Monday, 29 May 2017

சுஜாதா

தரிசனம் என்பதில் கொஞ்சம் நம் உடல் உழைப்பு வேண்டும்.அங்கே போக வேண்டும்.கூட்டத்தில் இடிபட வேண்டும்.நம் தினசரி வேஷங்களை ஒத்திப்போட்டுக் காத்திருக்க வேண்டும்.கிட்டத்தில் செல்ல தடைகள் வேண்டும்.அதன் இறுதியில் கிடைக்கும் தரிசனத்தில் அத்தனை சிரமங்களும் மேகத்தை விலக்கிவிட்டு ஜொலிக்கும் சூரியன் போல் சட்டென்று ஏற்படும் ஒரு நிமிட பரவசம் தான் தரிசனம்.

வரவேற்பரையில் உட்கார்ந்துகொண்டு டெலிபோன் பேசிக்கொண்டு சானல் மாற்றத் துடிக்கும் விரல்களுடன் பார்ப்பதல்ல.

#சுஜாதா

No comments:

Post a Comment