Friday, 23 April 2021

சொலவடைகளும் சொன்னவர்களும்-ச.மாடசாமி

#30D0044
நாள்-29
புத்தகம்-48

#

ஒரு நாட்டின் அறிவுசார் சொத்தாகப் போற்றப்படுவது நாட்டுப்புற இலக்கியங்களே.புனைவோ ,மேலை நாட்டுச் சிந்தனைகளோ இல்லாமல் முழுக்க முழுக்க மண்சார்ந்த வார்த்தைகளும்,மக்களின் அனுபவங்களுமே சொல்லப்பட்டுள்ளன.காலம் காலமாக வாய் வழியாய் வரும் இலக்கியம்..அழகோ மெருகோ இல்லாமல் ஆயிரம் அர்த்தங்களுடன் பொருள் பொதிந்ததாய் மக்கள் மொழியில் இருக்கும்.

புத்தகத்தின் ஆசிரியர் சா மாடசாமி பழுத்த அனுபவவாதி. கிராம மக்களுடன் இணைந்து வாழ்ந்தவர். தமிழகத்தில் அறிவொளி இயக்கத்தை கொண்டுசென்ற முன்னத்தி ஏர்களில் ஒருவர்.
 எது சொலவடை என்னும் தலைப்பில் சொல்லும் நேரங்களை பொருத்தும், பணி இடங்களை பொறுத்தோ, ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தியும் பழமொழிகள்  என்று சொல்லுமளவுக்கு.. சொன்னவர்கள் யார் என்று பல்வேறு விஷயங்களையும், முதலில் விளக்கி விட்டுத்தான் சொலவடைகள் ஆரம்பிக்கிறார்.

தருணங்கள் என்ற தலைப்பில் நான் ரசித்த சொலவடைகள்

*கொட்டுறது கொஞ்ச நேரம் அல்லறது அதிக நேரம் 

*அடுத்து அடுத்து போனா 
அடுத்த வீடு பகை 

*சோத்துக்கு இளைச்சாலும் 
சொல்லுக்கு இளைக்கக்கூடாது

* எழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா 

(அவரவர் இறப்பு அவரவர்க்கு; பிறர் வந்து சிறிது நேரம் பங்கேற்கலாம். ஆனால் சுமக்க முடியாது என்பதை மரண பேச்சுக்களில் வழி சொலவடை தெரிவிக்கிறது)

*கிழவி செத்தது பாரமில்ல எழவு சொல்லி மாளல
(மரணத்தைவிட மரணத்தை ஒட்டிய சடங்குகள் பாரமாகி போனதை குறிப்பிடுகிறது)

*பெருமை ஒரு முறம்
 புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை

*அத்தான் செத்தான் மயிராச்சு கம்பளி மெத்தை நமக்காச்சு 

(தனக்கு என்ன லாபம் என எந்த நிகழ்விலும் கணக்கு போடும் மனதை சொல்கிறது)

*பெரிய வீடுன்னு பிச்சைக்கு போனானாம்!
 கரிய வழிச்சு மூஞ்சியில தேச்சாளாம்

*பெருமை ஒரு முறம் 
புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை

*நேத்து வந்த மவுசு 
உரசிப் பார்த்தால் தெரியும்

*எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு எட்டுப் பணியாரம் .முட்டி தேய சுட்டவளுக்கு  மூணு பணியாரம்

(உழைப்பவனும் சும்மா உட்கார்ந்து இருப்பவனும் பலன்களை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் நிலமும் முறைகேட்டை தமிழ் சொலவடைகள் விரிவாகப் பேசுகின்றன)

*குட்டி நாய் கத்த 
கெழ நாய்க்கு வந்துச்சாம் ஆபத்து 

(ஒருவர் கூச்சலிட்டு போக இன்னொருவர் அடிவாங்கும் நிகழ்வு எதார்த்தத்தில் இருப்பதை அறிய முடிகிறது.)

*உழைச்சுப் பிழைக்குறவன் ஒருகோடி
ஏச்சுப் பிழைக்குறவன் ஏழுகோடி

ஏட்டுக் கல்வியை மட்டுமே படித்தவர்களுக்கு இப்படிப்பட்ட சொலவடைகள் புதிய அனுபவத்தையும், புதிய அணுகு முறைகளையும் ,மக்களின் பல்வேறு தரப்பட்ட கோணங்களையும் இதில் விளக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தவும், யோசனை சொல்லும் விதத்திலும், பிறருக்கு ஆறுதல் தரவும், எச்சரிக்கை தரவும் இப்படிப்பட்ட சொலவடைகள் அன்றாடம் நாம் பயன்படுத்தும் போது அடுத்த தலைமுறைக்கும் இத்தனையும்  கொண்டு சென்று சேர்த்த பெருமை நமக்கு உண்டு. அதுவே இப்புத்தகம் நமக்கு உணர்த்தும் பாடமும் .

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment