Tuesday, 20 April 2021

புரட்சிக்கதிர்கள்-வை.கோ

#30D0044
நாள்-21
புத்தகம்-36

#

அரசியல் தவிர்த்து வைகோவின் இன்னொரு முகம் வாசிப்பு. திருவாசக ஒலிநாடா வெளியீட்டு விழாவில் சிலாகித்து பேசிய வைகோவின் பேச்சை கேட்டு இளையராஜாவே அசந்து போனார். இப்புத்தகம் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் இருந்தபோது 6 புரட்சியாளர்களை அறிமுகம் செய்து எழுதிய கட்டுரைகள்.உல்க் வரலாற்றினை மற்றவர்க்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் பிரஞ்சுப் புரட்சி செங்கொடி புரட்சி என்று புரட்சி மலர்களால் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்திய புரட்சியாளர்களின் கட்டுரைகள் ஆகும்.

"எனது மனவலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும்" என்ற சேகுவேராவின் வார்த்தைகளுடன் துவங்கும் கட்டுரையில் அவரின் இளமைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை சுவைபட கூறியுள்ளார். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிள் பயணத்தில் 4000 மைல் பயணம் செய்யும்போது ஏழை பெண்ணின் அவல நிலையை பற்றி தன் குறிப்பில் கூறியது நம்மையும் நெஞ்சம் கனக்க வைக்கிறது

 கண்ணுக்குத் தென்படும் அடிவானமாக மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த மக்களது வாழ்வில் தான் உலகத் தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான அவலத்தை நம்மால் காணமுடியும். செத்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்களில் மன்னிப்பை இறைஞ்சும் தாழ்மையான வேண்டுகோள் தெரிகிறது. என்று உருக்கமாக குறிப்பிட்டார். கியூபாவில் ஏற்படுத்திய புரட்சியை தொடர்ந்து இறுதியில் பொலிவியாவில் சடலம் ஆகும்போது நிகழ்ந்த சம்பவத்தை நமக்கு ஓவியம் வரைந்தது போல் எழுத்தில் விளக்குகிறார்

இரண்டாவதாக இத்தாலி முசோலினியின் ராணுவப் பிடியில் சிக்கிய லிபிய நாட்டில் ஏற்பட்ட புரட்சியாளர் உமர்முக்தார் அவரின் செயல்பாட்டினையும் வீரத்தையும் அதிகம் அறிந்திராத வரலாற்றுத் தகவல்களை நமக்கு விளக்கிக் காட்டுகிறார்

நடுநிசி ஆயிற்று அனைவரும் அயர்ந்து தூங்கி வட்டனர். நானும் என் தந்தையும் அவரது படுக்கை அறைக்குச் சென்றோம். அண்ணனும் தம்பியும் கட்டித்தழுவிக் கொள்கிறார்கள். கண்கலங்கினார். விடைபெற்றுக் கொள்ளும் வேலை
 வீட்டின் பின்பக்கம் இறங்க பயன்படும் படிக்கட்டு வழியாக இறங்கி சென்றார். கையசைத்தார். இதுதான் நாங்கள் இறுதியாக நேதாஜியை கண்ட தருணம் என அவரின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ்  பகிர்ந்து கொள்வதுடன் போஸ் குறித்த கட்டுரையை துவங்குகிறார். காங்கிரஸில் இருந்த போதும் சரி, சுதந்திரத்துக்காக போராடிய போதும் சரி ,விடுதலை ஒன்றையே தன்னுடைய இறுதி மூச்சு வரை கொண்டிருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.அவரின் இறுதியாக நிகழ்ந்த விமான விபத்து மர்மம் வரை விளக்கியுள்ளார்.

அரசியலில் ஒன்று முக்கியம் நியாயமாக நடந்தால் தோள் கொடுங்கள் 
தவறாக நடந்தால் விலகிச் செல்லுங்கள் -லிங்கன்

ஆபிரகாம் லிங்கனின் பாதையே கரடுமுரடானது .தோல்விகள் ஒன்றையே அதிகம் சந்தித்த ஆபிரகாம் லிங்கன் தன் கல்வியின் மூலம் முன்னேறினார், நேர்மையின் மூலம் முன்னேறினார்.இளமை முதல் அவரின் ஈடுபாடும் தேடலும் அவரை முன்னேற்றியது. இளம் வயதிலேயே ஷேக்ஸ்பியரின் படைப்புகள், ஜூலியஸ் சீஸரின் நாடகத்தில் மார்க் அந்தோணி பேசுவதையும் அடிக்கடி பேசி பார்ப்பார்.

தேர்தல் களத்தில் வேட்பாளராக, வணிகராக, அஞ்சல் பணியாளராக, சட்டமன்றத்தில் நுழையும் போது ஆற்றிய கடமைகள், திருமண வாழ்க்கை, வழக்கறிஞராக, நாடாளுமன்றத்தில் லிங்கன் என்று பல்வேறு களத்தில் அவரின் பயணம் தொடர்ந்து இருக்கிறது. லிங்கனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சொற்கள் ஸ்டீபன் டக்லஸ் பேசும்போது "அமெரிக்க அரசாங்கம் வெள்ளை மனிதனுக்காக வெள்ளை மனிதனால் நிர்வகிக்கப்படும் வெள்ளை மனிதனுடைய அரசாங்கம்" என்று கூறினார். 

இந்தச் சொற்களை மாற்றி தான் 1863 நவம்பர் 19 கெட்டிஸ்பர்க் மைதானத்தில் "மக்களுடைய மக்களுக்காக மக்களால் அரசாங்கம்" என்று புகழ்பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார். அதன்பின் குடியரசுத் தலைவராக அவர் ஆற்றிய சேவைகள், அவர் தாடி வைப்பதற்கான காரணங்கள், கொலைமுயற்சி, உள்நாட்டுப் போரை திறம்பட நிர்வகித்தது என்று அவரின் அறியாத பக்கங்கள் நிறைய நமக்குத் தெரிய வருகிறது.

இத்தாலி வீரரான போராளி கரிபால்டி அவரின் குருவாகத் திகழும் மாஜினியின் தியாகமும், வீரமும், விடுதலைக்கான பல்வேறு அடக்குமுறைகளையும், போராட்டங்களையும், கப்பல் படை வீரர்களை தயார் செய்ததையும் கரிபால்டியின் தலைமுறை வாழ்க்கை என அவரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் துல்லியமாக கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இத்தாலி எங்கும் ஒலித்த பாடல் "எங்கள் குழந்தைகள் தலைவனின் பெயர் அறிவர்!
 கரிபால்டியின் இதயம் ஒவ்வொரு மார்பிலும் துடிக்கிறது..
 என்று வீதிகள் தோறும் அந்த வரிகள் ஒலித்தது.

போராட்டக்காரர்களுக்கு இயற்கை தரும் பரிசு மரணமே.கரிபால்டியின் மரணமும் பல்வேறு வீர சாகசங்கள் மற்றும் வெற்றிகளுக்கு பிறகே கிடைத்தது.

#ரசித்த வரிகள்

*ஒரு முடிவை எடுப்பதற்காக நான் போராடிய போது உயிர்த்தியாகம் செய்வது எவ்வளவு எளிதானது என்று உணர்ந்தேன்- சேகுவேரா

*மரணத்துக்கு அஞ்சிடோம் மண்ணின் மானம் காப்போம் -உமர் முக்தார்

*தோல்வி என்று எந்தக் கட்டத்திலும் ஒப்புக்கொள்ளாதவனே புரட்சிக்காரன் -நேதாஜி

*புரட்சியின் திறவுகோல் பட்டினிதான்

*இம்பால் போரில் தமிழர்கள் பெருமளவு கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் நினைவாக, நேதாஜி உணர்ச்சி மேலிட்டு "நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறந்து நன்றி கடன் தீர்ப்பேன்" என மனமுருகி சொன்னார்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment