Monday, 29 May 2017

நகுலன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்

ரயிலிலும் யாருமில்லை
என்பதை;

ஸ்டேஷன் இருந்தது,
என்பதை

'அது ஸ்டேஷன் இல்லை'
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள

முடியவில்லை
ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது.

- நகுலன்

No comments:

Post a Comment