#30நாள்_வாசிப்புப்போட்டி
ID: #30D0044
Day-20
book-31
#
எழுத்தாளர் தமிழ்செல்வன் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஐந்து பாகங்களாக இந்த புத்தகத்தில் வந்துள்ளன. இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், அஞ்சல் துறையில் பணியாற்றியவரும் 90களில் அறிவொளி இயக்கத்தின் மூலம் கிராமந்தோறும் வாசிப்பை கள போராளியாக கொண்டு சென்று செயல்பட்ட அனுபவமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்
நாடக ஆசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸின் பெயர் சொல்லும் பேரனாக, முருகபூபதி மற்றும் எழுத்தாளர் கோணங்கி ஆகியோருக்கு தமையனாகவும் இலக்கிய குடும்பமாய் வாழ்ந்து வருகிறார்.முதல் பாகத்தில் தன்னுடைய இளமை காலத்திலும் சிறு வயதில் நடந்த, பார்த்த, படித்த பல்வேறு விஷயங்களையும் கட்டுரைகளாக பதிவிட்டு இருக்கிறார்.
தான் படித்த புத்தகங்களையும் கதைகளையும் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் கட்டுரையில்.. கூரை ஓட்டின் மீது விழுந்த மழை நீராக அப்படியே ஓடிவிடுபவை எல்லா வார்த்தைகளும். சில வார்த்தைகள் மட்டுமே அப்படியே நிலத்தில் விழுந்து விதைக்கு உணவாகி செடியாகி மரமாகி விடுகிறது.க.வை பழனிச்சாமியின் நாவலான ஆதிரையில் இடம்பற்ற கதையையும்
அதில் நிகழ்ந்த சம்பவத்தை நமக்கு விளக்குகிறார்.
ஆண் பெண் பேதம் குறித்தும்,தான் பார்த்த 1962 தேர்தலில் காமராஜரை பார்த்தது குறித்தும் அங்கு நடைபெற்ற சம்பவங்களும், பள்ளியில் படிக்கும் போதும் சரி, சமூகத்தில் பெண் குறித்த ஆண்களின் பார்வையும் மற்றும் கிராமத்து சம்பவங்களையும் இணைத்து நம்மிடையே பகிர்கிறார்
#கலையும் இலக்கியமும்
சொலவடைகள் உடன் துவங்கும் கட்டுரைகளின் அடுத்து சுந்தர ராமசாமி குறித்து மிகவும் சிலாகித்து கூறுகிறார். தனிப்பட்ட முறையில் அவருடன் பேசிக் கொள்ளாத நெருக்கம் இருந்த போதிலும் தன்னுடைய இருளும் ஒளியும் கட்டுரை குறித்து அவர் எழுதியது எனக்கு சந்தோசத்தை தந்தது. செம்மலரில் தான் எழுதிய கதைகள் குறித்தும் ஜெயகாந்தன் தொழிற்சங்கம் குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரின் அரசியல் எனக்குப்பிடிக்கும் எனும் சிறு புத்தகம் இலட்சத்தை தாண்டி விற்பனையில் சாதனை படைத்ததாகும்.
#சமூகம் நிகழ்வுகள் எதிர்வினைகள்
பொதுவாக இவரின் நூல்கள் சாப்பாட்டுப் புராணம், எசப்பாட்டு போன்ற நூல்களைப் படித்தால் பெண்ணியம் குறித்து பேசும் ஆணாகவும், இழி செயல்களை கண்டிக்கும் எழுத்தாளராகவும் தெரியும். அதேபோல் இந்த பாகத்தில் உள்ள கட்டுரைகளில் அதேபோல் பல கட்டுரைகளை நமக்கு தந்துள்ளார். சாதியம் குறித்து தென் தமிழகத்தில் நடைபெற்ற சாதி படுகொலைகள் குறித்து ஆற்றிய இவரின் எதிர்வினைகள் வரலாற்று நிகழ்வுகளுடன் இத் தொகுப்பில் இருக்கிறது
#கற்போம் கற்பிப்போம்
கல்வி குறித்த இவரின் பார்வை முக்கியமானது. 90களில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய காலத்திலும் சரி, தற்போது தமிழ்நாடு அரசு பாடப் புத்தக குழுவிலும் இவருடைய பங்கு இருந்ததும் நாம் அறியமுடிகிறது. மக்கள் சந்திப்பு இயக்கம், வாசிப்பு இயக்கம், பல்வேறு பள்ளிகளில் கல்வி குறித்து ஆற்றிய கருத்துரைகள், மொழி குறித்த பார்வை, கதை சொல்லியாக தந்த அனுபவம், சமச்சீர் பாடப்புத்தகங்கள் குறித்த ஒரு பார்வை மற்றும் சமகால கவிஞர்கள் எழுத்தாளர்களில் தான் ரசித்த பதிவுகள் கட்டுரைகள் நூல்கள், மதிப்புரை என இத்தொகுப்பில் விதத்தில் நமக்கு தந்துள்ளார்.பள்ளி ஆசிரியருக்கான அறிவுரைகள், புத்தகங்கள் குறித்த வழிகாட்டுதலும் என்னென்ன படிக்க வேண்டும் என்றும் நமக்கு தந்துள்ளார்
#ரசித்தது
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்கு பிடிக்காததை உறுதியுடன் மறுத்து பழகிக்கொள்ளவண்டும்
*மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுப் போகும்போது தனது பாதுகாப்புக்காக கூர்கா படைப்பிரிவிலிருந்து தான் சில வீரர்களை தேர்வு செய்து கொண்டு போனாராம். விக்டோரியா மகாராணிக்கு நம்பிக்கையான படையாக இருந்தது கூர்கா படை
*ஒவ்வொரு நூற்றாண்டும் உலகத்துக்கு சில வார்த்தைகளை விட்டுச் செல்கிறது- எரிக் ஹாப்ஸ்பாம்.
*புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று நம்பிய கடைசி தலைமுறை நாங்கள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment