#30D0044
நாள்-23
புத்தகம்-39
உலகின் அதிக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது/(எழுதப்பட்டது) பைபிளுக்கு பிறகு திருக்குறள் கூட அல்ல. திருக்குறளுக்கு எழுதிய உரைகள் தான். இப்புத்தகம் மற்றவர்களின் உரைகள் போல் பாடலுக்கான உரையாக மட்டுமில்லாமல், ஒவ்வொரு குறளிலும் தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து, வர்ணாசிரமத்தை ஆராய்ந்தும், இக்கால புழக்கத்திலுள்ள நடைமுறை யதார்த்த வாழ்க்கையை சொல்லியும் குரலில் உரையாய் நமக்கு பதிவு செய்திருக்கிறார் சுப.வீ.
உதாரணத்துக்கு கடவுள் வாழ்த்துப் பாடலில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனும் குறளுக்கு.. பகவன் என்பது பகவான் என்கிற வடசொல்லில் இருந்து வந்திருந்த தமிழ்ச் சொல்தான். ஆனால் பகவன் என்கிற சொல் வேறு பொருள் இருக்கிறது.பகவு என்ற சொல் தமிழ் வேரைக் கொண்டது. பகவு என்னும் சொல்லுக்கு தமிழில் கதிர் என்று பொருள். கதிர் என்றால் கதிரவன். பகலவன் கதிரவன் என்று குறளுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார்
வேண்டுதல் வேண்டாமை எனும் குறளில் புத்தரின் கருத்துக்களையும் நமக்கு பகிர்ந்துகொள்கிறார். அனைத்து துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமா வெறுப்பும் கூட காரணமே எனும் இன்னொரு பார்வையில் குறளை அணுகுகிறார்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் எனும் சொல்லுக்கு இன்னொரு சொல் ஐந்து அவித்தல். அடக்கல் என்றால் அது ஆமைபோல் அடக்கிக் கொள்வது. அவித்தல் என்றால் முழுவதும் அதனை உணர்வற்று போகிற நிலை. அது மனிதனால் ஏற்க முடியவில்லை.
வான் சிறப்பு அதிகாரத்தை குறிப்பிடும்போது மழையை போற்றுதல் நம்முடைய மரபு. ஏனெனில் நான் வசிப்பது வெப்பமான பூமி. எனவே தான் நாம் வரவேற்கும் போது அகம் குளிர முகம் மலர என்று வரவேற்கிறோம். ஆனால் ஆங்கிலேயர்கள் குளிரை வரவேற்பதில்லை. warm welcome என்கிறார்கள். அதாவது சூடான வருகை தருகிறார்கள் என சிறிய தகவல் கூட மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்
பற்றுக பற்றற்றான் எனும் குரலில் பற்றி என்று வருகிற ஒவ்வொரு இடத்திலும் அந்த பற்று என்ற சொல்லுக்கு பொருள் வேறுபடுகிறது பாடம் படித்தல், பாசம் என பல்வேறு விதமான பொருட்களை ஒரே சொல்லில் திரும்ப திரும்ப பயன்படுத்தியிருப்பது திருவள்ளுவரின் சிறப்பு
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் எனும் குறளில் நான் முன்னோர்களுக்கு செய்கிற கடன் என்பதே அவர்களுக்கு திதி கொடுப்பது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது இல்லை, முன்னோர்களுடைய கொள்கைகளை தொடர்ந்து எடுத்துச் செல்வதும், அவர்கள் காட்டிய வழியில் இருந்து வழுவாது நடப்பதும் தான் நாம் முன்னோர்களுக்கு செய்கிற கடன். என்று வஉசி உரையை இக்குறளுக்கு மேற்கோள் காட்டியிருக்கிறார்
அடக்கமுடைமை அதிகாரத்தைப் பற்றி சொல்லும்போது
மலையினும் மாணப் பெரிது என்று கூறுகிறார். மலை என்பது அசையாமல் இருப்பது. அசைய இயலாதது. ஆகவே அதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் மனிதர்கள் அசையும் இயல்புடையவர்கள்.. இன்றைக்கும் நாம் பார்க்கலாம் தங்களுடைய அடக்கமின்மையை அசைவுகளால் தான் பலர் வெளிப்படுத்துகிறார்கள். அமர்ந்திருக்கும்போது காலாட்டி கொண்டிருப்பார்கள். மன அடக்கம், புலனடக்கம் இன்மை வெளிப்படுவதாக உளவியலாளர்களின் கருத்து தெரிவிக்கிறார்கள். அடங்குவதற்கு பேரறிவு வேண்டும் என்றும், அடங்காமல் திரிவதற்கு அறிவு தேவையில்லை. அடக்கம் என்பது அறிவின் ஒரு பகுதி.. ஆகையினால் தான் அடக்கம் என்பது பெரிய உடமையாக வள்ளுவர் தெரிவித்ததாக புதிய கோணத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல என்னும் குறளில் சிற்றினம் என்ற சொல்லை நாம் காம உறவுகளில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் .ஆனால் அதனை அவர் காமத்துப்பாலில் வைக்காமல் அறத்துப்பால் வைப்பதற்கான காரணம் அறமற்ற வழிகளில் அடுத்தவன் பொருளை கவர்ந்து கொள்ள விரும்புவது தான் சிற்றின்பம். நமக்கு உரிய பொருளை பெறுவது பேரின்பம் என்று புதிய பொருளை நமக்குத் தருகிறார்.
#ரசித்தது
ஒன்றின் மீது நாம் வைக்கிற ஆசை நம்மை எப்படி அழைக்கழிக்குமோ, அதுபோல இன்னொன்றின் மீது வைக்கிற வெறுப்பும் நம்மை அலைக்கழிக்கும்.
*அறம்சார்ந்த பொறுப்பு என்பது தன்னை சரிப்படுத்துவது. அறம்சார்ந்த கோபம் தான் வாழும் சமூகத்தை சரிப்படுத்துவது
*இல்லற வாழ்க்கை என்பது நான்கு சுவர்களுக்குள் தொடங்குகிறது தவிர நான்கு சுவர்களுக்குள் முடிந்து போவதில்லை
*ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லல் அறங்கூறுதல். ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுதல் புறங்கூறுதல்.
*மனம் என்பது ஐம்பொறிகளின் வழியாக பல்வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டே இருக்கும். மனம் ஓரிடத்தில் நிற்பதில்லை. கண்வழி போகிறது செவிவழி போகிறது, நுகரும் நாசி வழிபோகிறது. இப்படி ஐம்பொறி வழியில் செல்லும் மனதை நிறுத்தலே தவம்.
மற்ற புத்தகங்களைப் போல் வெறுமனே திருக்குறளுக்கு மட்டும் உரை எழுதி செல்லாமல் மற்ற உரையாசிரியர்கள் பகிர்ந்த செய்தியையும் தன்னுடைய கருத்தையும் இதில் நமக்கு தருகிறார். அனைவரும் படிக்க வேண்டிய நல்ல திருக்குறள் புத்தகம்
தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment