Friday, 9 April 2021

ஜோதிபாச-ஆதனூர் சோழன்


#30நாள்_வாசிப்புப்போட்டி
id: #30D0044
நாள்-16
புத்தகம்-21



#ஜோதிபாச
-ஆதனூர் சோழன்


மக்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது.

 இவர்கள் நமக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். அவர்களுடைய கஷ்டங்களில் பங்கேற்க வேண்டும் அந்த கஷ்டங்களுக்கு காரணம் சொல்லவேண்டும் சுபிட்சமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

 அவர்களுடைய சுபிட்சத்தை பறித்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். பிறகு அந்த மாபாவிகளை எதிர்த்துப் போராட மக்களை அழைக்க வேண்டும் இந்த வார்த்தைகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் தோழர் ஜோதிபாசு.

பிறகு 996 ஆம் ஆண்டு பிரதமர் பதவி தன்னை தேடி வந்தபோது கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு பிரதமர் பதவியை நிராகரித்தவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்தவர்

வங்கத்தின் வரலாற்றிலிருந்து ஆரம்பித்து, இந்தியாவின் தலைநகராக விளங்கிய அதன் பெருமையை முதலில் புத்தகம் எடுத்துக்கூறுகிறது.படித்த குடும்பத்தில் பிறந்த பாசு..சட்ட படிப்புக்காக இலண்டன் செல்கிறார். அங்குதான் கம்யூனிச தலைவர்கள், பூபேஷ் குப்தா,கிருஷ்ண மேனன் நட்பு கிடைக்கிறது.தேர்வு முடிவு வரும் முன் வங்கத்திற்கு திரும்பி 1946ல் முதல் தேர்தலை சந்தித்து வெற்று பெற்றார்.


வங்கப்படுகொலை,இந்திய பிரிவினை,இந்திய விடுதலையும் வேதனையும்,கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதித்து கைது செய்ததும் கழுகுப்பார்வையில் ஆதனூர் சோழன் விளக்கியுள்ளார்.முதல் பொதுத்தேர்தலில் பாராநகர் தொகுதியில் போட்டியிட்டு 28 உறுப்பினர்களுடன் சட்டசபையில் நுழைந்தது.எதிர்க்கட்சித் தலைவராகவும்,கட்சியின் மாநிலச் செயலாளராகவும் சிறப்புற செயல்பட்டார்.கட்சி பிளவுற்ற போது மார்க்சிஸ்ட் கட்சியின் தள கர்த்தாக்களில் ஒருவரானார் பாசு. அதற்கு பின் நடைபெற்ற தேர்தலில் அஜய் முகர்ஜி முதல்வராகவும், ஜோதிபாசு துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பல்வேறு கொலை முயற்சிகளை தொடர்ந்து அவசர நிலைக் காலமான 1975ல் பல்வேறு சித்தரவதைக்கு ஆளாகிப் பின்  77 தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில் 39 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது.1977ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜூன் 21ல் முதல்வராய் பதவியேற்றார். 


இந்திரா படுகொலை செய்யப்பட்ட போது சீக்கியர்க்கு எதிரான கலவரத்தை வங்கத்தில் அடக்கியதுடன் நவம்பர் 6ல் பிரம்மாண்டமான ஒற்றுமைப் பேரணியை நடத்தியது வரலாற்று சம்பவம்.

1996ல் ஐக்கிய முன்னணி அரசின் சார்பில் பிரதமர் பதவி பாசுவுக்கு தேடிவந்தது.ஆனால் கட்சிக்குள் பிரகாஷ்காரத் ஏற்ககூடாதென்றும், ஹர்கிஷன் சிங் தலைமையில் ஏற்கலாம் என்று தெரிவித்தார். பெரும்பான்மை ஏற்ககூடாது என தெரிவித்ததால் பதவி ஏற்கவில்லை. ஆனால் அது ஒரு வரலாற்று பிழை என்கின்றனர் அரசியலாளர்கள்.

தனக்குப் பின் புத்ததேவ் பட்டாச்சார்யாவை உருவாக்கினார். தனது பதவியை ராஜினாமா செய்து கட்சிக்கும் அரசுக்கும் வழிகாட்டலானார்.வாழ்நாள் முழுக்க போராளியாக,அடித்தட்டு மக்களின் நண்பனாக விளங்கிய ஜோதிபாசு 2010 ஜனவரி 17ல் உயிர்நீத்தார்.

மகத்தான தலைவரைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் புத்தகம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment