Friday, 9 April 2021

கற்பதுவே..பகிர்வதுவே-26*மணி








வரலாற்றைக் கற்றுக்கொள்ளாதவர்கள் அதில் நடந்தேறியிருக்கும் தவறுகளை மீண்டும் ஒரு முறை செய்யவேண்டியிருக்கும்
-வின்ஸ்டன் சர்ச்சில்


#தமிழக அரசியல் வரலாறு முதல் பாகம்
-ஆர்.முத்துக்குமார்

கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டியல்யனின் கடல்புறா போல் தமிழக அரசியல் வரலாற்றை ஒரு விறுவிறுப்பான் பரபரப்பான கட்டுரைகளாக் தொடுத்து தந்திருக்கிறார் ஆர்.முத்துக்குமார்.
மக்களுக்கு புரிந்திடும் எளிய மொழியில், வரலாற்றின் அறியாத பக்கங்களை சுதந்திரம் முதல் எமர்ஜென்சி வரை  68 தலைப்பில் 
இப்புத்தகத்தில் தந்திருக்கிறார்.



# 1946இல் மாகாண தேர்தல் நடைபெற்றது இல்லை 165 இடங்களை காங்கிரஸ் முஸ்லிம் லீக் 28 இடங்களும்,கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று புதிய அமைச்சரவை அமைத்தனர்.
டி.பிரகாசம் முத்துரங்க முதலியாரை வென்று முதல்வரானார்.முதல்வர் பிரகாசம்,கட்சிக்கு காமராஜர் தலைவர்.நீரு பூத்த நெருப்பாய் இருந்து பிரச்சனை வர ஓமந்தூரார் வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தார். பின் சுதந்திரநாளில் அண்ணாவிற்கும் பெரியாருக்கும் கருத்து மோதல் வந்து அண்ணாவின் இன்பநாள் அறிக்கை திராவிடநாடு இதழில் வந்தது.

#ஓமந்தூரருக்குப் பின் அவர் விருப்பப்படி 7ஏப்ரல் 1949ல் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல்வரானார்.எதிரில் இந்தி சர்ச்சை, பெரியார் மணியம்மை திருமணம் போன்றவற்றால் அண்ணா,ஈ.வெ.கி சம்பத், நாவலர், மதியழகன்,என்.வி.நடராஜன், என திமுக வை துவங்கினர். கலைஞர் அப்போது பிரச்சார குழு உறுப்பினர்.

#அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தது. கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களில் வென்று இரண்டாம் இடம் பிடித்தாலும் காங்.ராஜாஜி தலைமையில் ஆட்சி.1952 ஜூன் 29ல் சலவைத்தொழிலாளர் மாநாட்டில் குலத்தொழில் செய்ய வலியுறுத்தியது சர்ச்சை ஏற்படுத்தியது.

# திமுக 3 போராட்டங்களை ஒரேமூச்சில் தொடங்கியது. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ராஜாஜி வீட்டுக்கு முன் சம்பத் தலைமையில் மறியல் போராட்டம். டால்மியாபுரம் கருணாநிதி தலைமையில் கல்லக்குடி  பெயர் மாற்ற போராட்டம்.நேருவுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம். மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் குலக்கல்வித் திட்டம் தீர்மானம் சட்டசபையில் தோல்வி அடைந்தது.

முதல்வர் பதவியிலிருந்து ராஜாஜி விலக விருப்பம் தெரிவிக்க பின் போட்டி வந்தது. அப்போது காமராஜருக்கு 93 வாக்குகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 வாக்கும் கிடைத்தது. காமராஜர் வெற்றி பெற்றவுடன் ராஜாஜியின் நேசத்துக்குரிய நபர்களாக கருதப்படும் சி.சுப்பிரமணியம் பக்தவச்சலம் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்.பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

