#30 நாள் வாசிப்பு போட்டி
id: #30D0044
நாள்-
புத்தகம்-
#தமிழக அரசியல் வரலாறு பாகம்-2
-ஆர்.முத்துக்குமார்
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து 1977ஆம் ஆண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பட்வாரி.
குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தாலும் எதிர்க் கட்சி அரசியலை அதற்குரிய நாகரிகத்துடன் நடத்தும் என்று அறிவித்தார் கருணாநிதி. மேலும் திமுக என்பது ஆளுங்கட்சியாக இருக்கும் வரை தண்ணீரில் இருக்கும் பாஸ்பரஸ் போன்றது. அமைதியாக இருக்கும், ஆனால் ஆட்சியில் இல்லாதபோது கூரை மீது எறியப்பட்ட பாஸ்பரஸ் போன்றது அதன் வீரியம் முழுமையாக வெளிப்படுவதாக இருக்கும் என்றார்
எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்ததும், அதற்கான காரணமும் காங்கிரஸின் நிலைப்பாடும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் எம்ஜிஆர் ஆட்சி அமைத்ததும், கலைஞர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதும் தேர்தல் குறித்து..மக்கள் மனம் இன்னும் பக்குவப்படவில்லை. பக்குவப்படும் வரை தொடர்ந்து பணியாற்றுவோம் பதவி நமக்கு முக்கியமில்லை என்று கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளது கட்டுரையாக உள்ளது.
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசமும், ரே கமிஷன் மற்றும் சர்க்காரியா கமிஷன் நிலைப்பாடும், தலைநகர் திருச்சி குறித்த எம்.ஜி.ஆர் கருத்தும், தமிழ் ஈழம் குறித்து தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் சம்பவங்களும், இந்திரா காந்தி படுகொலையும், படுத்துக்கொண்டே ஜெயித்த எம்ஜிஆரின் செல்வாக்கும்
உள்ளது.
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் முழுமையும், வன்னியர் சங்க போராட்டமும், எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடமும், ஜானகியின் அரசியல் பிரவேசமும், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவும், சிவாஜிகணேசனின் புதிய கட்சியும், மூப்பனாரின் எழுச்சியும், மீண்டும் ஆட்சியைப் பிடித்த கருணாநிதியின் வெற்றியும், வைகோவின் விலகல் ஏற்படுத்திய அதிர்வும், பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம் மற்றும் போர்ப்ஸ் கொடுத்த காங்கிரஸின் தோல்வியும், மண்டல் கமிஷனின் உருவாக்கமும், ராஜிவ் ஜெயலலிதா கூட்டணியும், ராஜீவ் படுகொலையும் அதன்பின் முதல்வரான ஜெயலலிதாவும், புயலைக் கிளப்பிய தடாசட்டமும் பிறகு அதற்குப் பின் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களும் இதில் முழுமையாக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது
#ரசித்தது
*இந்தி எதிர்ப்பு செத்த குதிரை அல்ல தலைப்பிட்டு தூங்குகிற குதிரை அந்த குதிரை எழுந்து கம்பீரமாக நிற்கிறது பாய்வதற்கு தயாராக இருக்கிறது என்று எச்சரித்தார் -கருணாநிதி
*திராவிடர் கழகத்தினர் அனுப்பும் சாம்பல் கோட்டைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பூந்தொட்டி களுக்கு உரமாக அமையுமே தவிர தமிழக அரசை ஒன்றும் செய்யாது என்று நெடுஞ்செழியன் கூறினார்
*கமிஷன்கள் என்பவை வேடிக்கையானவை கமிஷன் நடத்தும் விசாரணைகள் சினிமா படமாக எடுத்து திரையிட்டு காட்டினால மக்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக இருக்கும் இந்திரா காந்தி
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment