தொடுவதற்கல்ல வானம்
-அறிவுமதி
காதல்-கொடுப்பதன்று.ஈர்த்துக் கவிழ்ப்பதன்று.மடக்குதல் அன்று.மடங்குதல் அன்றுண் எதிர்பார்த்த வெறியில்..எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று.இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.
தேடல்கள்-தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து..உள்திரும்பித் திருப்தியுறுவது.இரு ஞாபகங்கள் விரும்பி ஒன்றை மறதிக்குள் அமிழ்வது.
அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும்.காதலை வாங்கிக்கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்து கொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?...
No comments:
Post a Comment