#1957 தேர்தல்

திமுக வின் முதல் தேர்தல்.சுயேட்சை வேட்பாளர்களாக கருதியது தேர்தல் ஆணையம்.பெரியார் காங்கிரசுக்கு ஆதரவளித்தார்.மத்தியில் 151இடங்களை பெற்று காங் ஆட்சியை தக்க வைத்தது. பின் உள்ளாட்சி தேர்தலில் தொண்ணூறு இடங்களில் திமுக  சென்னை மாநகராட்சியில் போட்டியிட்டு 45 இடமும், காங் 36 இடமும் கிடைத்தன.இதிலிருந்து ஈ.வெ.கி சம்பத்துக்கும் கலைஞருக்கும் மோதல் உருவானது.இதுவே சம்பத்-அண்ணா மோதலானது.முடிவில் தமிழ்த்தேசிய கட்சி துவங்கினார் சம்பத்.

1962 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 139 இடங்களில் வெற்றி பெற்றது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 12 இடங்கள் குறைவு. காமராஜர் மீண்டும் முதல்வரானார். திமுக 50 இடங்களை கைப்பற்றியது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 35 தொகுதிகளை அதிகம். சொந்த தொகுதியான காஞ்சியில் போட்டியிட்ட அண்ணா தோல்வி அடைந்தார். அண்ணா உட்பட 14 பேர் தோல்வி அடைந்தனர். கலைஞர் வெற்றி பெற்றார்.

# 1963ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. வழக்கமாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெல்லும் என்ற முடிவை மாற்ற  திமுகவினர் எண்ணினர். அதேபோல் திமுகவின் ப.உ. சண்முகம் என்பவர் வெற்றி பெற்று காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் முடிவு காமராஜர் சிந்திக்க வைத்து, கே.பிளான் என்னும் திட்டத்தை கொண்டு வந்து கட்சியை வளர்க்க பதவி விலகுவதாக அறிவித்தார். எம்.பக்தவச்சலம் அடுத்தநாள் முதல்வரானார்.

#கம்யூனிஸ்ட் கட்சி பிளவு

#இந்தி எதிர்ப்பு போராட்டம்

*இந்தி எதிர்ப்பில் மாநில அளவிலான அமைப்புக்குழு அமைக்கப்பட்டு, நால்வர் குழு எனப்பட்டது.அவர்கள் 
"எல் கணேசன், விருதுநகர் சீனிவாசன், நாவளவன், துரைமுருகன்

1967ல் திமுக வெற்றி.பின் அண்ணாவின் மறைவிற்கு கலைஞர் தலைவரானதை விரிவாக தந்திருக்கிறார்.

#மதுவிலக்கு

#நெருக்கடி நிலை

#அதிமுக உருவான கதை

#எம்.ஜி.ஆரின் முதல் வெற்றி

#கச்சத்தீவு ஒப்பந்தம்

(இது குறித்து ஆர்.முத்துக்குமார் ஒரு புத்தகமே எழுதியுள்ளார்- கிழக்கு பதிப்பகம்)

#மிசா

#சர்க்காரியா கமிஷன்

#எமர்ஜென்சியை ஆதரித்தது அதிமுக வும், இந்திய கம்யூனிஸ்ட்டும் மட்டுமே உட்பட் பல தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன்.தமிழக அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் மிக எளிமையான,ஆழமான புத்தகம். ஒவ்வொரு தலைப்பிலும் ஆழமான கருத்துகள் அதிகம் உள்ளன

#ரசித்தது

*எலி வலை எலிகளுக்கே என ஏன் கல்கி கமென்ட் அடித்தார்?

*தாரைக் கொண்டு ஆந்திராவை உருவாக்க முடியும் என்று நம்பினால் ஐயோ பாவம்-ராஜாஜி

*குருவிக்கூட்டை குலைத்து விட்டோன்.இனி நம்மில் பலர் கடுமையாகக் கொட்டப்படுவோம்-நேரு

*எதிரிகளை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக் கொள்வது லாபகரமானது- காமராஜர்

*சிங்கத்தை குகையில் சந்திப்பது பெரிய விஷயமல்ல.அதன் பின் வெளியே வருவது சிங்கமா, ஆளா என்பதுதான் முக்கியம்!-அண்ணா

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment