#30 நாள் வாசிப்பு போட்டி
ID:30D0044
day:15
book-20
#நறுமணம்
-இமையம்
நறுமணம் சிறுகதையில் விருத்தாச்சலத்தில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு பொறியாளர் ஆனந்தனும் உதவியாளரும் காலை முதல் மாலை வரை அக்கிராமத்தில் சாலையை அளந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வசிக்கும் வயதான தம்பதியினர் அறிமுகமாகின்றனர்.சாலை விரிவாக்கம் செய்தால் தன் வீடும் இடிபடும் என்று தெரிந்து நடக்கும் உரையாடல் தான் கதை.நாகரிக வளர்ச்சியில் நெகிழ வைக்கும் ஒரு கதை.இறுதியில் "இந்தக் கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல” எனும் போது நம்மை கண்கலங்க வைக்கிறது
மரணப்படுக்கையில் கிடக்கும் சந்திரவதனம்.. கோயிலில் பாட்டுப்பாடும் பெண்.அந்தப் பாட்டினால் என்னென்ன சோகமும், சந்தோசமும் நிகழ்ந்தது என சொல்லும் கதை.
நீண்ட நாளுக்குப்பிறகு சந்திக்கும் இரு நண்பிகள்(ஆசிரியை மற்றும் ஊராட்சி மன்ற தலைவி) குறித்த கதை வீடும் கதவும். தங்கள் இல்வாழ்க்கை துக்கங்களை சுவாரஸ்யணாய் பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களே கதை.இரு பெண்களின் அகஉலகத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார்
மருத்துவமனைக்கு பேருந்தில் செல்லும் நடராஜனின் காதில் விழும் சுவாரஸ்யமான கதைகள் என்னென்ன என்பதை கதைக்குள் கதையாக விவரித்திருக்கிறார் இமையம்.
துபாய்க்காரன் பொண்டாட்டி சிறுகதை
துபாயிலிருந்து கணவன் ஊருக்கு வருவதாகச் சொல்கிறான.அப்படி அவன் திடீரென வருபவனல்ல. ஆனால் இம்முறை சென்னையிலிருக்கிறேன்.விடிந்தது
மாமியார்-மருமகள் சண்டை. சமாதானப்படுத்தும் மகன்.இந்த 3 பேரை வைத்துக்கொண்டு அழகான கதையை ஆழமாய் பின்னியிருக்கிறார் இமையம். லீலாவதியை மட்டுமல்ல,அந்தக் கட்டடத்தையும் அவன் ஒரு முறைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை எனப் படிக்கும் போது மனசு கனத்துதான் போகிறது.
ஒரு ப்யூனின் மனவலியை எடுத்துச்சொல்லும் ஐயா கதை நிச்சயம் நம் மனதை தட்டி எழுப்பும். கீழான வேலையில் இருப்போரை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இக்கதை சான்று.
*மனசிலிருந்த பயம் வியர்வையாக வலிந்தது
*நம் மதியைச் சமாதானம் செய்வதற்கான ஒரு சொல் கூட உருவாகவில்லை.
*வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளையையும், வாயிலிருந்து வந்த வார்த்யையையும் மாற்ற முடியுமா?
*வழி அவனுடைய கண்களில் இல்லை. மனதில் இருந்திருக்க வேண்டும்.
*விலங்குகளோட ஒண்ணா இருக்க முடிகிற போது ஏன் மனுசன் கூட இருக்க முடியல.
*தனியா இருக்கிறதுதான் சாவு
*அதிகாரத்துக்கு மனசு இல்ல.உசுரு இல்ல.கல்லு.அடுத்தவன் மண்டய ஒடைக்கிற கல்லு.
*அவமானமில்லாத அசிங்கமில்லாத வாழ்க்கை உலகத்தில எங்க இருக்கு.
No comments:
Post a Comment