Monday, 29 May 2017

மேத்தா

தங்கராஜ்

*மு.மேத்தா*

*சிறப்புப் பதிவு*

எடைக்குப் போடும்போதுதான்
தெரிகிறது...
பத்திரிக்கைகளில்
படிக்காமல் விட்ட
பயனுள்ள பக்கங்கள்!
🏵
கோபித்துக் கொள்ளாதே
கோப்பெருஞ் சோழனே...

புறப்புண் நாணி
வடக்கிருப்பதென்றால்
ஒவ்வொரு நாளும்
எத்தனை முறை
வடக்கிருப்பது?

மொத்தமாய் எல்லோரும்
முதுகில் குத்தும்
ஊரில்....
🏵
விரும்பி எல்லோரும்
வீட்டில்
வைத்துக் கொள்கின்றனர்
நாட்காட்டிகளையும்
ஆட்காட்டிகளையும்!
🏵
வாகனங்களுக்குத்
தெரியாது
உட்கார்ந்து வந்தவர் கள்
தன்னை எங்கே
ஓரங்கட்டுவார்கள்
என்று.
🏵
தட்டுகளைத்
தட்டிக் கேட்க முடியாமல்
தராசு முட்கள்
தலை கவிழ்கின்றன.
🏵
விட்டுத் தொலைக்கவும்
இயல வில்லை...
பட்டுத் தவிக்கவும்
முடியவில்லை...
🏵
அது ஒரு காலம்...
தாஜ்மகாலைச் சுற்றி என்
தலைவனின் பேர் சொல்லி
ஒரு நூறு முறை நான்
உருண்டு வரட்டுமா?
என்று
செல்லமாய் என் காதுகளில்
அவள்
சிணுங்கிய காலம்...

No comments:

Post a Comment