#30நாள் வாசிப்புப் போட்டி
நாள்-17
புத்தகம்-26
#
தலைமையில் நகைச்சுவை உணர்வு நாம் அனைவரும் அறிந்ததே இக்கட்டான நிலையிலும் கூட தன்னுடைய நகைச்சுவை உணர்வின் மூலம் நிறுத்தும் இடத்தை சூழலை இயல்பை மாற்றக்கூடிய நான் வல்லமை படைத்தவர் அவரின் நகைச்சுவை புத்தகம் முழுவதும் இருக்கிறது நான் ரசித்த சில நகைசுவைகள் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்
*ஒருமுறை கண்ணதாசன் நான் சிங்கப்பூர் போகிறேன் என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டார். கலைஞர்.. கண்ணதாசனை பார்த்து, நல்ல பெயர் வாங்கிட்டு வாங்க என்று பதில் சொல்லவும் கன்னதாசனே சிரித்து விட்டார்
*ஒரு பொதுக்கூட்டத்தில் இரவு நேரம் தாமதமாகி விட்டதால்.. கலைஞர் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். அதற்கு எனக்கு தலைக்கு மேலே பணி இருப்பதாலும் உங்க தலைக்கு மேலே பனி விழுந்து கொண்டிருப்பதாலும் இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன் என்றார் சாதுரியமாக.
*சட்டசபையில் சபாநாயகர் உரை எதிர்த்து உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும்பது உங்களையெல்லாம் உட்கார வைக்க முடியாது. ஆண்டவனால்தான் உட்கார வைக்க வேண்டும் என்றார் அப்போது கலைஞர் உறுப்பினர்களை அமர வைத்து விட்டு நானும் இதற்கு முன்பு ஆண்டவன்தான் என்று கூறினார்.
*செய்யாறு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறு தேர்தல் நாட்டிற்கு எதுவுமே இதுவரை செய்யாருக்கும் வாய்ப்பு தந்தால் செய்பவருக்கும் நடக்கும் போட்டி என்றார்
*சுற்றுப்பயணத்தில் பத்திரிக்கையாளரின் இன்றைய உங்கள் ப்ரோக்ராம் என்ன? என்று கேட்டதற்கு.. காலையில் அன்னை மதியம் மன்னை, இரவு சென்னை என்றார்
*நீங்கள் விரைவில் எங்கள் ஊருக்கு வரும்படி இருக்கும் என்றார்
வரும்படி (வருமானம்) இருக்கும் என்றால் வராமல் இருப்பேனா
*பூவா தலையா படத்தின் நூறாவது நாள் விழாவில் கண்ணதாசன் பேசும்போது கலைஞரின் தலையை பார்க்கும் போது வழுக்கை தெரிந்தது அது பூவா தலையா என்று கேட்டார்
அதற்கு கலைஞர் பூவாக இருந்தாலும் சரி தலையாக இருந்தாலும் சரி பூ என்று நினைத்து தலையை பறிக்காமல் சும்மா இருந்தால் சரி என்றார்
*தம்பி சிவக்குமார் எழுதிய இது ராஜபாட்டை அல்ல என்ற நூலை படித்து ஒரு வரி எழுதுங்கள் என்றார் இந்த நூலின் ஒவ்வொரு வரியும் ஐவரி என்று எழுதினேன்
#புத்தகம் தவிர்த்து நான் ரசித்த நகைச்சுவை
*அப்போது கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.. முக்கிய கோப்புகள் அனைத்தும் அதிகாரிகளால் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்கள்.கோப்பு ஒருவழியாக அவரின் மேசைக்கு வந்தது.. அந்தக் கோப்பில் இப்படி எழுதினாராம்..
"மெத்தை அளவுக்கு கோப்பு
நத்தை அளவுக்கு ஊர்கிறது"
*அரசியல் மாணவர்க்கு அத்தை மகள்.சுற்றிச் சுற்றி வரலாம்:தொட்டுவிடக்கூடாது
*டாக்டர்:மூச்சு விடுங்க
கலைஞர்:மூச்சு விடக்கூடாதுனு ஆஸ்பத்திரிக்கு வந்தேன்
*அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நர்சிடன் தண்ணீர் கேட்கிறார்.. அவர் தண்ணீர் தர மறுக்கிறார்.
உடனே உன் பெயரென்ன காவேரியா..நீ கர்நாடகாவா என்றாராம்.
*ஒரு நிகழ்ச்சியில் குமரி அனந்தனுக்கு பேட்ஜ் கொடுக்கப்பட்டது.ஆனால் ஊசி வழங்கப்பட வில்லை. யாராவது பின் தாங்க என குமரியார் கேட்க கலைஞர் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் குமரியார் இப்படி பின் வாங்கலாமா என்றார்
*செவ்வாயில் தண்ணீர் இருப்பது பற்றி?
செவ்வாயில் இருந்தால் உமிழ்நீர்.தண்ணீர் அல்ல
*ஆளும் கட்சி சூரிய மின்சாரத்திட்டம் செயல்படுத்த போகிறார்களாம்
இந்த ஆட்சிக்கும் சூரியன் தயவு தேவைப்படுகிறது
*சிக்கனத்துக்கும்,
கஞ்சத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்?
இரண்டு மீட்டர் துணியில் சட்டை தைத்து,மீதி துணியில் கைக்குட்டையோ தலையணை உரையோ தைப்பது சிக்கனம்.
தைத்தால் செலவாகும் என்பது கஞ்சத்தனம்
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment