மேலாண்மையின் கதைகளில் சில
*பிறந்த போதினிலே
கிராமத்தில் எருமை பொட்டக் கண்ணு போட்டால் சந்தோசப்படும் குடும்பம் மருமகளுக்கு பெண் பிள்ளை பிறந்ததை கசப்பை விழுங்கிய முகமாய் தெரிகிறது.தாய் எருமையை பார்த்து அந்த மருமகள் பொறாமைப் படுகிறாள்
*நிறம் மாறும் நிஜங்கள்
புதிய உரக்கடை திறந்த ஆள் அண்ணாச்சி உரம் வாங்க கடன் கொடுக்க மறுக்கிறான்.பால் சொசைட்டி,ஆடு வித்த காசு வருமென்று சொல்லிவிட்டு கடன் வாங்குகிறான்.ஒரு வாரமாய் இழுத்தடித்து பணம் தர்றான்.முடிவில்
"என்ன செய்யறது தம்பி,உண்மையை சொல்லி நேர்மையாய் வாழனும்கிற நெனப்பைக்கூட வாழவிடாத உலகம் தம்பி னு முடிக்கிறார்
#செம பஞ்ச்
*அரும்பு
சிவகாசியில் தந்தை இழந்த சிறுமி தீப்பெட்டிக்கடைக்கு வேலைக்கு போகிறாள்.குழந்தை தொழில் செய்ய கூடாதென்ற சட்டத்தால் விசிட் வருவதால் வேலைப்போகிறது.வயதுக்கே வராத சிறுமி வயிற்றுப்பிழைப்புக்கு தாவணி கட்டி செல்கிறாள்.
"ஒரு பிரேதத்தை போல்.. அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது..அந்த அரும்பி!
# தொகுப்பு முழுவதும் அருமையான கதைகள்
தோழமையுடன் மணி
No comments:
Post a Comment