Monday, 29 May 2017

தேவதச்சன்

சிறுமி கூவுகிறாள்:
நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.

சிறுவன் கத்தினான்:
இல்லை. நிலா என்கூட வருகிறது.

இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள்.

நிலா இருக்கிறதா?
இருக்கிறதே.
அவள் சின்ன அலையைப் போல் சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில்
கரையத் தொடங்கியது நிலவொளி.

எல்லார் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோர்க்கும் தெரியவில்லை.

- தேவதச்சன்
(திருமாவேலன் பதிவு)

No comments:

Post a Comment