிடும்
பட்டுப்பூச்சியெனில்..!
உடைபடும் முன் முகத்தை
பிரதி எடுத்துக்கொள்..
குறையின்றி முழுதான
பிம்பக்கண்ணாடி எனில்..!
உடைந்து நொறுங்கும் முன் வாழ்ந்துக்கொள்..
எக்கணமும் சுழழ்வதை
நிறுத்திக்கொள்ளும் பூமியெனில்..!
-கணேஷ்.G
No comments:
Post a Comment